Thursday, 30 November 2017

நந்திகலம்பகம்

நந்திக் கலம்பகத்தின் உறுப்புகள்
நண்பர்களே! நந்திக் கலம்பகம் என்ற நூலின் துணையுடன் கலம்பக இலக்கியத்தின் உறுப்புகள் சிலவற்றைக் காண்போமா?
4.3.1 புயம்

கலம்பக இலக்கியத்துள் இடம் பெறும் உறுப்புகளில் ஒன்று புயம் என்பது ஆகும். புயம் என்றால் தோள் என்று பொருள். நூலினுள் இடம் பெறும் தலைவனின் புயத்தின் அழகையும் ஆற்றலையும் புகழ்ந்து கூறுவதாக இந்த உறுப்பு அமைகின்றது. முத்துவீரியம் என்னும் பாட்டியல் நூல் புயம் என்ற உறுப்பை வாகு, வகுப்பு என்கின்றது. இன்னொரு பாட்டியல் நூல் ஆகிய பிரபந்த தீபிகை இந்த உறுப்பைப் புய வகுப்பு என்கின்றது.

நந்திக் கலம்பகத்தில் புயம் என்ற உறுப்பு தோள் வகுப்பு என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது. இந்த உறுப்பு அமையும் பாடல் இதோ தரப்படுகிறது. தோள் வகுப்பு என்பதற்குத் தோளின் பல சிறப்புகளை வகைப்படுத்திக் கூறுதல் என்று பொருள் கொள்ளலாம்.
மறமதம் கரிதிசை நிறுவின
     மணிநகை யவர்மனம் நகுவன
விறலர சர்கள்மனம் நெகிழ்வன
     விரைமலர் களிமுலை பொருவன
திறலுடை யனதொடை புகழ்வன
     திகழொளி யனபுகழ் ததைவன
நறுமல ரணியணி முடியன
     நயவர நினதிரு புயமதே
(நந்.கலம்பகம் - 11)


(மறம் = வலிமை; கரி = யானை; நிறுவன = நிற்கச் செய்தன; நகையவர் = பற்களை உடைய பெண்கள்; நெகிழ்வன = மலர்ச் செய்வன; விறல் = வெற்றி; விரை = மணம்; பொருவன = போர் செய்வன; தொடை = பாட்டு; ததைவன = நெருங்கும் தன்மை உடையன; நயவர = நன்மை பொருந்தியவனே!)
இனி, இந்தப் பாடலில் நந்திவர்மனின் தோளின் அழகும் வலிமையும் எவ்வாறு புகழப் படுகின்றன என்று பார்ப்போம்.




நந்திவர்மனின் தோள்கள் வலிமையும் மதமும் உடைய யானைகளை அந்த அந்தத் திசைகளில் நிற்கச் செய்யும் வல்லமை உடையன. முத்துகளைப் போன்ற பற்களை உடைய பெண்களின் மனத்தை மலரச் செய்வன. வெற்றியை உடைய அரசர்களின் மனத்தை அச்சம் கொள்ளச் செய்வன. மணம் நிறைந்த மாலையை அணிந்த பெண்களின் மார்புகளுடன் போராடுவன. பளபளப்பு உடையன. புலவர்களால் பாராட்டப் பெறுவன. ஒளி நிறைந்தன. அணிகள் அணிந்து உயர்ச்சி பெற்ற மேலிடம் உள்ளன என்று புகழப்படுகின்றன.

இந்தப் பாடலில் வரும் அடிகளைப் பாருங்கள். சிறு சிறு சொற்றொடர்களாக அமைந்து இன்பம் தருகின்றன. பெண்களின் பற்களுக்கு முத்துகள் உவமை ஆகக் கூறப்படுகின்றன.

இந்தப் பாடலில் நந்திவர்மனின் தோள்களின் ஆற்றல், வெற்றிச் சிறப்பு, அழகு, ஒளி, புகழ் என்பன கூறப்படுகின்றன. பெண்களுக்கு இன்பம் கொடுக்கும் தோள்கள். பகைவர்களுக்கு அச்சம் செய்யும் தோள்கள் என்று தோள்களின் மென்மையும் வலிமையும் புகழப்படுகின்றன. இவ்வாறு தோள்களின் பெருமைகளைக் கூறும் உறுப்பாகத் தோள் வகுப்பு என்ற உறுப்பு அமைகின்றது.

Tuesday, 28 November 2017

திருமுறைகள்

துணைப் பகுப்புகள்
இந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.


► அந்தாதிகள்‎ (25 பக்.)

► குறவஞ்சிகள்‎ (8 பக்.)

► சதகங்கள்‎ (3 பக்.)

► பள்ளு‎ (6 பக்.)
"சிற்றிலக்கிய வகைகள்" பகுப்பிலுள்ள கட்டுரைகள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 145 பக்கங்களில் பின்வரும் 145 பக்கங்களும் உள்ளன.

