Thursday, 28 December 2017

பாரதத்தாய்

பாரதத்தாய்
வாய்மையும் அறமும் பிறர்துயர் களையும்
வண்மையும் தியாகமும் இணைதீர்
தூய்மையும் ஒழுங்கின் கலியினில் வளர்ந்து
துலங்கிடத் தீமையும் துயரும்
சேய்மையுற் றகலத் தோன்றிய கருணைச்
செங்கதி ரவனெனத் தகைய
தாய்மையன் பிறனை யீன்றபா ரதத்தாய்
தாள்மலர் பணிவதே தவமாம் .

– அசலாம்பிகை அம்மையார்

பொருள் :

உண்மை, அறம், பிறர் துன்பம் நீங்கும் திறன், தியாகம்,
இணையற்ற ஒழுக்கம் ஆகியவற்றை இக்கலிகாலத்தில் வளர்ந்து
விளங்கச் செய்பவன். தீமை, துன்பம் இவற்றை அகன்றோடச்
செய்யும் கருணைக் கதிரவன் போன்றவன். தாய்மையுள்ளம்
கொண்டவன். இத்தகைய தன்மைகள் கொண்ட மகாத்மா
காந்தியை ஈன்றெடுத்த பாரதத்தாயின் மலரடிகளைப் போற்றி
வணங்குவதே பெரும் பேறாகும்.
சொற்பொருள் :

1. வாய்மை – உண்மை
2. களையும் – நீக்கும்
3. வண்மை – வள்ளல் தன்மை
4. துலங்குதல் – விளங்குதல்
5. சேய்மை – தொலைவு
6. தவம் – பெரும்பேறு

Wednesday, 27 December 2017

நாட்டுபுறகலைகள்

பொதுவாக தமிழக நாட்டுப்புற கலைகள்:-

1. ஒயிலாட்டம் 2. ஆலியாட்டம் 3. கோலாட்டம் 4. கரகாட்டம் 5. காவடி ஆட்டம் 6. கும்மி 7. வில்லுப்பாட்டு 8. தெருக் கூத்து 9. பாவைக் கூத்து (பொம்மலாட்டம்) 10. கனியான் ஆட்டம், 11. வர்மம் 12. சிலம்பாட்டம். 13. களரி 14. தேவராட்டம் 15. சக்கையாட்டம் 16. பொய்க்கால் குதிரை ஆட்டம் 17. மயிலாட்டம் 18. உறியடி விளையாட்டு (கண்ணன் விளையாட்டு) 19. தப்பாட்டம் 20. உக்கடிப்பாட்டு 21. இலாவணி 22. கைச்சிலம்பாட்டம் 23. குறவன் குறத்தியாட்டம் 24. துடும்பாட்டம் 25. புலி ஆட்டம் 26. பொம்மைக் கலைகள் 27. மண்பாண்டக் கலை 28. கோலக் கலை

இதுபோன்று ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான கலைகள் உள்ளன. இந்தக்கலைகள் வெளியே தெரியாமல் உள்ளன. மேலும் நாடகம், வீதி நாடகம், இசை நாடகம், நாட்டிய நாடகம், பரதநாட்டியம், இசைச் சிற்பம் போன்ற பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

கிராமியக் கலைகள்:-

ஒயிலாட்டம்

கிராமக் கோவில்களில் ஒயிலாட்டம் விழாக்காலங்களில் ஆடப்படுகிறது. இதிகாச புராண வரலாற்றுக் கதைகளே ஒயிலாட்டத்தில் பாடப்படும், கட்டபொம்மன், மதுரைவீரன், வள்ளி, திருமணம் கதைகள் இடம் பெறும். ஒயிலாட்டம் ஆடுபவர் வெள்ளை ஆடை அணிந்து இருப்பர். காலில் சலங்கையும் கட்டியிருப்பர். கையில் ஆளுக்கொரு கைக்குட்டையைப் பிடித்து இருப்பர். நுனியில் பிடித்து அதை அழகாக வீசியபடியே பாடி ஆடுவர்.

கோலாட்டம்

கோலாட்டம் என்பது பெண்களுக்கென்றே உரிய ஆட்டமாகும். இரண்டு கோல்களைப் பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று மோதி ஒலி எழுப்பி ஆடுகின்ற ஆட்டமே கோலாட்டம் ஆகும். சமுதாயத்தைப் பற்றியும், தலைவர்களைப் பற்றியும் கோலாட்டப் பாடல்கள் எழுதப்பட்டன. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளிலும் கோலாட்டம் ஆடப்படுகிறது.

கரகாட்டம்

மாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் கரகம் எடுப்பது தமிழ் நாடெங்கும் உள்ள வழக்கமாகும். மலர்களைக் கொண்டு அழகான ஒப்பனை செய்யப்பட்ட குடத்தைத் தலையில் வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம் கரக ஆட்டமாகும். இறைவழி பாட்டுடன் தொடர்பு உடையது இந்த கலை பல்வகை வண்ண மலர்களால் போர்த்தப்பட்டு அழகாகச் செய்யப்பட்டிருக்கும். இந்த கரகாட்டத்தில் ஆண்கள், பெண்கள் ஒன்றாக ஆடுவது பல அடுக்குகள் கொண்ட கரகத்தைத் தாங்கி ஆடுவது கரகாட்டத்தின் தனிச்சிறப்பு.

காவடி ஆட்டம்

காவடியாட்டம் சமய உணர்விற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் நிகழ்த்தப்படுகிறது. காவடி, தண்டைக் கொண்டு ஆடுவதால் இவ்வாட்டம் காவடியாட்டம் எனப் பெயர் பெற்றது காவடி எடுத்து முருகக் கடவுளை வழிபடும் நிகழ்ச்சியாகக் காவடி ஆட்டம் நடைபெறுவது தமிழர்கள் மரபாகும். காவடியாட்டம் இறைத் தொடர்புடையது ஆதலால் பல கடுமையான நோன்புகளை மேற்கொண்டு காவடி எடுப்பர். கலைத்திறனும் ஆடல் நுட்பமும் இதில் மிகுதியாக இருக்கும்.

கும்மி

தமிழகமெங்கும் நிகழும் ஆட்டங்களில் கும்மியாட்டம் முக்கிய இடம் வகித்து வருகின்றது. கும்மிக்கென்று தனிமெட்டு உண்டு. ஒருவர் முதலில் பாட, அதனைத் தொடர்ந்து பெண்கள் குழுவாகச் சேர்ந்து பாடுவர்.

