கடற்பயணம் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்
தமிழ்நாட்டு வாணிக வரலாறு மிகவும் தொன்மை வாய்ந்தது.
உள்நாட்டு வாணிகத்தைவிட அயல்நாட்டு வாணிகத்திலேயே வருவாய் மிகுதி.
அயல்நாட்டு வாணிகத்திலேயே தரைவழியாகச் செய்யும் வாணிகத்தைவிட, நீர் வழியாகச் செய்யும் வாணிகம் பெரும் பொருளைத் தரும்.
அந்நாளில் கடல் வாணிகம் மிகவும் சிறந்திருந்தது.
எகிப்து, பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா, சீனம் போன்ற நாடுகள் தமிழர்களின் பொருள்களை விரும்பிப் பெற்றன.
தமிழரின் கடற்பயணம்:
"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று ஒளவையும், "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று கணியன் பூங்குன்றனாரும் கூறியுள்ளனர். இவையே தமிழர்களின் உலகளாவிய சிந்தனைக்கும் பன்னாட்டுத் தொடர்புக்கும் சான்றுகளாகும்.
தொல்காப்பியம் தமிழர்கள் பிற நாடுகளுக்கு கடற்பயணம் மேற்கொண்டதை "முந்நீர் வழக்கம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
தொல்காப்பிய பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள "பொருள்வயிற் பிரிவு" விளக்குகிறது. இப்பிரிவு "காலில்(தரைவழிப் பிரிதல்) களத்தில் (நீர்வழிப் பிரிதல்) பிரிவு" என இரு வகைப்படும்.
யவனர்:
தமிழர்கள் கிரேக்கரையும் உரோமானியரையும் "யவனர்" என அழைத்தனர்
கப்பல் கட்டுதல்:
"கலம்செய் கம்மியர்" என ஒருவகைத் தொழிலாளர் தமிழகத்தில் இருந்தனர்.
அவர்களால் பெருங்கப்பல்கள் கட்டப்பட்டன.
புறநானூறு கூறும் உவமை:
நான்கு பக்கமும் நீர் நிரம்பிய கழனிகள் உள்ளன. அதன் நடுவில் தனியாக மதிலோடு கூடிய அரசனது கோட்டை உள்ளது. அக்கோட்டையின் தோற்றமானது நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாகப் புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது.
கடலைக் குறிக்கும் சொற்கள்:
ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பெளவம், பரவை, புணரி.
மரக்கலத்தைக் குறிக்கும் சொற்கள்:
கப்பல், களம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புனை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மதிவை, பஃறி, ஓடம்.
கடலில் செல்லும் பெரிய கலம் நாவாய் எனப்படும்.
No comments:
Post a Comment