*
சிற்றிலக்கிய வகை

அகப்பொருட்கோவை
அங்கமாலை
அட்டமங்கலம்
அநுராகமாலை
அரசன் விருத்தம்
அரசாங்க மாலை
அலங்காரபஞ்சகம்
அனுராகமாலை

ஆடாமணி
ஆற்றுப்படை

இணைமணி மாலை
இணைமணிமாலை
இயன்மொழி வாழ்த்து
இரட்டைநாக பந்தம்
இரட்டைமணிமாலை
இருபா இருபது (சிற்றிலக்கிய வகை)
இலட்சுமி விலாசம்

உலா (இலக்கியம்)
உலாமடல்
உழத்திப்பாட்டு
உழிஞை மாலை
உழிஞைமாலை (பாட்டியல்)
உற்பவமாலை

ஊர் நேரிசை
ஊர் விருத்தம்
ஊர் வெண்பா
ஊரின்னிசை

எண்செய்யுள்

ஐந்திணைச் செய்யுள்

ஒருபா ஒருபது
ஒலியந்தாதி
ஒன்பான்மணிமாலை

கடிகை வெண்பா
கடைநிலை
கண்படைநிலை
கரந்தை மாலை
கலம்பக மாலை
கலம்பகம் (இலக்கியம்)
காஞ்சி மாலை
காஞ்சிமாலை (பாட்டியல்)
காப்புமாலை
குடை விருத்தம்
குலோதயமாலை
குழமகன் (பாட்டியல்)
குறத்திப்பாட்டு
குறம்
குறியறி சிந்து
கூடன்மாலை
கேசாதிபாதம்
கைக்கிளை (சிற்றிலக்கியம்)
கைக்கிளை இலக்கியம்
கையறுநிலை
கோல் விருத்தம்
கோவை (இலக்கியம்)

சடானனம்
சாதகம்
சிந்து (சிற்றிலக்கியம்)
சிலை விருத்தம்
சிறுகாப்பியம்
சின்னப்பூ
சீட்டுக்கவி
செருக்கள வஞ்சி
செருக்களவஞ்சி
செவியறிவுறூஉ

தசப்பிராதுற்பவம்
தசாங்கத்தயல்
தசாங்கப்பத்து
தடாக சிங்காரம்
தண்டகமாலை
தாண்டகம்
தாரகைமாலை
தானைமாலை
திருஎழுகூற்றிருக்கை
தும்பைமாலை (பாட்டியல்)
துயிலெடை நிலை
துனி விசித்திரம்
தூது (பாட்டியல்)
தெய்வக் கையுறை

நடுவெழுத்து அலங்காரம்
நயனப்பத்து
நவமணிமாலை
நாடு விருத்தம்
நாமமாலை
நாழிகை வெண்பா
நாழிகைவெண்பா
நான்மணிமாலை
நானாற்பது (பாட்டியல்)
நூற்றந்தாதி
நொச்சி மாலை
நொச்சிமாலை (பாட்டியல்)

பண்ணை விசித்திரம்
பதிகம் (சிற்றிலக்கியம்)
பதிற்றந்தாதி
பரணி (இலக்கியம்)
பரி விருத்தம்
பருவமாலை
பல்சந்தமாலை
பள்ளு
பன்மணிமாலை
பாதாதிகேசம்
பிள்ளைத்தமிழ்
புகழ்ச்சி மாலை
புகழ்ச்சிமாலை
புறநாட்டுச் செய்கை
புறநிலை
புறநிலைவாழ்த்து
பெயர் நேரிசை
பெயரின்னிசை
பெருமகிழ்ச்சிமாலை
பெருமங்கலம்
பொய்ம்மொழி அலங்காரம்
போர்க்கெழு வஞ்சி
போர்க்கெழுவஞ்சி

மங்கல வெள்ளை
மங்கலவள்ளை
மாலை (சிற்றிலக்கியம்)
முதுகாஞ்சி
மும்மணிக்கோவை
மும்மணிமாலை
முரண்வஞ்சி
முலைப்பத்து
மெய்க்கீர்த்தி வஞ்சி
மெய்க்கீர்த்திமாலை

யானை விருத்தம்

வசந்தமாலை
வஞ்சி மாலை
வண்ணம் (சிற்றிலக்கியம்)
வரலாற்று வஞ்சி
வருக்கக் கோவை
வருக்கக்கோவை
வருக்கமாலை
வளமடல்
வாகை மாலை
வாகைமாலை (பாட்டியல்)
வாதோரணமஞ்சரி
வாயுறைவாழ்த்து
வாள் விருத்தம்
விலாசம் (சிற்றிலக்கியம்)
விளக்குநிலை
வீரவெட்சிமாலை
வெட்சி மாலை
வெட்சிக்கரந்தை மஞ்சரி
வேல் விருத்தம்
வேனில் மாலை

Monday, 27 November 2017

சிற்றிலக்கியங்கள்

துணைப் பகுப்புகள்
இந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.


► அந்தாதிகள்‎ (25 பக்.)

► குறவஞ்சிகள்‎ (8 பக்.)

► சதகங்கள்‎ (3 பக்.)

► பள்ளு‎ (6 பக்.)
"சிற்றிலக்கிய வகைகள்" பகுப்பிலுள்ள கட்டுரைகள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 145 பக்கங்களில் பின்வரும் 145 பக்கங்களும் உள்ளன.

