Saturday, 20 January 2018

நில மாசுபாடு



நில மாசுபாடு

நில மாசுபாடு


நில மாசுபாடு என்பது நேரடியான அல்லது மறைமுகமான மனித செயல்பாடுகளால் புவியின் மேற்பரப்பான நிலம், அதில் உள்ள மண் ஆகியவற்றின் இயற்கை வளங்களை பாதிப்படையச் செய்யும் நிகழ்வே ஆகும்.
நகர்புற மற்றும் தொழில்துறை திட மற்றும் திரவக் கழிவுகளை ஏடாகூடமாகக் கொட்டுதல், மண்ணில் உள்ள கனிம வளங்களைச் சுரண்டுதல், விவசாயத்திற்கு தெளிக்கப்படும் பூச்சி கொல்லிகள், காடுகளை அழித்தல் போன்றவை நில மாசுபாடு ஏற்பட முக்கிய காரணங்களாகும்.
பெருகி வரும் நகர்புறமாதல், தொழிற்சாலைகள் அதிகரிப்பு மற்றும் நிலத்தின் இயற்கை வளங்களின் தேவை அதிகரித்தல் போன்றவற்றின் காரணமாக நில மாசுபாடு அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம்.
அதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி எல்லா நாடுகளும் யோசிக்கத் தொடங்கிவிட்டன. இன்னும் சில ஆண்டுகளில் இது தீர்க்க முடியாத பிரச்சினையாகி விடும். எனவே இது குறித்த விழிப்புணர்வு ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.
இனி இதன் காரணங்கள், இதன் விளைவுகள் மற்றும் இதற்கான தீர்வுகள் குறித்து காணலாம்.

Friday, 19 January 2018

மரபு நோய்கள்

நீரிழிவு நோயின் கூடாரமாகி வருகிறது நம் நாடு. 40, 50 வயதுகளில் தலைகாட்டத் தொடங்கிய டைப் -2 வகை நீரிழிவு நோய் இப்போது குழந்தைகளையும்கூடத் தாக்கத் தொடங்கியிருப்பது மிகப் பெரிய அதிர்ச்சி. குடும்பத்தில் ஒருவருக்காவது நீரிழிவு நோய் இருப்பது சாதாரணமாகி வருகிறது. இது மரபியல்ரீதியாக அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது. இதற்கு ஆங்கில மருத்துவம் மட்டுமே ஒரே தீர்வு என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால், இந்திய மருத்துவ முறையில் பல மருந்துகள் உள்ளன, புதிதாக வந்துகொண்டிருக்கின்றன.
காரணங்கள்
நீரிழிவு நோய்க்கு மதுமேகம், சர்க்கரை வியாதி, டயாபடிஸ் எனப் பல வழக்குப் பெயர்கள் உண்டு. உடல்பருமன், போதிய உடல் உழைப்பின்மை, மன அழுத்தம், மரபியல் எனப் பல காரணங்கள் இதற்கு முன்னிறுத்தப்பட்டாலும், முறையற்ற உணவு முறைதான் முதன்மைக் காரணம். மதுமேக நோய் உண்டாவதற்கு வேகாத உணவு, செரிக்காத உணவு, அதிக இனிப்பு சேர்ந்த உணவு, அதிக அளவு உணவு, கெட்டுப்போன இறைச்சி, மதுபானம் எனப் பல காரணங்களைப் பட்டியலிடுகிறது சித்த மருத்துவம். இந்தப் பட்டியலில் உள்ள அனைத்தும் துரித உணவின் மூலம் ஒரே நேரத்தில் நமக்குக் கிடைத்து, நீரிழிவு நோய் உண்டாக அதிக வாய்ப்பிருக்கிறது. இதற்கு இந்திய மருத்துவ முறையிலேயே பல்வேறு சிகிச்சைகள், மாத்திரைகள் உள்ளன.
‘BGR 34’ மாத்திரை
அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சிக்கான கவுன்சிலை (C.S.I.R.) சார்ந்த தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் (N.B.R.I.) மற்றும் மத்திய மூலிகைச் செடிகள் ஆராய்ச்சி நிறுவனம் (C.I.M.A.P.) இணைந்து `BGR 34’ என்ற நீரிழிவு நோய்க்கான மாத்திரையைச் சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளன. BGR என்பது Blood Glucose Regulator என்பதையும், 34 என்பது மாத்திரையில் உள்ள 34 வகையான முக்கிய வேதிப்பொருட்களையும் குறிக்கின்றன.
Berberine, Xanthopurin, Scopoletin, Pterostillbene, Palmatine, Isoquinoline போன்று இதில் உள்ள 34 வேதிப்பொருட்களும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. மரமஞ்சள், வேங்கை, சிறுகுறிஞ்சான், சீந்தில், மஞ்சிட்டி, வெந்தயம் ஆகிய ஆறு மூலிகைகளின் சூரணம் மற்றும் சத்துகள் `BGR 34’ மாத்திரையில் கலந்துள்ளன. இந்த மாத்திரை ஆயுர்வேத மருந்தாக, மருந்துக் கடைகளில் கிடைக்கிறது.

