Saturday, 20 January 2018

நில மாசுபாடு



நில மாசுபாடு

நில மாசுபாடு


நில மாசுபாடு என்பது நேரடியான அல்லது மறைமுகமான மனித செயல்பாடுகளால் புவியின் மேற்பரப்பான நிலம், அதில் உள்ள மண் ஆகியவற்றின் இயற்கை வளங்களை பாதிப்படையச் செய்யும் நிகழ்வே ஆகும்.
நகர்புற மற்றும் தொழில்துறை திட மற்றும் திரவக் கழிவுகளை ஏடாகூடமாகக் கொட்டுதல், மண்ணில் உள்ள கனிம வளங்களைச் சுரண்டுதல், விவசாயத்திற்கு தெளிக்கப்படும் பூச்சி கொல்லிகள், காடுகளை அழித்தல் போன்றவை நில மாசுபாடு ஏற்பட முக்கிய காரணங்களாகும்.
பெருகி வரும் நகர்புறமாதல், தொழிற்சாலைகள் அதிகரிப்பு மற்றும் நிலத்தின் இயற்கை வளங்களின் தேவை அதிகரித்தல் போன்றவற்றின் காரணமாக நில மாசுபாடு அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம்.
அதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி எல்லா நாடுகளும் யோசிக்கத் தொடங்கிவிட்டன. இன்னும் சில ஆண்டுகளில் இது தீர்க்க முடியாத பிரச்சினையாகி விடும். எனவே இது குறித்த விழிப்புணர்வு ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.
இனி இதன் காரணங்கள், இதன் விளைவுகள் மற்றும் இதற்கான தீர்வுகள் குறித்து காணலாம்.

Friday, 19 January 2018

மரபு நோய்கள்

நீரிழிவு நோயின் கூடாரமாகி வருகிறது நம் நாடு. 40, 50 வயதுகளில் தலைகாட்டத் தொடங்கிய டைப் -2 வகை நீரிழிவு நோய் இப்போது குழந்தைகளையும்கூடத் தாக்கத் தொடங்கியிருப்பது மிகப் பெரிய அதிர்ச்சி. குடும்பத்தில் ஒருவருக்காவது நீரிழிவு நோய் இருப்பது சாதாரணமாகி வருகிறது. இது மரபியல்ரீதியாக அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது. இதற்கு ஆங்கில மருத்துவம் மட்டுமே ஒரே தீர்வு என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால், இந்திய மருத்துவ முறையில் பல மருந்துகள் உள்ளன, புதிதாக வந்துகொண்டிருக்கின்றன.
காரணங்கள்
நீரிழிவு நோய்க்கு மதுமேகம், சர்க்கரை வியாதி, டயாபடிஸ் எனப் பல வழக்குப் பெயர்கள் உண்டு. உடல்பருமன், போதிய உடல் உழைப்பின்மை, மன அழுத்தம், மரபியல் எனப் பல காரணங்கள் இதற்கு முன்னிறுத்தப்பட்டாலும், முறையற்ற உணவு முறைதான் முதன்மைக் காரணம். மதுமேக நோய் உண்டாவதற்கு வேகாத உணவு, செரிக்காத உணவு, அதிக இனிப்பு சேர்ந்த உணவு, அதிக அளவு உணவு, கெட்டுப்போன இறைச்சி, மதுபானம் எனப் பல காரணங்களைப் பட்டியலிடுகிறது சித்த மருத்துவம். இந்தப் பட்டியலில் உள்ள அனைத்தும் துரித உணவின் மூலம் ஒரே நேரத்தில் நமக்குக் கிடைத்து, நீரிழிவு நோய் உண்டாக அதிக வாய்ப்பிருக்கிறது. இதற்கு இந்திய மருத்துவ முறையிலேயே பல்வேறு சிகிச்சைகள், மாத்திரைகள் உள்ளன.
‘BGR 34’ மாத்திரை
அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சிக்கான கவுன்சிலை (C.S.I.R.) சார்ந்த தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் (N.B.R.I.) மற்றும் மத்திய மூலிகைச் செடிகள் ஆராய்ச்சி நிறுவனம் (C.I.M.A.P.) இணைந்து `BGR 34’ என்ற நீரிழிவு நோய்க்கான மாத்திரையைச் சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளன. BGR என்பது Blood Glucose Regulator என்பதையும், 34 என்பது மாத்திரையில் உள்ள 34 வகையான முக்கிய வேதிப்பொருட்களையும் குறிக்கின்றன.
Berberine, Xanthopurin, Scopoletin, Pterostillbene, Palmatine, Isoquinoline போன்று இதில் உள்ள 34 வேதிப்பொருட்களும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. மரமஞ்சள், வேங்கை, சிறுகுறிஞ்சான், சீந்தில், மஞ்சிட்டி, வெந்தயம் ஆகிய ஆறு மூலிகைகளின் சூரணம் மற்றும் சத்துகள் `BGR 34’ மாத்திரையில் கலந்துள்ளன. இந்த மாத்திரை ஆயுர்வேத மருந்தாக, மருந்துக் கடைகளில் கிடைக்கிறது.