*
சிற்றிலக்கிய வகை

அகப்பொருட்கோவை
அங்கமாலை
அட்டமங்கலம்
அநுராகமாலை
அரசன் விருத்தம்
அரசாங்க மாலை
அலங்காரபஞ்சகம்
அனுராகமாலை

ஆடாமணி
ஆற்றுப்படை

இணைமணி மாலை
இணைமணிமாலை
இயன்மொழி வாழ்த்து
இரட்டைநாக பந்தம்
இரட்டைமணிமாலை
இருபா இருபது (சிற்றிலக்கிய வகை)
இலட்சுமி விலாசம்

உலா (இலக்கியம்)
உலாமடல்
உழத்திப்பாட்டு
உழிஞை மாலை
உழிஞைமாலை (பாட்டியல்)
உற்பவமாலை

ஊர் நேரிசை
ஊர் விருத்தம்
ஊர் வெண்பா
ஊரின்னிசை

எண்செய்யுள்

ஐந்திணைச் செய்யுள்

ஒருபா ஒருபது
ஒலியந்தாதி
ஒன்பான்மணிமாலை

கடிகை வெண்பா
கடைநிலை
கண்படைநிலை
கரந்தை மாலை
கலம்பக மாலை
கலம்பகம் (இலக்கியம்)
காஞ்சி மாலை
காஞ்சிமாலை (பாட்டியல்)
காப்புமாலை
குடை விருத்தம்
குலோதயமாலை
குழமகன் (பாட்டியல்)
குறத்திப்பாட்டு
குறம்
குறியறி சிந்து
கூடன்மாலை
கேசாதிபாதம்
கைக்கிளை (சிற்றிலக்கியம்)
கைக்கிளை இலக்கியம்
கையறுநிலை
கோல் விருத்தம்
கோவை (இலக்கியம்)

சடானனம்
சாதகம்
சிந்து (சிற்றிலக்கியம்)
சிலை விருத்தம்
சிறுகாப்பியம்
சின்னப்பூ
சீட்டுக்கவி
செருக்கள வஞ்சி
செருக்களவஞ்சி
செவியறிவுறூஉ

தசப்பிராதுற்பவம்
தசாங்கத்தயல்
தசாங்கப்பத்து
தடாக சிங்காரம்
தண்டகமாலை
தாண்டகம்
தாரகைமாலை
தானைமாலை
திருஎழுகூற்றிருக்கை
தும்பைமாலை (பாட்டியல்)
துயிலெடை நிலை
துனி விசித்திரம்
தூது (பாட்டியல்)
தெய்வக் கையுறை

நடுவெழுத்து அலங்காரம்
நயனப்பத்து
நவமணிமாலை
நாடு விருத்தம்
நாமமாலை
நாழிகை வெண்பா
நாழிகைவெண்பா
நான்மணிமாலை
நானாற்பது (பாட்டியல்)
நூற்றந்தாதி
நொச்சி மாலை
நொச்சிமாலை (பாட்டியல்)

பண்ணை விசித்திரம்
பதிகம் (சிற்றிலக்கியம்)
பதிற்றந்தாதி
பரணி (இலக்கியம்)
பரி விருத்தம்
பருவமாலை
பல்சந்தமாலை
பள்ளு
பன்மணிமாலை
பாதாதிகேசம்
பிள்ளைத்தமிழ்
புகழ்ச்சி மாலை
புகழ்ச்சிமாலை
புறநாட்டுச் செய்கை
புறநிலை
புறநிலைவாழ்த்து
பெயர் நேரிசை
பெயரின்னிசை
பெருமகிழ்ச்சிமாலை
பெருமங்கலம்
பொய்ம்மொழி அலங்காரம்
போர்க்கெழு வஞ்சி
போர்க்கெழுவஞ்சி

மங்கல வெள்ளை
மங்கலவள்ளை
மாலை (சிற்றிலக்கியம்)
முதுகாஞ்சி
மும்மணிக்கோவை
மும்மணிமாலை
முரண்வஞ்சி
முலைப்பத்து
மெய்க்கீர்த்தி வஞ்சி
மெய்க்கீர்த்திமாலை

யானை விருத்தம்

வசந்தமாலை
வஞ்சி மாலை
வண்ணம் (சிற்றிலக்கியம்)
வரலாற்று வஞ்சி
வருக்கக் கோவை
வருக்கக்கோவை
வருக்கமாலை
வளமடல்
வாகை மாலை
வாகைமாலை (பாட்டியல்)
வாதோரணமஞ்சரி
வாயுறைவாழ்த்து
வாள் விருத்தம்
விலாசம் (சிற்றிலக்கியம்)
விளக்குநிலை
வீரவெட்சிமாலை
வெட்சி மாலை
வெட்சிக்கரந்தை மஞ்சரி
வேல் விருத்தம்
வேனில் மாலை

Sunday, 26 November 2017

தொல்காப்பியம்

தொல்காப்பியம் (ஆங்கிலம்: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.[1] பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.

தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின.

தொல்காப்பியர் காலம் தொகு

தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்துள்ள புலவர் பனம்பாரனார் தொல்காப்பியர் காலத்தவர். அவர் தம் பாயிர உரையில் 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்று குறிப்பிடுகிறார். ஐந்திரம் என்பது சமற்கிருத இலக்கணநூல். இது பாணினி எழுதிய வடமொழி இலக்கண நூலுக்குக் காலத்தால் முற்பட்டது. தொல்காப்பியர் காலத்தில் பாணினியம் தோன்றவில்லை. எனவே தொல்காப்பியர் பாணினிக்கு முந்திய நூலான ஐந்திரம் என்னும் நூலையும் அறிந்திருந்தார். தமிழில் இருந்த 'முந்துநூல்'(அகத்தியம்) கண்டிருந்தார். எனவே தொல்காப்பியர் பாணினியின் காலமாகச் சொல்லப்படும் கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்பது தெளிவு.