Thursday, 18 January 2018

வாழ்க்கை முறைநோய்

நீரிழிவு நோயாளியின் வாழ்க்கை முறை


நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டுள்ளது தெரிந்ததுமே அதற்கான சிகிச்சை என்ன என்பது தான் நம் எல்லோரின் கேள்வியாக இருக்கும்... ஆனால் இந்த நோயைப் பொருத்தவரை உண்மை என்னவெனில் சிகிச்சை என்பதை விட வாழ்க்கை முறை என்பதே பொருந்தும்... நம் உணவு,பழக்க வழக்கங்கள் இவைகளை சற்றே மாற்றி அமைப்பதே இந்த நோயின் அதி முக்கியமான சிகிச்சை.
நீரிழிவு நோய் ஆயுள் முழுவதும் தொடரும் நோய். இதை குணப்படுத்த இயலாது,ஆனால் கட்டுப்படுத்த முடியும். கொழுப்பு மற்றும் மாவுச் சத்துகள் குறைவான உணவுகளை உட்கொண்டு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக,அளவாக வைத்துக் கொள்வதும்,தெடர்ந்து மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப மருந்துகள் உட்கொள்வதும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மிகவும் உதவும்.
பருமனான நீரிழிவு நோயாளிகள் உடல் எடையை குறைப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை பெருமளவில் கட்டுப்படுத்த இயலும். உடற்பயிற்சியும் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்த மிகவும் உதவும்.
நீரிழிவு நோயாளிகள் வாரத்தில் 2-4 நாட்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது இன்சுலின் எதிர்ப்பை 24-72 மணி நேரங்கள் வரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். நீரிழிவு நோயாளிகள் சரியான உணவு வகைகளை உட்கொண்டால் மட்டும் போதாது,அவற்றை சரியான நேரத்தில் தவறாமல் உண்ண வேண்டும்.

Wednesday, 17 January 2018

தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு 2005

தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு 2005 என்பது தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமத்தால் 1975, 1988, 2000 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தேசிய அளவிலான கலைத்திட்டங்களுள் ஒன்றாகும். இக்கலைத்திட்ட வடிவமைப்பு இந்திய அளவில் பள்ளிக் கல்வியில் பாடத்திட்டங்கள் உருவாக்குவது,புத்தகங்கள் எழுதுவது மற்றும் கற்பித்தல் வழிமுறைகளை நெறிப்படுத்துகிறது[1] இக்கலைத்திட்டம் முந்தைய அரசுகளின் அறிக்கைகள், சுமையற்ற கற்றல் மற்றும் 1986 - 1992 ஆம் ஆண்டுகளின் தேசியக் கல்விக் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள்து[2]

தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு 2005 முக்கிய அம்சங்கள் தொகு

முக்கிய நோக்குகள் தொகு
பள்ளிக்கு வெளியில் கற்ற அனுபவ அறிவை பள்ளியில் கற்ற அறிவுடன் தொடர்புபடுத்துதல்.
குருட்டு மனப்பாடம் செய்வதைத் தவிர்த்துப் பொருள்புரிந்து கற்றுக்கொள்வதை உறுதிசெய்தல்.
பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்டும் தகவல் திரட்டுதல் மற்றும் படித்தறிதல்.
தேர்வு முறைகளை மேலும் எளிதாக்கியும் நெகிழ்வாக்கியும் வகுப்பறைக் கற்றலுடன் ஒருங்கிணைத்தல்.
குழந்தையின் ஒட்டுமொத்த ஆளுமைத்திறனை வளர்த்தல்.[3]

