Monday, 1 January 2018

பொருள் இலக்கணம்

பொருள் இலக்கணம் – அகப்பொருள் பொருள் என்பது ஒழுக்கமுறை, அறவழியில் பொருளீட்டிப் பல்லாரோடு பகுத்துண்டு வாழும் வாழ்வியல் நெறிமுறைகளைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே போற்றிக் காத்தவர், தமிழர். வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தவர் தமிழரே! பொருளிலக்கணம் அகம், புறம் என இருவகைப்படும். அகப்பொருள் : அன்புடைய தலைவன் தலைவி பற்றிய ஒழுக்கத்தினைக் கூறுவது அகத்திணை எனப்படும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என அகத்திணைகள் எழுவகைப்படும். அவற்றுள் முதலைந்தும் அன்பின் ஐந்திணை என்று வழங்கப்படும். அகப்பொருளுக்குரிய பொருள்கள் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பன. முதற்பொருள் : அகவொழுக்கம் நிகழ்வதற்குக் காரணமான நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும். நிலம் ஐவகைப்படும். பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்.

No comments:

Post a Comment