Thursday, 18 January 2018

வாழ்க்கை முறைநோய்

நீரிழிவு நோயாளியின் வாழ்க்கை முறை


நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டுள்ளது தெரிந்ததுமே அதற்கான சிகிச்சை என்ன என்பது தான் நம் எல்லோரின் கேள்வியாக இருக்கும்... ஆனால் இந்த நோயைப் பொருத்தவரை உண்மை என்னவெனில் சிகிச்சை என்பதை விட வாழ்க்கை முறை என்பதே பொருந்தும்... நம் உணவு,பழக்க வழக்கங்கள் இவைகளை சற்றே மாற்றி அமைப்பதே இந்த நோயின் அதி முக்கியமான சிகிச்சை.
நீரிழிவு நோய் ஆயுள் முழுவதும் தொடரும் நோய். இதை குணப்படுத்த இயலாது,ஆனால் கட்டுப்படுத்த முடியும். கொழுப்பு மற்றும் மாவுச் சத்துகள் குறைவான உணவுகளை உட்கொண்டு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக,அளவாக வைத்துக் கொள்வதும்,தெடர்ந்து மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப மருந்துகள் உட்கொள்வதும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மிகவும் உதவும்.
பருமனான நீரிழிவு நோயாளிகள் உடல் எடையை குறைப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை பெருமளவில் கட்டுப்படுத்த இயலும். உடற்பயிற்சியும் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்த மிகவும் உதவும்.
நீரிழிவு நோயாளிகள் வாரத்தில் 2-4 நாட்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது இன்சுலின் எதிர்ப்பை 24-72 மணி நேரங்கள் வரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். நீரிழிவு நோயாளிகள் சரியான உணவு வகைகளை உட்கொண்டால் மட்டும் போதாது,அவற்றை சரியான நேரத்தில் தவறாமல் உண்ண வேண்டும்.

Wednesday, 17 January 2018

தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு 2005

தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு 2005 என்பது தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமத்தால் 1975, 1988, 2000 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தேசிய அளவிலான கலைத்திட்டங்களுள் ஒன்றாகும். இக்கலைத்திட்ட வடிவமைப்பு இந்திய அளவில் பள்ளிக் கல்வியில் பாடத்திட்டங்கள் உருவாக்குவது,புத்தகங்கள் எழுதுவது மற்றும் கற்பித்தல் வழிமுறைகளை நெறிப்படுத்துகிறது[1] இக்கலைத்திட்டம் முந்தைய அரசுகளின் அறிக்கைகள், சுமையற்ற கற்றல் மற்றும் 1986 - 1992 ஆம் ஆண்டுகளின் தேசியக் கல்விக் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள்து[2]

தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு 2005 முக்கிய அம்சங்கள் தொகு