Tuesday, 16 January 2018

காசநோய்

நோய்
காசநோய் ஏற்படுவதற்கு முதன்மைக் காரணியாக உள்ள மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் தொற்றுபாக்டீரியாவின் அணுக்கற்றை நுண்வரைவிப் படம்
நோய் (வியாதி, பிணி) என்பதுஉயிரினங்களின் உடலிலோ,மனதிலோ ஏற்படும் அசாதாரண நிலைகளைக் குறிக்கும். இதனை நலமற்ற நிலை, சீரழிந்த நிலை எனலாம். நோய் மனித வாழ்வின் நிலையான துன்பங்களில் ஒன்று. நோய் பொதுவாக அறிகுறிகள் (signs) மற்றும் உணர்குறிகளுடன் (symptoms) தொடர்புடைய மருத்துவ நிலை எனலாம்[1]. நோய் ஏற்படும்போது, நோய்வாய்ப்படும் உயிரினம் சில அசெளகரியங்களை, சீரற்ற நிலையை அல்லது அசாதாரண நிலையை உணர்தல் உணர்குறி என்றும்,மருத்துவருக்குத் தெரியக்கூடிய அசாதாரண நிலைகள் அறிகுறிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
நோயானது உள்ளகக் காரணிகளாலும், வெளிக் காரணிகளாலும் தோற்றுவிக்கப்படலாம்.நோய்க்காரணிகளால் ஏற்படக்கூடியதொற்றுநோய்கள்வெளிக்காரணிகளால் ஏற்படும் நோய்களாகும். உடலின் செயற்பிறழ்வுகளால் ஏற்படும்தன்னெதிர்ப்பு நோய்கள்உள்ளகக்காரணிகளால் ஏற்படும் நோய்களாகும்.
வலியை உண்டாக்கும் நிலைகள், உடலின் செயற்பிறழ்வுகள், கடுந்துன்பம் ஏற்படுத்துபவை, சமூகப் பிரச்சனைகளை உண்டாக்குபவை, ஒருவருக்கு மரணத்தை விளைவிக்கக்கூடியவை அல்லது நோய்வாய்ப்பட்டவருடன் உள்ளத் தொடர்பால் பிறருக்கு மரணத்திற்கு இணையாக நிகழும் பிரச்சனைகள் என மனிதர்களில் நோய் என்பது விரிவானதொரு பொருளில் உபயோகப்படுத்தப்படுகிறது. இத்தகு விரிவானதொரு பொருளில் சிலநேரங்களில், பிற சூழல்கள் அல்லது நோக்கங்களுக்காகத் தனித்துவமாக வகைப்படுத்தக்கூடியவையாக உள்ள காயங்கள், உடல் ஊனங்கள், நலச் சீர்கேடுகள், நோய்க்கூட்டறிகுறிகள்,நோய்த்தொற்றுகள், தனிப்பட்ட நோய் உணர்குறிகள், பொது நிலையிலிருந்து விலகிய நடத்தைகள், மனித வடிவம் மற்றும் செயல்களில் உள்ள அசாதாரணமான வேறுபாடுகள் ஆகிய அனைத்தையும் நோய் என்றே குறிப்பிடுகின்றோம். சாதாரணமாக பிணிகள் உடலளவில் மட்டுமல்லாது உணர்வுபூர்வமாகவும் மனிதர்களைப் பாதிக்கின்றன. பலவிதமான வியாதிகளுடன் நோய்வாய்ப்பட்டு வாழ்வது வாழ்வைப் பற்றிய ஒருவரின் கண்ணோட்டத்தினை, மனோபாவத்தினை முற்றிலுமாக மாற்றியமைக்ககூடியதாகும்.

Monday, 15 January 2018

கல்வி உரிமைச் சட்டம்

                               கல்வி உரிமைச் சட்டம்
கல்வி உரிமைச் சட்டம்:  என்ன செய்யப் போகிறது
நாடு விடுதலையடைந்து 63 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் – 2009’( Right of Children to Free and Compulsory Education – Act – 2009) இவ்வாண்டு ஏப்ரல் 01, 2010 அமலுக்கு வந்திருக்கிறது.  இச்சட்டத்தின் உள்ளே செல்வதற்கு முன்பு நம் நாட்டின் கல்வி நிலையை கொஞ்சம் தொகுத்துக் கொள்வோம். இந்து மதம் பிராமணர் தவிர பிறர் கல்வி கற்பதை வேதங்கள் உள்ளிட்ட பிராமண சட்ட முறைகளைக் கொண்டு அறவே தடை செய்தது.  பவுத்த, சமண மதங்களின் எழுச்சி இந்திய வருணாஸ்ரம வரலாற்றில் முதல் புரட்சியாக அமைந்து பிறருக்கும் கல்வி கிடைக்க வாய்ப்பளித்தது.  வட இந்தியாவில் அசோகர், கனிஷ்கர், ஹர்ஷர் போன்ற ஒரு சில அரசர்களின் ஆதரவில் பவுத்தமும் சமணமும் செழித்தது கொஞ்சகாலந்தான்.  பின்னர் குப்தர்களின் ‘இருண்டகாலத்தில்’ மீண்டும் இந்து மதம் ‘புத்துயிர்ப்பு’ பெற்றது.
தமிழகத்தில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பவுத்த – சமண சமயங்கள் செல்வாக்கு பெற்றிருந்தது.  ‘பள்ளி’ என்ற சொல் கூட சமணத்தின் கொடைதான்.  தமிழர்கள் இன்றும் பெருமை பேசும் ராஜராஜன் போன்றோர் முன்னெடுத்தது வேதக்கல்வி தானே தவிர வேறில்லை.
காலனியாதிக்க காலத்தில் செயல்பட்ட கிருத்தவ சமயப் பரப்பூழியர்கள் மூலம் பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்டாலும் அடித்தட்டு மக்களுக்கு கல்வி எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.  இந்தியாவின் பெரு நகரங்களில் மட்டும் சில சுதேசி தனியார் நிறுவனங்கள் கல்விக் கூடங்களை நடத்தி வந்தன.
ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் அறியாமையைப் போக்கி பண்பாட்டை உயர்த்தவும், கல்வி போதிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்து 1813 ஆம் ஆண்டு சிறப்புச் சட்டம் மூலம் கல்விக்கு மானியமாக 10,000 பவுண்டுகளை வழங்கினர்.  இந்த மானியத்தைக் கொண்டு வைதீக பார்ப்பனர்கள் சமஸ்கிருத சாஸ்திரங்களை சொல்லிக் கொடுக்க முயன்றபோது ராஜாராம் மோகன்ராய் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், இவர்கள் அனைவரும் கல்வியில் வடிகட்டும் கொள்கையை(Filtration Theory) ஆதரித்தனர் என்பதும் உண்மை.