ஐந்திரம், தொல்காப்பியம் ஆகிய நூல்களைப் பற்றிப் பர்னல் என்பவர் ஒப்பிட்டு ஆராய்ந்தார். இந்திரன் செய்தது ஐந்திரம் என்றனர்.[சான்று தேவை] இந்த இந்திரன் சமணமதத்தைத் தோற்றுவித்த இந்திரன் என இவர் கொண்டார்.[சான்று தேவை] விளைவு, சமணர் காலத்துக்குப் பிற்பட்டவர் தொல்காப்பியர் எனக் காட்டலானார். உண்மையில் ஐந்திரம் என்னும் நூல் ஐந்திரன் என்பவரால் இயற்றப்பட்டது என்பதே பொருத்தமானது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது பர்னலின் விளக்கம் தொல்காப்பியர் காலத்தைக் கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முன்னதாக்கிவிடும். தோற்றம் என்ற தலைப்பில் சான்றுடன் கூடிய தொல்காப்பியர் காலம் இணைக்கப்பட்டுள்ளது.

செம்மொழி தமிழாய்வு நடு நிறுவனம் தொல்காப்பியர் ஆண்டினை கி.மு 711 என்று பொருத்தியது.

தொல்காப்பியம் - பெயர் விளக்கம் தொகு


தொல்காப்பியம் எழுதப்பட்ட ஓலைச்சுவடி
தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம், தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் என்னும் இருவேறு கருத்துக்கள் அறிஞர்களிடையே நிலவிவருகின்றன.

தொன்மை + காப்பியம் = தொல்காப்பியம்.

மிகவும் தொன்மை(பழமை)யான காப்பிய நூல் என்பதாலும் இது "தொல்காப்பியம்" என்றழைக்கப்படுகிறது.

தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் தொகு
தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதிய இளம்பூரணர், தொல்காப்பியர் கூறும் ஆகுபெயர்களில் ஒன்றான 'வினைமுதல் உரைக்கும் கிளவி என்பதற்குத் 'தொல்காப்பியம்' என்னும் எடுத்துக்காட்டினைத் தந்துள்ளார். (2-3-31) இது தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் என்னும் கருத்தை வலியுறுத்துகிறது.

அகத்தியர் செய்தது அகத்தியம். பன்னிருவர் செய்தது பன்னிரு படலம்.ஐந்திரன் செய்தது ஐந்திரம். காக்கை பாடினியார் செய்தது காக்கைபாடினியம். பல்காப்பியனார் செய்தது பல்காப்பியம். திருமூலர் செய்தது திருமூலம். இப்படித் தொல்காப்பியத்துக்கு முந்திய இலக்கண நூலும், தொல்காப்பியத்தை முதல்-நூலாகக் கொண்ட தமிழின் பழமையான இலக்கண நூல்களில் பலவும், பிறவும் ஆசிரியராலேயே பெயர் பெற்றுள்ளன. இந்த வகையில் தொல்காப்பியர் செய்தது தொல்காப்பிம் எனக் கொள்வதே முறைமை.

கபிலர், தொல்கபிலர், பரணர், வன்பரணர் என வேறுபடுத்தப்படும் புலவர்களை நாம் அறிவோம். அதுபோலக் காப்பியனார் என்னும் பெயரில் தொல்காப்பியனார், பல்காப்பியனார், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்கள் இருந்துவந்ததை வரலாறு காட்டுகிறது.

தொல்காப்பியப் பாயிரம் “புலம் தொகுத்தோன் … ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமையோன்” என்று கூறுகிறது. இதில் தொல்காப்பியன் புலம்(=இலக்கணம்) தொகுத்தான் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இவற்றை விடுத்துத் தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் எனக் கூறுவோர் வரலாற்றை எண்ணிப்பார்க்க வேண்டும்.

தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் தொகு
இயம்புவது "இயம்" ஆகும். இயத்துக்குக் காப்புத் (காவல்) தருவது "காப்பியம்". தொன்மையான காப்பியம் ஆதலால் இது தொல்காப்பியம் ஆனது.[2]

தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் எனப்பட்டார். நன்னூல் செய்த பவணந்தி முனிவரை நாம் நன்னூலார் என வழங்குவது போன்றதே இது.

