Saturday, 4 November 2017

பகுபத வககைள்.

பகுபத வககைள்.

பெயர்ப் பகுபதம்
வினைப் பகுபதம்
என இரு வகைப்படும்.

பெயர்ப் பகுபதம்
தொகு
பொருளை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம்
பொன்னன், இனியன், செல்வந்தன். போன்றவை.
இடத்தை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம்
நாடன், மதுரையான், கும்பகோணத்தான். போன்றவை
காலத்தை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம்
ஆதிரையான், வேனிலான், இரவோன், பகலோன், வெய்யிலோன் போன்றவை.
சினையைஅடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம்
கண்ணன், திண்தோளன், சீத்தலையான் போன்றவை.
குணத்தைஅடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம்
கரியன், செங்கணான், நெட்டையன், குட்டையன் போன்றன.
தொழிலை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம்
தச்சன், கொல்லன், கருமான் போன்றன.
வினைப் பகுபதம் தொகு
தெரிநிலை வினைச்சொற்கள், குறிப்பு வினைச்சொற்கள், காலத்தைக் குறிப்பாகவோ அல்லது வெளிப்படையாகவோ காட்டும் வினைச் சொற்கள்( வினையாலணையும் பெயர்கள்) ஆகியன வினைப் பகுபதங்கள் ஆகும்

எடுத்துக்காட்டு:

நடந்தான் , நடவான்.- தெரிநிலை வினைப் பகுபதம்
பொன்னன், அகத்தான் -குறிப்பு வினைப் பகுபதம்
நடந்தவன், நடவாதவன் - தெரிநிலை (வினையாலணையும் பெயர்)
பொன்னவன், இல்லாதவன் -குறிப்பு (வினையலணையும் பெயர்)

No comments:

Post a Comment