முக்கிய நோக்குகள் தொகு
பள்ளிக்கு வெளியில் கற்ற அனுபவ அறிவை பள்ளியில் கற்ற அறிவுடன் தொடர்புபடுத்துதல்.
குருட்டு மனப்பாடம் செய்வதைத் தவிர்த்துப் பொருள்புரிந்து கற்றுக்கொள்வதை உறுதிசெய்தல்.
பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்டும் தகவல் திரட்டுதல் மற்றும் படித்தறிதல்.
தேர்வு முறைகளை மேலும் எளிதாக்கியும் நெகிழ்வாக்கியும் வகுப்பறைக் கற்றலுடன் ஒருங்கிணைத்தல்.
குழந்தையின் ஒட்டுமொத்த ஆளுமைத்திறனை வளர்த்தல்.[3]

Tuesday, 16 January 2018

காசநோய்

நோய்
காசநோய் ஏற்படுவதற்கு முதன்மைக் காரணியாக உள்ள மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் தொற்றுபாக்டீரியாவின் அணுக்கற்றை நுண்வரைவிப் படம்
நோய் (வியாதி, பிணி) என்பதுஉயிரினங்களின் உடலிலோ,மனதிலோ ஏற்படும் அசாதாரண நிலைகளைக் குறிக்கும். இதனை நலமற்ற நிலை, சீரழிந்த நிலை எனலாம். நோய் மனித வாழ்வின் நிலையான துன்பங்களில் ஒன்று. நோய் பொதுவாக அறிகுறிகள் (signs) மற்றும் உணர்குறிகளுடன் (symptoms) தொடர்புடைய மருத்துவ நிலை எனலாம்[1]. நோய் ஏற்படும்போது, நோய்வாய்ப்படும் உயிரினம் சில அசெளகரியங்களை, சீரற்ற நிலையை அல்லது அசாதாரண நிலையை உணர்தல் உணர்குறி என்றும்,மருத்துவருக்குத் தெரியக்கூடிய அசாதாரண நிலைகள் அறிகுறிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
நோயானது உள்ளகக் காரணிகளாலும், வெளிக் காரணிகளாலும் தோற்றுவிக்கப்படலாம்.நோய்க்காரணிகளால் ஏற்படக்கூடியதொற்றுநோய்கள்வெளிக்காரணிகளால் ஏற்படும் நோய்களாகும். உடலின் செயற்பிறழ்வுகளால் ஏற்படும்தன்னெதிர்ப்பு நோய்கள்உள்ளகக்காரணிகளால் ஏற்படும் நோய்களாகும்.
வலியை உண்டாக்கும் நிலைகள், உடலின் செயற்பிறழ்வுகள், கடுந்துன்பம் ஏற்படுத்துபவை, சமூகப் பிரச்சனைகளை உண்டாக்குபவை, ஒருவருக்கு மரணத்தை விளைவிக்கக்கூடியவை அல்லது நோய்வாய்ப்பட்டவருடன் உள்ளத் தொடர்பால் பிறருக்கு மரணத்திற்கு இணையாக நிகழும் பிரச்சனைகள் என மனிதர்களில் நோய் என்பது விரிவானதொரு பொருளில் உபயோகப்படுத்தப்படுகிறது. இத்தகு விரிவானதொரு பொருளில் சிலநேரங்களில், பிற சூழல்கள் அல்லது நோக்கங்களுக்காகத் தனித்துவமாக வகைப்படுத்தக்கூடியவையாக உள்ள காயங்கள், உடல் ஊனங்கள், நலச் சீர்கேடுகள், நோய்க்கூட்டறிகுறிகள்,நோய்த்தொற்றுகள், தனிப்பட்ட நோய் உணர்குறிகள், பொது நிலையிலிருந்து விலகிய நடத்தைகள், மனித வடிவம் மற்றும் செயல்களில் உள்ள அசாதாரணமான வேறுபாடுகள் ஆகிய அனைத்தையும் நோய் என்றே குறிப்பிடுகின்றோம். சாதாரணமாக பிணிகள் உடலளவில் மட்டுமல்லாது உணர்வுபூர்வமாகவும் மனிதர்களைப் பாதிக்கின்றன. பலவிதமான வியாதிகளுடன் நோய்வாய்ப்பட்டு வாழ்வது வாழ்வைப் பற்றிய ஒருவரின் கண்ணோட்டத்தினை, மனோபாவத்தினை முற்றிலுமாக மாற்றியமைக்ககூடியதாகும்.