Tuesday, 26 December 2017

ஐந்திணைகள்

ஐந்திணை
ஐந்திணை என்பது தமிழரின் அகவாழ்வு-நெறி. அகத்திணை, புறத்திணை ஆகிய ஒவ்வொன்றையும் தொல்காப்பியர் ஏழு ஏழாகப் பகுத்துக் கோட்டுகிறார். அவற்றில் அகத்திணைக்கு உரிய 7 திணைகளில் கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரண்டும் பொருந்தாக் காமங்கள். எனவே இவை இரண்டையும் விடுத்து ஏனைய ஐந்தை ஐந்திணை என்பர்.

ஒரு பாடல் இன்ன திணையைச் சேர்ந்தது என்பது ஒழுக்கத்தின் அடிப்படையிலேயே கொள்ளப்படுகிறது. அதாவது 'திணைப் பாகுபாடு' செய்யப்படுகிறது. உரிப்பொருள் அல்லாதவை மயங்கும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [1] எனவே மயங்காத உரிப்பொருளான திணைக்குறிய ஒழுக்க முறைகளே இன்ன திணையைச் சேர்ந்தது என வரையறுத்துக் காட்டும் என்பது தெளிவு.

அடிக்குறிப்பு தொகு

↑ உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே (தொல்காப்பியம் 3-15 அகத்திணையியல்)

Sunday, 24 December 2017

குறுஞ்சிப்பாட்டு

அண்மையில் நடந்த தமிழ் விழாவில் ஒரு 10 வயது சிறுமி சங்க இலக்கியத்தில் உள்ள 99 மலர்களை அடுக்கடுக்காய் சொல்லி கொண்டே போனாள் . ஆவல் மேலிட இணையத்தில் தேடிப் பார்த்தேன், 99 மலர்களை குறுஞ்சிப்பாட்டு என்னும் சங்க இலக்கிய நூலில் கபிலர் குறிப்பிட்டு உள்ளார்..
இதோ அவை
1.காந்தள்
2. ஆம்பல்
3.அனிச்சம்
4.குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8.தேமா
9. மணிச்சிகை
10.உந்தூழ்
11.கூவிளம்
12. எறுழ்
13.சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம்
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு

Saturday, 23 December 2017

வீரமாமுனிவர்

வீரமாமுனிவர் (நவம்பர் 8, 1680 - பிப்ரவரி 4, 1742)[1] இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபைப் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்.

வீரமாமுனிவர்
பிறப்பு கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி
நவம்பர் 8, 1680
கேசுதிகிலியோன், இத்தாலி
இறப்பு பிப்ரவரி 4, 1742
மற்ற பெயர்கள் தைரியநாதர்
சமயம் கத்தோலிக்க திருச்சபை
இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.

இந்தியாவில் தொகு

இவர் லிஸ்பனில் இருந்து புறப்பட்டு 1710 சூனில் கிறித்தவ மதம் பரப்பு பணி செய்ய கோவா வந்து சேர்ந்தார்.

தமிழகத்தில் தொகு

கோனான்குப்பத்தில் பெரிய நாயகி அன்னை ஆலயத்தின்முன் அமைந்துள்ள வீரமாமுனிவர் திருவுருவம்
சில நாட்கள் கோவாவில் தங்கியவர், தமிழ்நாடு செல்ல உத்தேசித்து, கொச்சி வந்து அங்கிருந்து கால்நடையாக அம்பலக்காடு வந்து தங்கி; மதுரையில் காமநாயக்கன்பட்டி வந்து சேர்ந்தார்.

அவரது தமிழக வாழ்க்கை முறை தொகு
1822 இல், முதன் முதலாக இவருடைய சரித்திரத்தைத் தமிழில் எழுதி வெளியிட்ட வித்துவான் முத்துசாமி பிள்ளை, இவருடைய நடையுடை பாவனைகளை, அந்நூலில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார்.

இந்தத் தேசத்தில் வந்தநாள் முதலாகப் புலால் மாமிசங்களை நிவர்த்தித்து, இரண்டு தமிழ்த் தவசிப் பிள்ளைகளைப் பரிசுத்த அன்னபாகஞ் செய்யச் சொல்லித் தினமொரு பொழுது மாத்திரம் போசனம் பண்ணிக்கொண்டிருப்பார். தமது மடத்திலிருக்கும் பொழுது, கோபிச் சந்தனம் நெற்றியிலிட்டுக் கொண்டு, தலைக்குச் சூரியகாந்திப பட்டுக் குல்லாவும், அரைக்கு நீர்க்காவிச் சோமனுந் திருநெல்வேலிக் கம்பிச் சோமன் போர்வை முக்காடுமிட்டுக் காலிற் பாதகுறடும் போட்டுக் கொண்டிருப்பார். இவர் வெளியிற் சாரி போகும் போது பூங்காவி அங்கியும் நடுக்கட்டும், வெள்ளைப்பாகையும் , இளங்காவி யுத்தரிய முக்காடும், கையினிற் காவி யுருமாலையும், காதில் முத்துக் கடுக்கனும், கெம்பொட்டுக் கடுக்கனும், விரலிற்றம்பாக்கு மோதிரமும், கையிற் றண்டுக் கோலும், காலிற் சோடுடனும் வந்து, பல்லக்கு மெத்தையின் மேலிட்டிருக்கும் புலித்தோலாசனத்தின் மேலெழுந்தருளியிருந்து, உபய வெண்சாமரை வீசவும், இரண்டு மயிற்றோகைக்கொத் திரட்டவும், தங்கக் கலசம் வைத்த காவிப்பட்டுக் குடைபிடிக்கவுஞ் சாரிபோவார். இவரிறங்கும் இடங்களிலும் புலிதோலாசனத்தின் மேலுட்காருவார்.

Friday, 22 December 2017

மகாபாரதம்

மகாபாரதம்
மகாபாரதம்
மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.

அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இலியட், ஒடிஸ்சி ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய தெய்வீக நகைச்சுவை (Divine Comedy) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீளமானது.

நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராட்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும்.