Sunday, 14 January 2018

கலைத்திட்டத்தின் கட்டமைப்பு

கலைத்திட்டத்தின் கட்டமைப்பு 

கலைத்திட்டம்  ஐந்து கூறுகளை உடையது.
  1. மாணவர் மற்றும் சமுதாய தேவைகள்.
  2.  விரும்பும் குறிக்கோள்கள் 
  3. பாடப்பொருள் தெரிவு 
  4. கற்றல்-கற்பித்தல் முறைகள் 
  5. மதிப்பீடு  செய்தல் 

Saturday, 13 January 2018

தொற்றுநோய்

தொற்றுநோய்

மருத்துவ சோதனையில், ஒருநோயானது நோயை உருவாக்கும் பண்பு கொண்ட வைரசு, பக்டீரியா,பூஞ்சைபுரோட்டோசோவா, மற்றும் பல்கல ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களின் காரணமாக ஏற்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அந்நோய்தொற்றுநோய் என அழைக்கப்படுகிறது. இந்நோய்க்காரணிகள் (pathogen)விலங்குகளிலும்தாவரங்களிலும்நோயை ஏற்படுத்தலாம். தொற்றுநோயானது ஒரு குறிப்பிட்ட இனத்துக்குள்ளேயோ அல்லது ஒரு இனத்திலிருந்து, வேறொரு இனத்துக்கோ கடத்தப்படலாம். நோய்க்கடத்தல் வெவ்வேறு வழி முறைகளில் நடக்கலாம். நேரடி தொடுகையினால் (physical contact), காற்றின் வழியாக, நீரின் ஊடாக,உணவினால், தொடுகைக்குட்படும் பொருட்களினால் அல்லது ஒருநோய்க்காவியினால்தொற்றுநோயானது கடத்தப்படலாம். விலங்குகளில் காணப்படும் ஒரு தொற்றுநோயானது, மனிதருக்குக் கடத்தப்படும்போது, மனிதரிலும் நோயை ஏற்படுத்துமாயின் அது Zoonotic disease என் அழைக்கப்படும்.
நோய்க்காரணி ஒன்றின் தொற்றை ஏற்படுத்தும் தன்மையானது(infectivity), அந் நோய்க்காரணியானதுஒரு உயிரினத்தினுள் உட்சென்று, அங்கே தன்னை நிலை நிறுத்தி,ஓம்புயிரினுள்/விருந்துவழங்கியினுள்பல்கிப் பெருகும் திறனில் தங்கியிருக்கும். தொற்றும் தன்மையானது (infectiousness) நோயானது ஒரு உயிரினத்திலிருந்து, வேறொரு உயிரினத்திற்கு வீரியமாக கடத்தப்படும் தன்மையில் தங்கியிருக்கும் தொற்றுக்கள் அனைத்துமே தொற்றுநோயாக இருக்க வேண்டியது அவசியமில்லை. தொற்று ஏற்பட்டிருந்தாலும், அவை நோய்க்கான அறிகுறிகளைத் தராமலும்,நோய்க்காரணியால் தான் உட்செல்லும் உயிரினத்தின் தொழிற்பாடுகள் எதையும் பாதிக்க முடியாத நிலையும் காணப்படின், அது தொற்றுநோய் என குறிப்பிடப்பட மாட்டாது.
பல தொற்றுநோய்களை முழுமையாக அழித்தும், வேறு பல தொற்றுநோய்களை கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டு வந்ததால், வீழ்ச்சியடைந்து வந்த தொற்றுநோய் இறப்புக்கள், கடந்த 30 ஆண்டு காலத்தில் சூழலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் காரணமாக, புதிய தொற்றுநோய்களாலும், தொற்றுநோய்த் தடுப்புக்கும், தொற்றுநோய்க்கு எதிரான மருந்துகளுக்கும் எதிர்ப்புச்சக்தியைப் பெற்றுக் கொண்ட நுண்ணுயிரிகளால் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