தோற்றம் தொகு

தொல்காப்பியப் பாயிரம் இவரை: "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறைந்த படிமையோன்" என்று குறிப்பிடுகிறது. தொல்காப்பியர் 'புலம்' தொகுத்தார் என்றும் தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார் குறிப்பிடுகிறார். புலம் என்றும் புலன் என்றும் நாம் அறிவுக்கு அடிப்படையாக அமைந்துள்ள நிலைகளங்களைக் குறிப்பிடுகிறோம். அது போல மொழி

Saturday, 25 November 2017

திருவள்ளுவமாலை

திருவள்ளுவமாலை
திருவள்ளுவ மாலை எனும் நூல் திருக்குறளின் பெருமைகளையும், திருவள்ளுவரின் பெருமைகளையும் புகழ்ந்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். ஒருநூலுக்கோ, நூலாசிரியனுக்கோ இப்படி எல்லாப் புலவர்களும் வரிசை கட்டிப் புகழாரம் தொடுத்தளித்தது, திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் மட்டுமே கிடைத்த முதற் சிறப்பு. திருவள்ளுவமாலையில் ஐம்பத்தைந்து புலவர்களின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இடைக்காடர், ஔவையார் இருவரும் குறட்பாவிலும், ஏனைய ஐம்பத்து மூவரும் வெண்பாக்களாலும், வள்ளுவரையும் திருக்குறளையும் புகழ்ந்த பாமாலைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.[1]

காலம் தொகு

இதில் உள்ள பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் சார்த்தப்பட்டவை. இந்தத் தொகுப்புநூல் உருவான காலம் கி. பி. 11 ஆம் நூற்றாண்டு.

சான்றுகள்
சங்கப் புலவர்களும் சம காலத்தவர் அல்லர்.
இதில் உள்ள புலவர் பாரதம் பாடிய பெருந்தேவனார், 9ஆம் சூற்றாண்டில் வாழ்ந்தவர்.
புலவர் எண்ணிக்கையில் குழப்பம்.
ஒருவர் பாடிப் பிறர்மேல் சாற்றிய நூல்கள் (திருமூலர் ஞானம், திருவள்ளுவர் ஞானம்)
பிற்காலப் புகழாரம்
இவை தவிர்த்துக் கல்லாடனார், சிவப்பிரகாசர், பாரதியார், பேராசிரியர் மனோன்மணீயம் பெ.சுந்தரனார், கவிமணி, பாரதிதாசன் போன்ற இடைக்கால மற்றும் பிற்காலப் புலவர்களும் திருக்குறளைப் புகழ்ந்து பாடல்கள் இயற்றி உள்ளனர். அவை திருவள்ளுவ மாலையில் இடம் பெறா.

திருவள்ளுவ மாலையிலுள்ள பாடல்கள் தொகு

கற்பனைப் படைப்புகளின் பாடல்கள் தொகு
1 அசரீரி \ சங்கப்பலகையில் திருவள்ளுவரோடு உருத்திரசன்மன் புலவரும் வீற்றிருக்கலாம்.
2 நாமகள் \ முன்பு நான்கு வேதங்களைப் பிரமன் வாயிலிருந்து சொன்னேன். அடுத்து பாரதம் சொன்னேன். இப்போது திருவள்ளுவர் வாயிலிருந்து திருக்குறள் சொல்கிறேன்.
3 இறையனார் \ திருக்குறள் வாடாத கற்பக மலர் போன்றது.

புலவர் பாடல்கள் தொகு
திருக்குறளுக்குப் பெருமை சேர்க்க விரும்பிய ஒரு சிறந்த புலவர் சங்க காலப் புலவர்கள் சிலரது பெயரில் பாடல்கள் எழுதித் தொகுத்துத் தந்த நூலே திருவள்ளுவ மாலை எனபதை ஊன்றெண்ணிப் பார்த்துப் படிப்போர் எளிதாக உணர்ந்துகொள்ள முடியும்.
இவர்கள் திருக்குறளைப் பெரிதும் மதித்துப் போற்றிச் சூட்டியுள்ள புகழாரங்களைத் திருக்குறளுக்குப் புகழாரம் என்னும் பகுதியில் காணலாம்.

திருக்குறளைப் பகுத்துக் காட்டும் பாடல்கள் தொகு
16 நத்தத்தனார் \ 'ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும் பாயிரத்தினோடு பயின்றபின்' வேறு நூலைக் கேட்க வேண்டியதில்லை என்னும்போது பாயிரம் பாடல் 1330-ல் அடங்கவில்லை.
இதன் விரிவை திருக்குறள் பகுப்புக்கள் என்னும் பகுதியில் காணலாம்.

Thursday, 16 November 2017

தேசயவிநாயகம்பிள்ளை

தேசிக விநாயகம் பிள்ளை
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஜூலை 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.

கவிமணி .சி . தேசிக விநாயகம் பிள்ளை
பிறப்பு ஜூலை 27, 1876
தேரூர், கன்னியாக்குமரி மாவட்டம்
இறப்பு செப்டம்பர் 26, 1954 (அகவை 78)
அறியப்படுவது கவிஞர்
பட்டம் கவிமணி
பெற்றோர் சிவதாணுப்பிள்ளை, ஆதிலட்சுமி
வாழ்க்கைத்
துணை உமையம்மை
வாழ்க்கைக் குறிப்பு தொகு

சிவதாணுப்பிள்ளை -ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாக தேசிக விநாயகம் பிறந்தார். இரண்டு பெண்களுக்கு பின் பிறந்த ஆண் மகவுக்கு தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை வைத்தார் சிவதாணுப்பிள்ளை. ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எம். ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். உமையம்மை எனும் பெண்ணை 1901 இல் மணம் முடித்தார். நாஞ்சில் நாட்டார் தன் மனைவியை குட்டி, பிள்ளாய் என்று அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன் மனைவியை தாயி என்று மரியாதையுடன் அழைப்பார். குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன் சிவதாணுவை தனது மகன் போல வளர்த்தார்.[1]. [2].