இதனைத் தமிழில் இலக்கியமாகப் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார். வியாசர் விருந்து என்ற பெயரில் இராஜகோபாலாச்சாரி அவர்கள் மகாபாரதத்தினை உரைநடையாக இயற்றியுள்ளார்.[1]

Wednesday, 20 December 2017

சுரதா

சுரதா (நவம்பர் 23, 1921 - ஜூன் 19, 2006) தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.

வாழ்க்கைக் குறிப்பு தொகு

சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். தஞ்சை மாவட்டம் பழையனூர் (சிக்கல்) என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் திருவேங்கடம்-சண்பகம் அம்மையார் ஆவர். பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார். சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.

பாரதிதாசனுடன் தொடர்பு தொகு

1941 சனவரி 14 இல் பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதல் கண்டு பழகிய சுரதா அவருடன் சிலகாலம் தங்கியிருந்து அவரது கவிதைப் பணிக்குத் துணை நின்றுள்ளார். பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக் கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது.


Friday, 15 December 2017

காந்தியடிகள்

மகாத்மா காந்தி
சுதந்திர போராட்ட வீரர்கள் தலைவர்கள்
JUNE 26, 2013


‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக இருந்ததால், இவருடைய தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாரத நாட்டிற்காகவே அர்பணித்த மாபெரும் மனிதர் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் தியாகங்களை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: அக்டோபர் 02, 1869

இடம்: போர்பந்தர், குஜராத் மாநிலம், இந்தியா

பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் தலைவர்

இறப்பு: ஜனவரி 30, 1948

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02  ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும். மேலும் அவருடைய தந்தை கரம்சாந்த் காந்தி, போர்பந்தரில் ஒரு திவானாக பணியாற்றி வந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

Thursday, 14 December 2017

பாரதியாா்

தேசிய கீதங்கள்

தமிழ் நாடு

தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
  இனிதாவது எங்கும் காணோம்.
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
  இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
  வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
  பரவும்வகை செய்தல் வேண்டும். 1

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
  வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
  உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
  வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
  தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! 2

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
  தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
  தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
  சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
  அதைவணக்கஞ் செய்தல் வேண்டும். 3

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
  வாக்கினிலே ஒளி யுண்டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
  கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
  விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
  இங்கமரர் சிறப்புக் கண்டார்.

Wednesday, 13 December 2017

பாரதி தாசன்

பாரதிதாசன் கவிதைகள்
வாழ்க்கை வரலாறு
1891   ஏப்ரல் 29, புதன் இரவு 10.15 மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார். தந்தை கனகசபை, தாய் இலக்குமி. 

1895 ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் தொடக்கக் கல்வி. இளம் வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். 

1908 முதுபெரும் புலவர் பு . அ . பெரியசாமியிடமும் பின்னர், புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும், சித்தாந்த வேதாந்தப் பாடங்களையும் கற்றல். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார். வேணு நாயக்கர் வீட்டுத் திருமணத்தில் பாரதியாரைப் பாவேந்தர் சந்தித்தார். 

1909 கல்வி அதிகாரி கையார் உதவியால் காரைக்காலைச் சார்ந்த நிரவியில் ஆசிரியராகப் பணி ஏற்றார்.

1910 வ.உ.சி-யின் நாட்டு விடுதலை ஆர்வத்தால் கனிந்திருந்த பாவேந்தர் பாரதியார், வ.வே.சு, டாக்டர் வரதராசுலு, அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளித்தார். பாரதியாரின் 'இந்தியா' ஏட்டை மறைமுகமாகப் பதிப்பித்துத் தருதல். பாவேந்தர் அனுப்பி வைத்த துப்பாக்கியே ஆஷ் கலெக்டரின் உயிரைப் பறித்தது என்பது வரலாறு. 

1916 கவிஞரின் தந்தையார் (23-1-1916) இயற்கை எய்தினார். 
1918 பாரதியாருடன் நெருங்கிய பழக்கத்தால் சாதி, மதம் கருதாத தெளிந்த உறுதியான கருத்துக்களால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில் கவிதைகள் எழுதினார். 10 ஆண்டுக்காலம் பாரதியாருக்கு உதவியும் உறுபொருள் கொடுத்தும் தோழனாய் இருந்தார்.

1919 திருபுவனையில் ஆசிரியராக இருக்கையில் பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டி ஒன்றேகால் ஆண்டு சிறை பிடித்த அரசு, தனது தவற்றையுணர்ந்து விடுதலை செய்தது. வேலை நீக்க வழக்கில் கவிஞர் வென்று மீண்டும் பணியில் சேர்தல்.

1920 இந்திய விடுதலை அறப்போராட்டத்தில் பங்கேற்றல், புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகள் - பழனியம்மையை மணந்தார். தம்தோளில் கதர்த்துணியைச் சுமந்து தெருத்தெருவாய் விற்றார்.

1926 ஸ்ரீ மயிலம் சுப்பிரமணியர் துதியமுது நூலை இயற்றல்.
1928 தன்மான (சுயமரியாதை) இயக்கத்தில் பெரியார் ஈ.வெ..ரா வுடன் இணைதல், பகுத்தறிவுக் கொள்கையை மேற்கொளல். 

1929 'குடியரசு' 'பகுத்தறிவு' ஏடுகளில் பாடல், கட்டுரை, கதை எழுதுதல் குடும்பக் கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதன் முதலில் பாட்டெழுதிய முதல்பாவலர் என்ற சிறப்புப் பெறுதல்.

1930 பாரதி, புதுவை வருகைக்கு முன்னும் பின்னும் பாடிய சிறுவர் சிறுமியர் தேசியகீதம், தொண்டர் நடைப் பாட்டு, கதர் இராட்டினப்பாட்டு ஆகியவற்றை நூல் வடிவில் வெளியிடல், தொடர்ந்து சஞ்சீவிபர்வதத்தின் சாரல், தாழ்த்தபட்டோர் சமத்துவப்பாட்டு நூல்களை வெளியிடல்.டிசம்பர், 10-ல் 'புதுவை முரசு' கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றல். 

1931 புதுவை முரசு' (5-1-1931) ஏட்டில் செவ்வாய் உலக யாத்திரை கட்டுரை வரைதல், சுயமரியாதைச் சுடர் என்ற 10 பாடல்களைக் கொண்ட நூலைக்கிண்டல் காரன் என்ற பெயரில் வெளியிடல்.