Friday, 12 January 2018

நீர் மாசுபாடு

                                        நீர் மாசுபாடு                                                                
நீர் மாசடைதல் அல்லது நீர் மாசுபாடு என்பது, ஏரிகள்ஆறுகள்கடல்கள்நிலத்தடி நீர் என்பன போன்ற நீர் நிலைகள் மனித நடவடிக்கைகளால் தூய்மை இழப்பதைக் குறிக்கும். நீரின் இயற்பியல்வேதியியல்உயிரியல் பண்புகளில் மாறுதல்கள் நிகழ்வதனால் நீர் மாசுபாடு ஏற்படுகின்றது. இது அந் நீர் நிலைகளில் வாழும் விலங்குகளுக்கும்,தாவரங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
இயற்கை நிகழ்வுகளான எரிமலை வெடிப்புஅல்காப் பெருக்கம்புயல்நிலநடுக்கம் போன்றவையும் நீரின் தரத்திலும், அதன் சூழலியல் நிலைமையிலும் பெரும் மாற்றங்களை உண்டுபண்ணுகின்றன. எனினும், மனிதச் செயற்பாடுகளினால் அந்நீர் தூய்மை கெட்டு, மனிதப் பயன்பாட்டுக்கு உதவாமலும், உயிரினங்களின் வாழ்வுக்கு உதவாமலும் போகும் நிலையே நீர் மாசடைதல் எனப்படுகிறது. நீர் மாசடைதலுக்குப் பல காரணங்கள் இருப்பதுடன் அது பல இயல்புகளை உடையதாகவும் இருக்கிறது. நீர் மாசடைதலுக்கான முக்கிய காரணங்களை, மாசின் மூலத்தைப் பொறுத்து இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவது, ஓரிடமூல மாசடைதல் (Point-source pollution) எனப்படும். மற்றது, பரந்தமூல மாசடைதல்' (Non-point source pollution) எனலாம். முதல்வகை, ஒற்றை இட மூலத்திலிருந்து மாசு நீரில் கலப்பதனால் உருவாகும் மாசடைதல்களை உள்ளடக்குகிறது. இரண்டாவது வகை மாசடைதல் ஒற்றை இடத்திலிருந்து உருவாவதில்லை. இது, ஒரு பரந்த இடப்பரப்பில் இருந்து சிறிது சிறிதாகச் சேகரிக்கப்படும் மாசுகளால் உருவாகின்றது. அதனால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

Thursday, 11 January 2018

மாணவர் மைய கற்பித்தல்

  மாணவர் மைய கற்பித்தல் 

 வகுப்பறைக்  சாதாரணமாக வகுப்பறைக் கற்பித்தலில் 

ஈடுபடும் போது ஒரு பாட அலகை கற்பிப்பதற்கு மிகச் சிறந்த கற்பித்தல் முறை எதுவென யாரும் சிபார்சு செய்யமுடியாது. ஆசிரியரே படைப்பாற்றலுள்ளவராகக் கருதப்படுகிறார். கற்பித்தல் ஓரு விஞ்ஞானம் போன்ற ஒரு கலையாகும். மிகச் சிறந்த கற்பித்தல் முறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளல் ஆசிரியரின் கடமையாகும்.
பாடத்தைக் கற்பித்தலின் நோக்கம், மாணவரின் இயல்பு, பாடஅலகின் தன்மை, பௌதிக சூழலின் தன்மை, பெற்றுக்கொள்ளக்கூடிய கட்புல, செவிப்புல சாதனங்கள், ஆசிரியரின் சுபாவம் அகிய அனைத்து சாதனங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அந்த வகையில் வகுப்பறைக் கற்பித்தலை திட்டமிடுவதில் பல கற்பித்தல் முறைகள் காணப்படுகின்றன. எனவே பொருத்தமான சூழலில் பொருத்தமான பாடஅலகிற்கு ஏற்ப பொருத்தமான கற்பித்தலை மேற்க்கொண்டால் வகுப்பறைக் கற்பித்தல் சிறந்து விளங்கும். அந்தவகையில் கற்பித்தல் முறைகளை பின்வருமாறு வகைப்படுத்த முடியும்.
1.விரிவுரை முறை கற்பித்தல்
2.குழுமுறைக் கற்பித்தல்
3.வினாவிடை முறைக்கற்பித்தல்
4.கூட்டுமுறைக்கற்பித்தல் - பல்தரக்கற்பித்தல்
5.ஒப்படைமுறைக் கற்பித்தல்
6.கண்டறிமுறைக் கற்பித்தல்
7.படிமுறைக்கற்பித்தல்
8.சிந்தனைக்கிளறல் கற்பித்தல் முறை
9.விளையாட்டு முறைக்கற்பித்தல்
10.பாத்திரமேற்று நடித்தல்
11.நுண்முறைக்கற்பித்தல்
12.போலச்செய்தல் கற்பித்தல் முறை
13.வெளிக்களச் செயற்பாட்டு கற்பித்தல் முறை
14.முன்வைத்தல் முறை
15.வணிக முறை கற்பித்தல்
16.பிரச்சினை திர்த்தல் முறை
17.செய்திட்ட கற்பித்த்ல் முறை
என பல வகை கற்பித்தல் முறைகள் காணப்படுகின்றன.