ஆசிரியர் பணி தொகு

நாகர்கோவிலிலுள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி போன்றவற்றில் ஆசிரியராக 36 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

Wednesday, 15 November 2017

இனியவை நாற்பது

இனியவை நாற்பது
இனியவை நாற்பது
ஆசிரியர் பூதஞ்சேந்தனார்
    புத்தகத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்!

இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள 'நாற்பது' எனமுடியும் பெயர்கொண்ட நான்கு நூல்களில் இரண்டாவதாகும். இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன் ஆவார். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு. இவர் சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் சர்வ சமய நோக்குடையவராயிருந்திருக்க வேண்டும். இவர் பிரமனைத் துதித்திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர் என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத்தாளுவதால் இவர் அந்நூலாசிரியருக்கும் பிந்தியவர் எனலாம். அதனால் இவரது காலம் கி.பி.725-750 எனப்பட்டது.

இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 செய்யுட்களைக் கொண்டது. இவற்றுள், 'ஊரும் கலிமா' எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) பஃறொடை வெண்பா. ஏனைய அனைத்தும் இன்னிசை வெண் பாவினால் ஆக்கப் பட்டுள்ளது. இந்நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள் நான்கே நான்கு தான் உள்ளன(1, 3, 4, 5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன; இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனிக்கத் தக்கது.

வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து 'இனிது' என்ற தலைப்பிட்டு அமைத்திருப்பதால் இஃது 'இனியவை நாற்பது' எனப்பட்டது. இதனை 'இனிது நாற்பது', 'இனியது நாற்பது', 'இனிய நாற்பது' என்றும் உரைப்பர்.

Monday, 13 November 2017

உணவே மருந்து

உணவே மருந்து தொகு

உணவே மருந்து மருந்தே உணவு என்று வாழ்ந்தவர்கள் தமிழர்கள். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தை வாளோடு முன் தோன்றிய மூத்த குடிமக்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில் இருந்து தான் நாகரீகமாக இருந்தாலும் அல்லது உணவு கலாச்சாரமாக இருந்தாலும் உலகம் முழுக்க எடுத்துச் சென்றதற்கான மிகப்பெரிய ஆதாரங்கள் உள்ளது.

சங்க கால இலக்கியங்கள் தொகு
எட்டுத்தொகை,பத்துப்பாட்டு,கலித்தொகை என சங்ககால இலக்கியங்களில்[1] உணவு சார்ந்த மிகப்பெரிய ஆய்வு தமிழர்களுக்கிடையே இருந்தது. தமிழர்கள் உணவே மருந்து ,மருந்தே உணவு என்ற கொள்கையில் முழுமையாக வாழ்ந்தார்கள்.தமிழர்கள் பழங்காலத்தில் பயன்படுத்திய உணவுகள் என்று பார்க்கும் பொழுது சிறுதானியங்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள். அதில் பிரதானமானது வரகு,திணை,குதிரைவாலி,சாமை.இதனைத் தொடர்ந்து சாப்பிட்ட தமிழர்களுக்கு எந்த நோய் நொடியும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமான சுழலில் வாழ்ந்துள்ளார்கள்.

அறிஞர்கள் கருத்து தொகு
பல்வேறு மூலிகைகள்,காய்கனிகள்,கீரைகள்,அவற்றின் தன்மைகள், பயன்கள் ஆகியவற்றை அனைவரும் புரிந்து அதற்கேற்றாற் போல் அன்றாட உணவை உட்கொண்டால் நோய் என்பதற்க்கே இடமில்லை.உணவே பிரம்மன்,உணவிலிருந்தே எல்லா உயிரினங்களுக்கும் உணவாக மாறுவதே இயற்கையின் இயல்பு என உபநிடதங்கள் கூறுவதை வள்ளுவரும்[2],ஏழைகளிடத்தில் இறைவன் உணவின் ரூபமாகத் தோன்றுகிறார் என காந்தியடிகள் போன்றோரும் கூறியது உணவில்லையேல் வாழ்கையே அழியும் என்பதைத் தான் காட்டியுள்ளது.

Sunday, 12 November 2017

யாப்பு

யாப்பு இலக்கண அறிமுகம்

இலக்கியங்களை இயற்றும் போது இரண்டு வகையான ஊடகங்களில் இயற்றுவார்கள். அவற்றில் ஒன்று செய்யுள், மற்றது உரைநடை. பழைய காலத்தில் தமிழ் இலக்கியங்கள் யாவும் செய்யுளிலேயே இயற்றப்பட்டன. செய்யுளில் இயற்றப்பட்ட இலக்கியங்களுக்கும் இலக்கணங்களுக்கும் விளக்கம் கூறுவதற்கே உரைநடை பயன்படுத்தப்பட்டது. இலக்கியம் இயற்றப்பட்ட செய்யுள்களின் அமைப்புப் பற்றிப் படிப்பதே யாப்பு இலக்கணம் ஆகும்.