1933 மா. சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் நடை பெற்ற நாத்திகர் மாநாட்டின் பதிவேட்டில் 'நான் ஒரு நிரந்தரமான நாத்திகன்' என்று எழுதிக் கையெழுத்திடல்.

1934 இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகம் ஈ.வெ.ரா பெரியார் தலைமையில் நடைபெற்றது. 

1935 இந்தியாவில் முதல் பாட்டேடான 'ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்' தெடங்கினார். 

1938 பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியைக் குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி, நாராயணசாமி நாயுடு ஆகியோர் பொருள் உதவியால் வெளியிடுதல். பெரியார் 'தன்மான இயக்கத்தின் சிறந்த பாவலர்' என்று பாராட்டுதல். 

1939 'கவி காளமேகம்' திரைப்படத்திற்குக் கதை உரையாடல் பாடல் எழுதுதல். 

1941 'எதிர்பாராத முத்தம்' (குறுங்காவியம்) காஞ்சி பொன்னப்பாவால் வானம்பாடி நூற்பதிப்புக் கழகத்தில் வெளியிடல். 

1944 பெரியார் ஈ.வெ.ரா முன்னிலையில் தலைமகள் சரசுவதி திருமணம். மணமகன் புலவர் கண்ணப்பர் 

1945 புதுவை, 95, பெருமாள் கோவில் தெரு, வீட்டை வாங்குதல், தமிழியக்கம் 
( ஒரே இரவில் எழுதியது ) நூல் வெளியிடல். 

1946 'முல்லை' இதழ் தொடங்கப்பட்டது. பாவேந்தர் 'புரட்சிக்கவி' என்று போற்றப்பட்டு ரூ. 2,000 கொண்ட பொற்கிழியை நாவலர் சோமசுந்தர 
பாரதியார் தலைமையில் பொன்னாடை போர்த்தி, பேரறிஞர் அண்ணா அவர்கள் வழங்கினார். 8-11-1946-ல் முப்பத்தேழாண்டு தமிழாசிரியர் 
பணிக்குப்பின் பள்ளியிலிருந்து ஓய்வு பெறுதல். 

1947 புதுக்கோட்டையிலிருந்து குயில் இதழ் வெளியீடு. 

1948 குயில் மாத ஏட்டிற்குத் தடை. 

1949 பாரதிதாசன் கவிதைகள் 2-ம் தொகுதி வெளியீடு. 

1950 திருச்சியில் பாரதிதாசனார்க்கு மணிவிழா. 

1955 புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அவைத்தலைமை ஏற்றல்.
1958 'குயில்' கிழமை ஏடாக வெளிவருதல். தமிழகப் புலவர் குழுவின் சிறப்புறுப்பினராதல். 

1959 திருக்குறளுக்கு 'வள்ளுவர் உள்ளம்'

Tuesday, 12 December 2017

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன் ஒவ்வொரு பாடலிலும் இம்மூவர் அல்லது இம்மூன்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சில பாடல்கள் தொகு

ஒருவன், உயர்வும் ஊக்கமும் பெறவேண்டுமானால், உலகத்தோடு எப்படி ஓட்ட ஒழுகவேண்டும் என்பது பற்றி, கூறும் 56வது பாடல்

முந்தை எழுத்தின் வரவுணர்ந்துபிற்பாடு
தந்தையும் தாயும் வழிபட்டு –வந்த

ஒழுக்கம் பெருநெறி சேர்தல் இம்மூன்றும்

விழுப்ப நெறி தூராவாறு


பிறர் தன்னை உயர்த்தி பேசும் பொழுது இது தகாது என்று நாணுதலும், தன்னை விரும்பாதவர் தன்னை இகழுமிடத்து வெகுளாமல் பொறுத்தலும், மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் உதவி செய்தலும் சிறந்த செல்வமாகும் என்னும் வாழ்வியல் உண்மையை சொல்லும் 6வது பாடல்

பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்
திறன்வேறு கூறிற் பொறையும்—அறவினையைக்

காராண்மை போல வொழுகலும் இம்மூன்றும்

ஊராண்மை என்னும் செருக்கு.

Monday, 11 December 2017

நற்றினண

நற்றிணை
நற்றிணை - நூல் அறிமுகம்!
பதிவு செய்த நாள்: மார் 21,2013 12:01
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் நற்றிணை. நல் என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும் திணை என்னும் பெயரும் சேர்ந்து நற்றிணை என்னும் பெயரால் இந்நூல் வழங்கப்படுகிறது. இந்நூல் 9 அடிச் சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும் உடையது. 175 புலவர்களால் பாடப்பெற்றது. தற்போது 192 புலவர்கள் பெயர்கள் காணப்படுகின்றன. இதைத் தொகுத்தவர் யார் என தெரியவில்லை தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார். இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். நற்றிணைப் பாடல்கள் அக்காலச் சமூகத்தை அறிய பெரிதும் துணைபுரிகின்றன. மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்தன்மை, கல்வியாளர்களின் சிறப்பு, மக்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றை இவை உணர்த்துகின்றன. பல்லி கத்தும் ஓசையை வைத்து சகுனம் பார்க்கும் வழக்கத்தையும், பெண்கள் விளையாடும் விளையாட்டுகளில் கால்பந்து இடம்பெற்றிருந்தது போன்ற செய்திகளையும் நற்றிணையில் அறியலாம்.

Sunday, 10 December 2017

சீறாப்புராணம்

சீறாப் புராணம்
தமிழில் எழுதப்பட்ட தலைச்சிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம் ஆகும். இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ் இலக்கிய மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம். இதனை இயற்றியவர் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் ஆவார். அதே காலத்தில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதியின் ஆதரவை உமறுப் புலவர் பெற்றார். வள்ளல் சீதக்காதியின் பெருமையைச் "செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என்ற சொற்றொடர் விளக்கும்.

சீறாப்புராண அமைப்பு தொகு

இரண்டு பாகங்களில அமைந்துள்ளது. முதற்பாகத்தில் 44படலங்களும், இரண்டாவது பாகத்தில் 47படலங்களும் உடையதாக உள்ளது.

முதற்பாகம் தொகு
முதற்பாகமானது இரண்டு காண்டங்களாக அமைந்துள்ளது. இப்பாகத்தில் மொத்தம் 44படலங்கள் உள்ளன. அவை கீழ்கண்டவாறு பிரிந்துள்ளன.