Monday, 15 January 2018

கல்வி உரிமைச் சட்டம்

                               கல்வி உரிமைச் சட்டம்
கல்வி உரிமைச் சட்டம்:  என்ன செய்யப் போகிறது
நாடு விடுதலையடைந்து 63 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் – 2009’( Right of Children to Free and Compulsory Education – Act – 2009) இவ்வாண்டு ஏப்ரல் 01, 2010 அமலுக்கு வந்திருக்கிறது.  இச்சட்டத்தின் உள்ளே செல்வதற்கு முன்பு நம் நாட்டின் கல்வி நிலையை கொஞ்சம் தொகுத்துக் கொள்வோம். இந்து மதம் பிராமணர் தவிர பிறர் கல்வி கற்பதை வேதங்கள் உள்ளிட்ட பிராமண சட்ட முறைகளைக் கொண்டு அறவே தடை செய்தது.  பவுத்த, சமண மதங்களின் எழுச்சி இந்திய வருணாஸ்ரம வரலாற்றில் முதல் புரட்சியாக அமைந்து பிறருக்கும் கல்வி கிடைக்க வாய்ப்பளித்தது.  வட இந்தியாவில் அசோகர், கனிஷ்கர், ஹர்ஷர் போன்ற ஒரு சில அரசர்களின் ஆதரவில் பவுத்தமும் சமணமும் செழித்தது கொஞ்சகாலந்தான்.  பின்னர் குப்தர்களின் ‘இருண்டகாலத்தில்’ மீண்டும் இந்து மதம் ‘புத்துயிர்ப்பு’ பெற்றது.
தமிழகத்தில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பவுத்த – சமண சமயங்கள் செல்வாக்கு பெற்றிருந்தது.  ‘பள்ளி’ என்ற சொல் கூட சமணத்தின் கொடைதான்.  தமிழர்கள் இன்றும் பெருமை பேசும் ராஜராஜன் போன்றோர் முன்னெடுத்தது வேதக்கல்வி தானே தவிர வேறில்லை.
காலனியாதிக்க காலத்தில் செயல்பட்ட கிருத்தவ சமயப் பரப்பூழியர்கள் மூலம் பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்டாலும் அடித்தட்டு மக்களுக்கு கல்வி எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.  இந்தியாவின் பெரு நகரங்களில் மட்டும் சில சுதேசி தனியார் நிறுவனங்கள் கல்விக் கூடங்களை நடத்தி வந்தன.
ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் அறியாமையைப் போக்கி பண்பாட்டை உயர்த்தவும், கல்வி போதிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்து 1813 ஆம் ஆண்டு சிறப்புச் சட்டம் மூலம் கல்விக்கு மானியமாக 10,000 பவுண்டுகளை வழங்கினர்.  இந்த மானியத்தைக் கொண்டு வைதீக பார்ப்பனர்கள் சமஸ்கிருத சாஸ்திரங்களை சொல்லிக் கொடுக்க முயன்றபோது ராஜாராம் மோகன்ராய் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், இவர்கள் அனைவரும் கல்வியில் வடிகட்டும் கொள்கையை(Filtration Theory) ஆதரித்தனர் என்பதும் உண்மை.

Sunday, 14 January 2018

கலைத்திட்டத்தின் கட்டமைப்பு

கலைத்திட்டத்தின் கட்டமைப்பு 

கலைத்திட்டம்  ஐந்து கூறுகளை உடையது.
  1. மாணவர் மற்றும் சமுதாய தேவைகள்.
  2.  விரும்பும் குறிக்கோள்கள் 
  3. பாடப்பொருள் தெரிவு 
  4. கற்றல்-கற்பித்தல் முறைகள் 
  5. மதிப்பீடு  செய்தல்