Monday, 13 November 2017

உணவே மருந்து

உணவே மருந்து தொகு

உணவே மருந்து மருந்தே உணவு என்று வாழ்ந்தவர்கள் தமிழர்கள். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தை வாளோடு முன் தோன்றிய மூத்த குடிமக்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில் இருந்து தான் நாகரீகமாக இருந்தாலும் அல்லது உணவு கலாச்சாரமாக இருந்தாலும் உலகம் முழுக்க எடுத்துச் சென்றதற்கான மிகப்பெரிய ஆதாரங்கள் உள்ளது.

சங்க கால இலக்கியங்கள் தொகு
எட்டுத்தொகை,பத்துப்பாட்டு,கலித்தொகை என சங்ககால இலக்கியங்களில்[1] உணவு சார்ந்த மிகப்பெரிய ஆய்வு தமிழர்களுக்கிடையே இருந்தது. தமிழர்கள் உணவே மருந்து ,மருந்தே உணவு என்ற கொள்கையில் முழுமையாக வாழ்ந்தார்கள்.தமிழர்கள் பழங்காலத்தில் பயன்படுத்திய உணவுகள் என்று பார்க்கும் பொழுது சிறுதானியங்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள். அதில் பிரதானமானது வரகு,திணை,குதிரைவாலி,சாமை.இதனைத் தொடர்ந்து சாப்பிட்ட தமிழர்களுக்கு எந்த நோய் நொடியும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமான சுழலில் வாழ்ந்துள்ளார்கள்.

அறிஞர்கள் கருத்து தொகு
பல்வேறு மூலிகைகள்,காய்கனிகள்,கீரைகள்,அவற்றின் தன்மைகள், பயன்கள் ஆகியவற்றை அனைவரும் புரிந்து அதற்கேற்றாற் போல் அன்றாட உணவை உட்கொண்டால் நோய் என்பதற்க்கே இடமில்லை.உணவே பிரம்மன்,உணவிலிருந்தே எல்லா உயிரினங்களுக்கும் உணவாக மாறுவதே இயற்கையின் இயல்பு என உபநிடதங்கள் கூறுவதை வள்ளுவரும்[2],ஏழைகளிடத்தில் இறைவன் உணவின் ரூபமாகத் தோன்றுகிறார் என காந்தியடிகள் போன்றோரும் கூறியது உணவில்லையேல் வாழ்கையே அழியும் என்பதைத் தான் காட்டியுள்ளது.

No comments:

Post a Comment