1.விலாதத்துக் காண்டம் தொகு
முதலாவதாக அமைந்துள்ள இதில், மொத்தம் 23 படலங்கள் உள்ளன....................

கடவுள் வாழ்த்துப் படலம்
நாட்டுப் படலம்
தலைமுறைப் படலம்
நபியவதாரப் படலம்
அலிமா முலையூட்டுப் படலம்
இலாஞ்சனை தரித்த படலம்
புனல் விளையாட்டுப் படலம்
புகைறா கண்ட படலம்
பாதை போந்த படலம்
சுரத்திற் புனலழைத்த படலம்
பாந்தள்வதைப் படலம்
நதிகடந்த படலம்]
புலிவசனித்த படலம்
பாந்தள் வசனித்த படலம்
இசுறாகாண் படலம்
கள்வரை நதிமறித்த படலம்
சாமு நகர் புக்க படலம்
கரம் பொருத்து படலம்
ஊசாவைக் கண்ட படலம்
கதீசா கனவு கண்ட படலம்
மணம் பொருத்து படலம்
மணம்புரி படலம்
கஃபத்துல்லா வரலாற்றுப் படலம்
2.நுபுவ்வத்துக் காண்டம் தொகு
இரண்டாவதாக அமைந்துள்ள இதில், மொத்தம் 21 படலங்கள் உள்ளன.

நபிப்பட்டம் பெற்ற படலம்
தொழுகை வந்த வரலாற்றுப் படலம்
தீனிலைக்கண்ட படலம்
உமறுகத்தாபீமான் கொண்ட படலம்
உடும்பு பேசிய படலம்
உத்துபா வந்த படலம்
அபீபு மக்கத்துக்கு வந்த படலம்
மதியையழைப்பித்த படலம்
தசைக் கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம்
அபீபு ராஜா வரிசை வரவிடுத்த படலம்
ஈமான் கொண்டவர்கள் அபாசா ராச்சியத்துக்குப் போந்த படலம்
மானுக்குப் பிணை நின்ற படலம்
ஈத்தங்குலை வரவழைத்த படலம்
ஒப்பெழுதித் தீர்ந்த படலம்
புத்து பேசிய படலம்
பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம்
பருப்பதராசனைக் கண்ணுற்ற படலம்
அத்தாசீமான் கொண்ட படலம்
சின்களீமான் கொண்ட படலம்
காம்மாப் படலம்
விருந்தூட்டுப் படலம்

Saturday, 9 December 2017

குறுந்தொகை

குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்கக்கூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள். உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே. ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இது பலவகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புக்களை ஒத்தது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.

சங்க இலக்கிய பாடல் தொகு

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தா ரேத்துங் கலியே அகம் புறம் என்
றித்திறத்த எட்டுத் தொகை



முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி- மருஒஇனிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத் தொடும் பத்து


பாடியோர் தொகு

இத் தொகுப்பில் அமைந்துள்ள 401 பாடல்களை 206 புலவர்கள் பாடியுள்ளனர். இந்நூலில் அமைந்துள்ள 10 பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால் அப்பாடல்களின் சிறப்பு நோக்கி அத்தொடர்களையே ஆசிரியர் பெயர்களாக அமைத்து வழங்கினர். 'அனிலாடு முன்றிலார்', 'செம்புலப்பெயல் நீரார்', 'குப்பைக் கோழியார்', 'காக்கைப்பாடினியார்' என்பன இவ்வாறு உவமைச் சிறப்பால் பெயர் பெற்ற ஆசிரியர்கள் 18 பேர் இந்நூலில் காணப்படுகிறார்கள். கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

நூலமைப்பு தொகு

நான்கு முதல் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பு இது. (307,391-ஆம் பாடல்கள் 9 அடிகளால் ஆனது) அகப்பொருள்களை அகவற்பாக்களால் கூறுவது குறுந்தொகை. இந்நூலில் முதல், கருப்பொருட்களை விட உரிப்பொருளுக்கே சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. வருணனைகள் குறைந்தும் உணர்வு மிகுந்தும் காணப்படுகின்றன. பொருளுக்கேற்ற பொருத்தமான உவமைகள் கொண்டு கருப்பொருளின் பின்னணியில் மாந்தர்களின் அகத்தெழும் உணர்ச்சிகளை சிறந்த முறையில் சித்தரித்துக் காட்டுபவை குறுந்தொகைப் பாடல்களாகும்.

குறுந்தொகை பழைய உரைகள் தொகு

இந்த நூலின் 380 பாடல்களுக்குப் ‘பேராசிரியர்’ உரை எழுதியுள்ளார். பேராசிரியர் உரை எழுதாத 20 பாடல்களுக்கும் ‘நச்சினார்க்கினியர்’ உரை எழுதிச் சேர்த்துள்ளார். [1] நச்சினார்க்கினியர் தாம் எழுதிய தொல்காப்பிய உரையில் (அகத்திணையியல் நூற்பா 46) பேராசிரியரின் குறுந்தொகை உரையை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். இந்த இரண்டு உரைகளும் இன்று கிடைக்கவில்லை.

குறுந்தொகை காட்டும் செய்திகள் தொகு

குறுந்தகைப் பாடல்களில் சோழன் கரிகால்வளவன், குட்டுவன், திண்தேர்ப் பொறையன், பசும்பூண் பாண்டியன், போன்ற பேரரசர்கள் மற்றும் பாரி, ஓரி, நள்ளி, நன்னன் போன்ற சிற்றரசர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெறுகின்றன. 'கொங்குதேர் வாழ்க்கை' என்ற இரண்டாம் பாடல் இறையனார் பாடி, தருமி என்ற புலவருக்கு "பொற்கிழி" வழங்கச் செய்தது சிறந்த வரலற்றுச் சான்றாகும்.

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தெனிழைக்கும் நாடனோடு நட்பே
என்ற பாடல் தலைவனின் அன்பின் ஆழத்தையும் தலைவியின் நம்பிக்கையையும் எடுத்துரைக்கிறது.
"வினையே ஆடவர்க்கு உயிரே"- என்ற தொடர் ஆண்களின் கடமையைக் கூறுகிறது.