Wednesday, 10 January 2018

இலக்கண வகைகள்

பகுப்பு:தமிழ் இலக்கண வகைகள்
துணைப் பகுப்புகள்
இந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.


► அணி இலக்கணம்‎ (63 பக்.)

► எழுத்திலக்கணம்‎ (2 பகு, 33 பக்.)

► சொல்லிலக்கணம்‎ (11 பகு, 66 பக்.)

► பொருள் இலக்கணம்‎ (2 பகு, 11 பக்.)

► யாப்பிலக்கணம்‎ (3 பகு, 68 பக்.)
"தமிழ் இலக்கண வகைகள்" பகுப்பிலுள்ள கட்டுரைகள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.


அணி இலக்கணம்

எழுத்திலக்கணம்
எழுத்தின் வகை
எழுத்து (இலக்கணம்)

செவ்வெண்

தமிழ் இலக்கணத் தொடர்கள் (பொருள்)
தமிழ் இலக்கணத் தொடர்கள் (மொழி)

பொருள் இலக்கணம்

மறைந்த தமிழியல் மரபுகள்

யாப்பிலக்கணம்

Tuesday, 9 January 2018

கலை நிகழ்ச்சிகள்

இன்று  போட்டிகள்   நடைபெற்றன.  பாட்டுப்போட்டி,  பேச்சுப்போட்டி,  கட்டுரைப்போட்டி,   ஆகிய   போட்டிகள்  நடை  பெற்றன. இப்போட்டிகளில்   முதலாமாண்டு ,   இரண்டாமாண்டு  மாணவா்கள்   பங்கேற்றனா். இந்நிகழ்ச்சி  மிகவும்  உற்சாகமாக  நடைபெற்றது .முதல்  பரிசு  இரண்டாம்  பாிசு   பெற்ற   மாணவா்களை   தோ்ந்தெடுக்கப்பட்டனா்.   காலை  முதல்  மதியம்  வரை   இவ்விழா  நடைபெற்றது.   யோகா  பாடத்தில்   முதலுதவியின்  தேவையும்  மற்றும்  முக்கியத்துவம்  பற்றி  தோ்வு  எழுதினோம்.

Monday, 8 January 2018

அறிவுத்தொகுப்பும் கலைத்திட்ட வடிவமைப்பு

இன்று  காலையில்  முதல் பாடவேளையில்   அறிவுத்தொகுப்பும்  கலைத்திட்ட வடிவமைப்பு  பாடத்திற்கான ஒப்படைப்பு  எழுதினோம்.   அடுத்தது  பொது  ஒப்படைப்பு பணிகளை  செய்து  முடித்தோம்.   இடைவேலைக்குப்பின்னா்     யோக  படித்துக்கொண்டிருந்தோம்.    அனைவருக்குமான  பள்ளியை உருவாக்குதல்   எனும்  பாடத்தில்   மூன்றாவது   பாடப்பகுதி  நடத்தப்பட்டது.   பின்னா்  தோ்வுக்கு   இரண்டு  வினாக்களை  வீட்டுப்பாடம்   கொடுத்தாா்  ஆசிாியா்.