செய்யுள்களில் பல வகைகள் உள்ளன. செய்யுளின் முக்கியக் கூறாக இருப்பது ஓசை. வெவ்வேறு விதமான ஓசைகளை அடிப்படையாகக் கொண்டு பலவிதமான செய்யுள்கள் உருவாகியுள்ளன. பழைய காலத்தில் இருந்த முக்கியமான செய்யுள் வகைகள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகியவை ஆகும். இவற்றுடன் கலித்துறையும் பழைய காலத்தில் சிறப்பாக விளங்கியது. பக்தி இலக்கியமும் காப்பியங்களும் தோன்றிய காலத்தில் விருத்தம் என்ற செய்யுள் வகை பரவியது. பிற்காலத்தில் சிந்து, கும்மி முதலிய இசைப்பாடல் யாப்புகளிலும் செய்யுள்கள் இயற்றப்பட்டன. யாப்பு இலக்கணத்தில் செய்யுள் பற்றியும் செய்யுளின் உறுப்புகள் பற்றியும் கூறப்படும். அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை யாப்பு இலக்கணத்தின் உறுப்புகள் ஆகும். இந்த உறுப்புகளைப் பற்றியும் ஆசிரியப்பா, வெண்பா, வஞ்சிப்பா, கலிப்பா ஆகிய பாக்களையும் அவற்றின் வகைகளையும் பற்றியும் படிப்பதே யாப்பு இலக்கணம் ஆகும்.

Friday, 10 November 2017

கடற்பயணம்

கடற்பயணம் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்



தமிழ்நாட்டு வாணிக வரலாறு மிகவும் தொன்மை வாய்ந்தது.
உள்நாட்டு வாணிகத்தைவிட அயல்நாட்டு வாணிகத்திலேயே வருவாய் மிகுதி.
அயல்நாட்டு வாணிகத்திலேயே தரைவழியாகச் செய்யும் வாணிகத்தைவிட, நீர் வழியாகச் செய்யும் வாணிகம் பெரும் பொருளைத் தரும்.
அந்நாளில் கடல் வாணிகம் மிகவும் சிறந்திருந்தது.
எகிப்து, பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா, சீனம் போன்ற நாடுகள் தமிழர்களின் பொருள்களை விரும்பிப் பெற்றன.

தமிழரின் கடற்பயணம்:
"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று ஒளவையும், "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று கணியன் பூங்குன்றனாரும் கூறியுள்ளனர். இவையே தமிழர்களின் உலகளாவிய சிந்தனைக்கும் பன்னாட்டுத் தொடர்புக்கும் சான்றுகளாகும்.
தொல்காப்பியம் தமிழர்கள் பிற நாடுகளுக்கு கடற்பயணம் மேற்கொண்டதை "முந்நீர் வழக்கம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
தொல்காப்பிய பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள "பொருள்வயிற் பிரிவு" விளக்குகிறது. இப்பிரிவு "காலில்(தரைவழிப் பிரிதல்) களத்தில் (நீர்வழிப் பிரிதல்) பிரிவு" என இரு வகைப்படும்.
யவனர்: 
தமிழர்கள் கிரேக்கரையும் உரோமானியரையும் "யவனர்" என அழைத்தனர்
கப்பல் கட்டுதல்:
"கலம்செய் கம்மியர்" என ஒருவகைத் தொழிலாளர் தமிழகத்தில் இருந்தனர்.
அவர்களால் பெருங்கப்பல்கள் கட்டப்பட்டன.
புறநானூறு கூறும் உவமை:
நான்கு பக்கமும் நீர் நிரம்பிய கழனிகள் உள்ளன. அதன் நடுவில் தனியாக மதிலோடு கூடிய அரசனது கோட்டை உள்ளது. அக்கோட்டையின் தோற்றமானது நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாகப் புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது.
கடலைக் குறிக்கும் சொற்கள்:
ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பெளவம், பரவை, புணரி.

மரக்கலத்தைக் குறிக்கும் சொற்கள்:
கப்பல், களம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புனை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மதிவை, பஃறி, ஓடம்.
கடலில் செல்லும் பெரிய கலம் நாவாய் எனப்படும்.

Thursday, 9 November 2017

பெரியபுராணம்

பெரியபுராணம்
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.[1] அத்துடன் திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்கச்சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப்பெற்றுள்ளது.[2]

இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆனையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜன் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என பெரியபுராணத்தினை தொடங்கியதாக நம்பப்படுகிறது. இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது.[2]

Tuesday, 7 November 2017

அணி

அணி இலக்கணம்
அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம். அணி பலவகைப்படும். அணி இலக்கணம் கூறும் தொன்மையான நூல் தண்டியலங்காரம் ஆகும். இந்நூலில் தன்மை அணி முதல் பாவிக அணி வரை 35 வகையான அணிவகைகள் பற்றி கூறப்படுகின்றது.[1] அவற்றுள் சில,