பதிப்பு வரலாறு தொகு

சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது, பல சுவடிகளைச் சோதித்து முதன்முதலில் திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த திருமாளிகைச் சௌரிப் பெருமாளரங்கன், தான் இயற்றிய புத்துரையுடன் 1915 இல் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்."[2]

இவற்றையும் பார்க்க தொகு

குறுந்தொகை பாடிய புலவர் வரிசை
குறுந்தொகை உரை
வெளி இணைப்புகள் தொகு

குறுந்தொகைப் பாடல்கள் - பாடல் மூலம், பாடல்களின் செய்தி, தமிழ் மற்றும் ஆங்கில விளக்கத்துடன்
குறுந்தொகை - இலக்கியம்
குறுந்தொகை PDF
குறுந்தொகை - அறிமுகம் - காயத்திரி
குறுந்தொகை மூலமும் எளிய உரையும்
அடிக்குறிப்பு தொகு

↑ இதனை விளக்கும் பழம்பாடல்
நல் அறிவுடைய தொல் பேராசான்
கல்வியும் காட்சியும் காசினி அறிய
பொருள் தெரி குறுந்தொகை இருபது பாட்டிற்கு
இது பொருள் என்று அவன் எழுதாது ஒழிய
இது பொருள் என்று அதற்கு ஏற்ப உரைத்ததும்-
↑ சங்க இலக்கியப் பதிப்புரைகள்.பாரதி புத்தகாலயம், பக்கம் 33

Friday, 8 December 2017

நாலடியார்

1.2 நாலடியார்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் முதலாவதாகக் குறிப்பிடப்படும் சிறப்புடையது நாலடியார்.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி


என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதில் வரும் நாலும் என்ற சொல் நாலடியாரையும் இரண்டும் என்ற சொல் திருக்குறளையும் குறிக்கிறது. ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி அளிக்கிறது. அதுபோல் நாலடியாரையும், திருக்குறளையும் கற்றவர்கள் சொல்வன்மையும் உறுதியும் பெற்றவர்கள் ஆகிறார்கள். பொதுமறை என்று புகழ்பெற்ற திருக்குறளோடு ஒப்ப வைத்து எண்ணும் சிறப்புடையது நாலடியார் என்ற கருத்தையும் இப்பழமொழி விளக்குகிறதல்லவா?

1.2.1 அமைப்பும் உள்ளடக்கமும்

நாலடியார், கடவுள் வாழ்த்து நீங்கலாக நானூறு வெண்பாக்களைக் கொண்ட நூல். நாலடி நானூறு என்றும் வழங்கப் பெறும் நூல். இந்நூல் சமண முனிவர்களால் இயற்றப்பட்டது. திருக்குறளைப் போல் மூன்று பால் பகுப்புகளை உடையது. பதினொரு இயல்களும், நாற்பது அதிகாரங்களும் கொண்டது. அதிகாரத்துக்குப் பத்துப் பாடல்கள் வீதம் நானூறு பாக்களைக் கொண்டது.

• துறவுக்குச் சிறப்பிடம்
அறத்துப்பாலில் துறவு நெறி அறங்களும், இல்லறநெறி அறங்களும் கூறப்படுகின்றன. சமண முனிவர்கள் இயற்றிய நூல் ஆதலின் துறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலில் கூறப்படுகிறது. நிலையாமை பற்றிய கருத்துகளும் அழுத்தமாகக் கூறப்படுகின்றன.

• இல்லறமும் பிறவும்

இனிய இல்லறத்தைப் பற்றியும் இந்நூல் எடுத்துரைக்கின்றது. இல்லறத்திற்குப் பொருந்தாதவை எவை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. மக்கள் வாழ வேண்டிய பாங்கினைச் சொல்கிறது. கல்விச் சிறப்பையும், கற்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. சான்றோர் இயல்பையும் பெருமையையும் எடுத்துரைக்கிறது. பண்பிலார் இயல்பையும் பட்டியலிடுகிறது. குறளின் அதிகாரப் பொருளோடு தொடர்புடைய கருத்தை ஒவ்வொரு குறளும் கூறுகிறது. ஆனால் நாலடியாரில் ஒரே கருத்தைப் பல அதிகாரங்களுள் வெவ்வேறு உவமைகளோடு கூறும் பாடல்கள் உள்ளன.

1.2.2 நூல் சிறப்பு

சிறந்த உவமைகளை நாம் நாலடியாரில் காணலாம். பழமொழிகளாலும், பழைய கதைகளாலும், உறுதிப் பொருள்களை வலியுறுத்துதலில் இந்நூல் ஈடிணையற்றது. அறத்தை உரைக்கும் போதும் அழகும் சுவையும் தோன்றக் கூறுகிறது. இயற்றியவர் முனிவராயினும் இலக்கியத்திற்குச் சுவையூட்டும் கற்பனை உணர்வையும் இவர்கள் கைவிடவில்லை.

• கற்பனை

அறிவொளியால் உலகத்தை அறநெறிப்படுத்தும் பெரியோர் விரைவில் இறந்துபடுகின்றனர். அறிவிலிகளோ நெடுங்காலம் வாழ்கின்றனர். இம்முரண்பாட்டின் காரணம் யாதென எண்ணிய புலவர் கூறுவதைப் பாருங்கள். சாற்றை விரைவில் இழுத்துக் கொண்டு, சக்கையை விட்டு விடுதல் எவர்க்கும் இயல்பு. கூற்றுவனும் சான்றோரை இளமையிலேயே எடுத்துக் கொண்டு மற்றோரை விட்டு விடுகிறான். இங்குப் புலவர் கூறிய காரணம் எதுவாக இருப்பினும் சரியோ! தவறோ அதை நம்மால் ரசிக்காமல் இருக்க முடியாது. இது போன்ற உலகியலை ஒட்டிய கற்பனைகளை நாலடியாரில் காணலாம்.

• பழமொழி

பொருள் விளக்கத்துக்காகப் பல பழமொழிகளும் ஆங்காங்கு எடுத்தாளப்பட்டுள்ளன. மேன்மக்கள் என்றும் மேன்மக்களே, கயவர் எக்காலத்தும் கயவரே என்பதனைப் புலப்படுத்த,

கைக்குமாம் தேவரே தின்னினும்வேம்பு


(நாலடி - 112)
(கைக்குமாம் = கசக்குமாம்)

என்ற பழமொழி வந்துள்ளது.