Sunday, 7 January 2018

வகுப்பறை செயல்பாடுகள்

றிவுத் தொகுப்பும் கலைத்திட்டமும் என்ற பாடத்தில் குறிப்பிட்ட  மணவா்கள்  சில தலைப்புகளில் பாடம் நடத்தினாா்கள்.  யோகா உடல்நலம் மற்றும் உடல்கல்வி தோ்வுக்காக படித்தோம் மாலைப் பொழுகதில்  விலையாட்டு மைதானத்தில் ஓட்ய் பந்தயம் நடந்தது. அனைத்து மாணவா்களும்  ஓடினோம்

Saturday, 6 January 2018

அனைவருக்கும் கல்வி திட்டம்

அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 3.63 லட்ச பள்ளிகள் 
மத்திய அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் (Sarva Shiksha Abhiyan) மூலம் இதுவரை நாடு முழுவதும், 3.63 லட்சம் ஆரம்பப் பள்ளிகள்  இயங்கி வருவதாக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 
இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய பிரகாஷ் ஜவடேகர்,  ”இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்பதே சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் நோக்கம். முக்கியமாக பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஏதுவாக கிராமப் புறங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பெண்களின் எழுத்தறிவு விகிதம் குறைவாக உள்ள கிராமப்புறங்களில், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா (Kasturba Gandhi Balika Vidyalays) என்னும் பெண் குழந்தைகளுக்கான பள்ளித் திறக்கப்பட்டுள்ளது”, எனக் குறிப்பிட்டுள்ளார். 

Friday, 5 January 2018

மாணவர் மைய கற்றல்

மாணவர் மைய கற்றல் என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மணவர் மையக்கற்றலின் நோக்கம் கற்பவர் தன்னிச்சையாக சுதந்திரமாக செயல்படுவது.மாணவர் கைகளில் கற்கும் கற்றல் பாதை பொறுப்பு செலுத்துவதன் மூலம் கற்பவர் சுயமாக,சுதந்திரமாக பிரச்சனைகளை திறமையாக கையாள வலியுறுத்துவதை இலக்காக இம்மாணவர் மைய கற்றல் முறை விளக்குகிறது .  மாணவர் மைய கற்றல் அறிவுறுத்துவது, வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் சுயமாக சிக்கலை திர்க்கும் திறன்களில் கவனம் செலுத்துகிறது.ef> Young, Lynne E.; Paterson, Barbara L. (2007). Teaching Nursing: Developing a Student-centered Learning Environment. p. 5. ISBN 078175772X.</ref> மாணவர் மைய கற்றல் கோட்பாடு மற்றும் நடைமுறையும் கற்பவரின் சிக்கல்களுக்கு ,ஆக்கப்பூர்வமான கற்கும் கோட்பாடு புதிய தகவல்கள் மற்றும் முன் அனுபவங்கள் அடிப்படையாக இருக்கிறது. மாணவர் மைய கற்றல்- மாணவர்களின் நலன்களை,முதன்முதலில் கற்கும் மாணவர் குரல் மற்றும் கற்றல் அனுபவத்திற்கு மையமாக ஒப்புக்கொள்கிறது.மாணவர் மைய கற்றல்-இடங்களை எவ்வாறு தேர்வு செய்கிறார்கள்? ,எப்படி அவர்கள் கற்றுக்கொள்வார்கள்?, எப்படி தங்கள் சொந்த கற்றல் மதிப்பீட்டை மதிப்பீடுவார்கள்?. இது பழைய கற்பித்தல் முறையான ஆசிரிய மைய கற்றல் முறைக்கு மாற்றாக உள்ளது.ஆசிரிய மைய கற்றல் முறையில்,மாணவர்களின் நிலை ,"செயலற்ற" பங்காக இருந்தது.ஆனால்,மாணவர் மைய கற்றல் முறையில், மாணவர்களின் நிலை,செயல்" வரவேற்புடையதாக உள்லது.ஆசிரியர் மைய கற்றல் முறையில் பின்வருவனற்றை ஆசிரியர் முடிவு செய்வார்.மாணவர்கள் என்ன கற்றுகொள்வார்கள்?,எப்படி கற்றுக்கொள்வார்கள்?,மாணவர்களின் கற்றல் பற்றி மதிப்பீடு செய்யப்படுவார்கள்.மாறாக, மாணவர் மைய கற்றல் முறையில்,மானவர்களது கற்றல் சொந்த பொறுப்பில் பங்கேற்பாளராக மற்றும் அவர்களது சொந்த படிப்பினையும் இருக்கும்.
'மாணவர் மைய கற்றல்" என்ற சொல்லின் பயன்பாடானதுகல்வி,மனம் அல்லது வழிகாட்டல்களில் தனிப்பட்ட வேறுபாடுகளை அடையாளம் காண்பிக்கும்,வழிகாட்டுதல்களை குறிப்பதாகும். இதன் அடிப்படையில்,மாணவர் மைய கற்றல், தனிநபர்கள் கல்வி கற்கும் அனுசரனையாளரான ஒவ்வொரு மாணவர் நலன்களை,திறமைகள் மற்றும் கற்றல் பாணியை வலியுறுத்துகிறது.