பொருள் அணிகள் தொகு

அதிசய அணி(உயர்வு நவிற்சி அணி)
அவநுதியணி
ஆர்வமொழியணி(மகிழ்ச்சி அணி)
இலேச அணி
உதாத்தவணி
ஏதுவணி
ஒட்டணி
ஒப்புமைக் கூட்டவணி
ஒழித்துக்காட்டணி
சங்கீரணவணி
சமாகிதவணி
சிலேடையணி
சுவையணி
தற்குறிப்பேற்ற அணி
தன்மேம்பாட்டுரை அணி
தன்மையணி(தன்மை நவிற்சி அணி,இயல்பு நவிற்சி அணி)
தீவக அணி
நிதரிசன அணி(காட்சிப் பொருள் வைப்பு அணி)
நிரல்நிறை அணி
நுட்ப அணி
பரியாய அணி
பரிவருத்தனை அணி
பாவிக அணி
பின்வருநிலையணி(பொருள் பின்வருநிலையணி, சொற்பொருள் பின்வருநிலையணி)
புகழாப்புகழ்ச்சி அணி
புணர்நிலையணி
மயக்க அணி
மாறுபடுபுகழ்நிலையணி
முன்னவிலக்கணி
வாழ்த்தணி
விசேட அணி(சிறப்பு அணி)
விபாவனை அணி
விரோதவணி
வேற்றுப்பொருள் வைப்பணி
வேற்றுமையணி

Monday, 6 November 2017

பகுபத உருப்பிலக்கணம்

தனிச்சொல்லை மொழியியல் நோக்கில் நன்னூல் பதவியல் என்னும் பகுதியில் அணுகுகிறது. பொருள் தரும் தனிச் சொல்லை அந்த நூல் பதம் எனக் குறிப்பிடுகிறது. பதத்தை அது பகுபதம், பகாப்பதம் என இரு பகுதிகளாக்கிக்கொண்டுள்ளது. பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்பன பகுபத உறுப்புக்கள் ஆகும்.

Sunday, 5 November 2017

பகுபதம்

பகுபதம் என்பது பகுக்க அல்லது பிரிக்கக்கூடிய வகையில் அமைந்த சொல். பதம் என்பது சொல் என்ற பொருளைத்த ருகிறது. பகுபதத்தை பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்ற ஆறாகப் பகுக்க முடியும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறுவகைப் பெயர்களையும் அடிப்படையாகக் கொண்டு பிறக்கின்ற பெயர்ச் சொற்கள்; தெரிநிலை வினை ஆயினும், குறிப்பு வினை ஆயினும் காலத்தைக் காட்டுகின்ற வினைச் சொற்கள் ஆகியவை பகுபதங்கள் எனப்படும்.



Saturday, 4 November 2017

பகுபத வககைள்.

பகுபத வககைள்.

பெயர்ப் பகுபதம்
வினைப் பகுபதம்
என இரு வகைப்படும்.

பெயர்ப் பகுபதம்
தொகு
பொருளை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம்
பொன்னன், இனியன், செல்வந்தன். போன்றவை.
இடத்தை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம்
நாடன், மதுரையான், கும்பகோணத்தான். போன்றவை
காலத்தை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம்
ஆதிரையான், வேனிலான், இரவோன், பகலோன், வெய்யிலோன் போன்றவை.
சினையைஅடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம்
கண்ணன், திண்தோளன், சீத்தலையான் போன்றவை.
குணத்தைஅடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம்
கரியன், செங்கணான், நெட்டையன், குட்டையன் போன்றன.
தொழிலை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம்
தச்சன், கொல்லன், கருமான் போன்றன.
வினைப் பகுபதம் தொகு
தெரிநிலை வினைச்சொற்கள், குறிப்பு வினைச்சொற்கள், காலத்தைக் குறிப்பாகவோ அல்லது வெளிப்படையாகவோ காட்டும் வினைச் சொற்கள்( வினையாலணையும் பெயர்கள்) ஆகியன வினைப் பகுபதங்கள் ஆகும்

எடுத்துக்காட்டு:

நடந்தான் , நடவான்.- தெரிநிலை வினைப் பகுபதம்
பொன்னன், அகத்தான் -குறிப்பு வினைப் பகுபதம்
நடந்தவன், நடவாதவன் - தெரிநிலை (வினையாலணையும் பெயர்)
பொன்னவன், இல்லாதவன் -குறிப்பு (வினையலணையும் பெயர்)

Friday, 3 November 2017

பகாப்பதம்

தமிழ் இலக்கணத்தில் பகாப்பதம் என்பது மேலும் பொருள்தரக்கூடிய சொற்களாகப் பிரிக்கமுடியாத சொல் பகாப்பதம் எனப்படும். பகா என்பது பிரிக்கமுடியாது என்றும், பதம் என்பது சொல் என்றும் இங்கு பொருள் தருகின்றன.

பகாப்பதம் ஏழு எழுத்துக்கள் வரை எழுத்துக்களைக் கொண்டிருக்கும்.

எடுத்துக்காட்டு (அடைப்புக்குறிக்குள் எழுத்தெண்ணிக்கை)

அணி (2), அறம் (3), அகலம் அருப்பம் (5), தருப்பணம் (6), உத்திரட்டாதி
எடுத்துக்காட்டுக்கள் தொகு


மா
பா
படம்
ஆம்
பட்டம்
படம்

Wednesday, 1 November 2017

தொன்மை தமிழகம்.

தமிழின் தொன்மை தமிழின் தொன்மை தொகு செம்மொழியாகத் தமிழ் உயர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணம் அதன் தொன்மைத் தன்மையே ஆகும். தமிழினம், தமிழ்மொழி, தமிழ் இலக்கியங்கள் ஆகிய அனைத்தும் மிக்க தொன்மை சார்ந்தவை என்ற கருத்து தற்போது ஆய்வறிஞர்களால் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றது.