ஒருவர் பொறை இருவர் நட்பு
-
223
கற்கிள்ளிக் கையிழந்தற்று
-
336
மகனறிவு தந்தையறிவு
-
367
என்பன போன்ற பழமொழிகள் பலவற்றைக் காணலாம்.

• சுவைகள்

இதுவரை உவமைகளாலும், உலக நடைமுறைகளைக் கூறுதலாலும் பழமொழிகளாலும், உறுதிப் பொருள்களை உணர்த்துதலிலும் நாலடியார் தனிச் சிறப்புப் பெற்றுள்ளதைப் பார்த்தோம். அறப்பொருள் உரைக்கும் நிலையிலும் நகைச்சுவை தோன்றப் பாடுவதை நாலடியாரில் காணலாம்.

கொடுத்தாலன்றி விடாத இரவலர் பற்றி வழங்கப்படும் பாடல்களும் கதைகளும் தமிழில் மிக உண்டு. கொடாக்கண்டன் விடாக்கண்டன் கதையைப் போன்றது. இரவலர் ஒருவர் புகை நுழைய முடியாத இடத்திலும் நுழைந்து யாசித்தலைக் கண்டு வியந்து பாடிய பாடல் இது.

பொருள்கள் பலவற்றுள்ளும் நீரே நுட்பமானது. அதனை விட நுட்பமானது நெய். நெய்யை விட நுணுக்கம் உடையது புகை. நீர் நுழைய முடியாத இடத்திலும் நெய் நுழையும். நெய் நுழைய முடியாத இடத்திலும் புகை நுழையும். ஆனால் யாசிப்பவன் புகை நுழைய முடியாத இடத்திலும் புகுந்து செல்வான் என்கிறார் புலவர் (நாலடி: 282).

இங்கே புலவர் அனுபவிக்கும் வியப்புச் சுவை நம்மையும் மகிழ்விக்கிறது.

கல்லாத பேர்களிலும் கல்லே மிக நல்லது
(நாலடி - 334)
என்ற பேதைமை பற்றிய பாடல்களில் இகழ்ச்சிச் சுவை மிளிர்கிறது. உயிரற்ற கற்கள் கூட மனிதர்கள் அமரவும் படுக்கவும் உதவுகின்றன. அறிவிலார் எதற்கும் பயனில்லாதவர்கள் என்பதைத்தான் அவ்வாறு வெளிப்படுத்துகிறார் கவிஞர்.

நிலையாமை பற்றிய பாடலில் எள்ளற் சுவையைக் காணலாம். இறந்தவனின் பிணத்தை

Thursday, 7 December 2017

பரிபாடல்

2.1 சங்க காலம்
கடைச் சங்க காலத்தின் மேல் எல்லையைக் கி.மு.500 என்றும் கி.மு.300 என்றும் கூறுவார் உளர். கி.மு.800 என்ற கருத்தும் உண்டு. கி.பி.100-250, கி.பி.500, கி.பி.800 என்று கூறுவோரும் உளர். ஆனாலும் மிகப்பெரும்பான்மையோர் இக்காலத்தைக் கிறித்துநாதருக்குப் பின் வரும் முதல் மூன்று நூற்றாண்டுகட்கு உரியதாகக் கூறுகின்றனர். கி.பி.300 முதல் கி.பி.900 வரை தமிழகத்தில் ஆண்ட பல்லவர் பற்றிய ஒரு குறிப்பும் சங்க நூல்களில் இல்லை. எனவே, கி.பி.3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதே சங்க காலம் என்பர். இதற்கு வலிமை சேர்க்க அகழ்வாராய்ச்சி முடிவுகளும், சங்க நூலில் இடம்பெறும் யவனர் பற்றிய குறிப்புகளும், தாலமி, பிளைனி முதலானோர் எழுத்துகளும்







அகழ்வாய்வில் கிடைத்த சங்ககாலப்பொருட்கள்


உதவுகின்றன. பாண்டிச்சேரிக்குப் பக்கத்தில், அரிக்கமேட்டிலும், பிற இடங்களிலும் செய்த அகழ்வாராய்ச்சிகளும், கண்டெடுத்த பானை ஓடுகளும், கிரேக்க உரோமர்களின் காசுகளும் பிறவும் சங்க இலக்கியக் குறிப்புகளோடு ஒத்துச் செல்கின்றன. எனவே கடைச்சங்க காலம் என்பது கி.பி. முதல் மூன்று நூற்றாண்டுகட்கு உட்பட்டது என்பதே சரியான முடிவாகத் தெரிகிறது.

2.1.1 தொகை நூல்கள்

பழமையும் இலக்கிய வளமும் கொண்ட மொழிகளை உயர்தனிச் செம்மொழிகள் என்பர். கிரேக்கம், இலத்தீன், வடமொழி, எபிரேயம், சீனம் ஆகியவற்றோடு ஒத்த பழைமையுடைய தமிழும் இவ்வரிசையில் இடம் பெறுகிறது. மேற்சொன்ன பலமொழிகளிலும் செய்யுட்கள் தொகுக்கப்பட்டுத் தொகை நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழில் அவை தோன்றியதில் வியப்பில்லை.

சங்க காலத்தில் எண்ணற்ற தனிச் செய்யுட்கள் இயற்றப்பட்டிருக்க வேண்டும். அவற்றுள் பல கால வெள்ளத்தில் அழிந்தன. எஞ்சியவற்றையாவது காப்பாற்ற வேண்டுமென்ற உணர்ச்சி ஏற்பட்டமையால் கிடைத்தனவே இன்றுள்ள தொகைகள். இம்முயற்சியில் மன்னர்களும் அறிஞர்களும் ஈடுபட்டனர். அவர்களின் பெயர்கள் சில அறியப்படுகின்றன.