Thursday, 4 January 2018

தமிழ்விடுதூது

தமிழ்விடு தூது தமிழ் விடுதூது ஒரு தமிழ் சிற்றிலக்கிய நூல். தூது வகையைச் சேர்ந்தது. மதுரை சொக்கநாதர் (சிவன்) மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தமிழை அவர்பால் தூதாக அனுப்புவது போலப் பாடப்பட்டுள்ளது. இதனைப் பாடிய புலவர் பெயர் தெரியப்படவில்லை. நூலின் உள்ளடக்கத்தில் இருந்து தமிழ்ப்பற்றும், சைவ சமயப் பற்றும் உடையவர் என்பது மட்டும் புலனாகுகிறது. இந்த நூலைப் முதலில் அச்சில் வெளியிட்டவர் உ. வே. சாமிநாதையர். மொத்தம் 268 கலிவெண்பா பாக்கள் உள்ள இந்நூலில் மதுரையில் நடைபெற்ற சிவனது திருவிளையாடல் செய்திகள் இடம் பெற்றுள்ளன.

Wednesday, 3 January 2018

ஓவியங்கள்

அறிவுத்தொகுப்பும்   கலைத்திட்டமும்   என்ற  பாடத்தில்   தோ்வு  எழுதினோம் .      தலைப்புகள்   மெய்யறிவு   சொல்பொருள்     அறிவின்   வகைகள்    மற்றும்   செய்திறன்   பயிற்சியளித்தல்   போன்றவை   ஆகும். அனைத்து  மாணவா்களை   ஒன்றாக   அமர  வைத்து   ஆா்ட்   அண்டு   கிராப்ட்   பயிற்சி   அளித்தனா்கள்.  

Tuesday, 2 January 2018

புணர்ச்சி

புணர்ச்சி (இலக்கணம்) இந்த பக்கம் சில பிரச்சனைகளை கொண்டுள்ளது இலக்கணத்தில் புணர்ச்சி அல்லது சந்தி (சமஸ்கிருதம்: संधि, "சேர்த்தல்") என்பது இரண்டு சொற்கள் இணையும்போது உச்சரிப்பில் உண்டாகும் மாற்றமாகும்.[1] இவை இந்திய மொழிகளான சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆனால் இந்த உச்சரிப்பு மாற்றம் எந்தவொரு மொழியிலும் இயற்கையாக நிகழும். பெரும்பாலான மொழிகளில் எழுத்துவடிவம் சந்தியைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் தமிழ் மற்றும் சமக்கிருத மொழிகளில் எழுத்திலக்கணத்தில் சந்தி ஒரு விதிமுறையாக உள்ளது. இரண்டு சொற்கள் இணையும் போது முதலில் உள்ள சொல் நிலைமொழி என்றும் வந்து இணையும் சொல்லை வருமொழி என்றும் கூறுவர். தொல்காப்பியத்தில் இவை நிலைமொழி- குறித்துவரு கிளவி என குறிப்பிடப்படுகின்றன. சொற்கள் புணரும்போதும் ஒரு எழுத்து தோன்றுதல் அல்லது சொல்லின் இறுதி எழுத்து வேறொரு எழுத்தாக மாறுதல் அல்லது ஒரு எழுத்து மறைதல் (கெடுதல்) போன்ற மாறுபாடுகள் தோன்றும். தமிழ்மொழியில் தோன்றும் இந்த மாறுபாடுகளை விகாரம் அல்லது திரிபு என வழங்குகிறோம். மாறுபாடுகள் தோன்றாமல் சொற்கள் புணரும் நிலையை இயல்புப் புணர்ச்சி என்கிறோம்.

Monday, 1 January 2018

பொருள் இலக்கணம்

பொருள் இலக்கணம் – அகப்பொருள் பொருள் என்பது ஒழுக்கமுறை, அறவழியில் பொருளீட்டிப் பல்லாரோடு பகுத்துண்டு வாழும் வாழ்வியல் நெறிமுறைகளைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே போற்றிக் காத்தவர், தமிழர். வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தவர் தமிழரே! பொருளிலக்கணம் அகம், புறம் என இருவகைப்படும். அகப்பொருள் : அன்புடைய தலைவன் தலைவி பற்றிய ஒழுக்கத்தினைக் கூறுவது அகத்திணை எனப்படும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என அகத்திணைகள் எழுவகைப்படும். அவற்றுள் முதலைந்தும் அன்பின் ஐந்திணை என்று வழங்கப்படும். அகப்பொருளுக்குரிய பொருள்கள் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பன. முதற்பொருள் : அகவொழுக்கம் நிகழ்வதற்குக் காரணமான நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும். நிலம் ஐவகைப்படும். பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்.