கிடைத்தவற்றுள் பெரும்பான்மையானவை அகவற்பாக்கள். கலி, பரிபாடல் என்னும் பாவகைகளில் இயற்றப்பட்ட செய்யுட்கள் குறைவாகவே இருந்தன. இவற்றுள் மிகப் பெரும்பான்மையானவை அகப்பாடல்கள். புறப்பாடல்கள் குறைவாகவே இருந்தன. இவற்றைத் தொகைப்படுத்தும் பொழுது அகத்தொகை, புறத்தொகை, இரண்டும் கலந்த தொகை என்ற அடிப்படையிடப்பட்டதாகத் தெரிகிறது. அகவலால் செய்த அகப்பாடல்கள் மிகுதியானமையால் செய்யுட்களின் அடிவரையினை அடிப்படையாகக் கொண்டு தொகுதிகள் உருவாக்கப்பட்டன. 4-8, 9-12, 13-31 என்று அடியளவு அமைந்தவை மூன்று தொகுதிகளாயின. ஐவர் பாடிய தனித்தனி நூறு செய்யுட்கள் கொண்ட 500 அகவற்பாக்கள் ஒரு தொகையாயிற்று. கலிப்பாவால் ஆன பாடல்கள் ஒரு தொகுதியாக உருவாக்கப்பட்டது. பரிபாட்டால் ஆனது ஒரு தொகுதியாயிற்று.

புறப்பாடல்களுள் பல குடியினரையும் பல பொதுவான கருத்துக்களையும் பற்றி அகவற்பாக்கள் ஒரு தொகுதியாக்கப்பட்டது. சேரர் பற்றி மட்டுமே கூறும் 100 பாடல்களை இன்னொரு தொகுதியாக்கினர்.

103 அடி முதல் 782 அடிவரை அமைந்த பத்து நீண்ட பாடல்கள் பத்துப்பாட்டு என்று ஒரே தொகுதியாக அமைந்தது.

இவ்வாறு தொகுக்கப்பட்டவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்று வழங்கலாயின.

எட்டுத்தொகையுள் அடங்குவன எவை என்று கூறும் வெண்பா வருமாறு:

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம்என்று
இத்திறத்த எட்டுத்தொகை.
இவ்வாறே பத்துப்பாட்டுள் அடங்குவன பற்றியும் ஒரு வெண்பா கூறுகிறது. அது பின்வருமாறு:

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடுநல் வாடைகோல் குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.

Wednesday, 6 December 2017

இன்னா நாற்பது

இன்னா நாற்பது
இன்னா நாற்பது
ஆசிரியர் கபிலர் (இன்னா நாற்பது பாடியவர்)
    புத்தகத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்!

இன்னா நாற்பது தொகு
`நாற்பது` என்னும் எண் தொகையால் குறிக்கப்பெறும் கீழ்க்கணக்கு நூல்கள் நான்கு. அவை: 1.கார் நாற்பது, 2. களவழி நாற்பது 3. இன்னாநாற்பது 4. இனியவை நாற்பது என்பனவாம். கார் நாற்பதும் களவழி நாற்பதும் முறையே அகம், புறம் பற்றியவை.

இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறம் உரைப்பன.

இவ்விரண்டும் முறையே துன்பம் தரும் நிகழ்ச்சிகளும், இன்பம் தரும் செயல்களும் இன்னின்ன எனத் தொகுத்து உரைக்கின்றன. நூலுக்குப் புறம்பான கடவுள் வாழ்த்திலும் கூட 'இன்னா', இனிதே என்னும் சொற்கள் அமைந்துள்ளன.

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு, ஒவ்வொன்றையும் 'இன்னா' என எடுத்துக் கூறுதலின் இந்நூல் 'இன்னா நாற்பது' எனப் பெயர்பெற்றது.

இந்நூலை இயற்றியவர் கபில தேவர்.

ஆசிரியர் தமது கடவுள் வாழ்த்தில் சிவபெருமான், பலராமன், திருமால், முருகன் ஆகியோரைக் குறித்துள்ளார். இதனால் இவர் சமயப் பொது நோக்கு உடையவர் என எண்ண இடமுண்டு.



கடவுள் வாழ்த்து தொகு
முக் கட் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா;
பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா;
சக்கரத்தானை மறப்பு இன்னா; ஆங்கு இன்னா,
சத்தியான் தாள் தொழாதார்க்கு.

இன்னா - துன்பம் ஒழுகு - நடத்தல்

முக்கண்களுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்காதவர்களுக்குத் துன்பமுண்டாம். அழகிய பனைக் கொடியையுடையவனாகிய பலராமனை நினையாமல் இருத்தல் துன்பமாம். திகிரிப்படையை உடையவனாகிய மாயோனை மறத்தல் துன்பமாம். அவ்வாறே சக்தியான் வேற்படையை உடையவனாகிய முருகக் கடவுளின் திருவடிகளைத் தொழாதார்க்குத் துன்பம் உண்டாகும்.



நூல் தொகு
பாடல்: 01 (பந்தம்...) தொகு
பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா;
தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா;
அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா; ஆங்கு இன்னா,
மந்திரம் வாயா விடின். 1

பந்தம் - சுற்றம் வனப்பு - அழகு

சுற்றமில்லாத இல்வாழ்க்கையான் அழகு துன்பமாம். தந்தையில்லாத புதல்வனின் அழகு துன்பமாம். துறவோர் வீட்டிலிருந்து உண்ணுதல் துன்பமாம். அவ்வாறே மந்திரங்கள் பயன் தராவிட்டால் துன்பமாம்.

பாடல்: 02 (பார்ப்பார்...) தொகு
பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா;
ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா;
பாத்து இல் புடைவை உடை இன்னா; ஆங்கு இன்னா
காப்பு ஆற்றா வேந்தன் உலகு. 2

இல் - மனையில் புகல் - நுழைதல்

பார்ப்பாருடைய வீட்டில் நாயும், கோழியும் இருத்தல் துன்பமாம். கட்டிய மனைவி கணவனுக்கு அடங்காமை துன்பமாம். பகுப்பு இல்லாத புடைவையை உடுத்தல் துன்பமாம். அவ்வாறே காப்பாற்ற அரசன் இல்லாத நாடு துன்பமாகும்.

பாடல்: 03 (கொடுங்கோல்) தொகு
கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;
நெடுநீர்ப் புணை இன்றி நீந்துதல் இன்னா;
கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
தடுமாறி வாழ்தல் உயிர்க்கு. 3

நெடுநீர் - கடல் கடுமொழி - வன்சொல்

கொடுங்கோல் அரசனது கீழ் வாழ்தல் துன்பமாம். தெப்பம் இல்லாமல் பெரிய ஆற்றினைக் கடந்து செல்லுதல் துன்பமாம். வன்சொல் கூறுவோரது தொடர்பு துன்பமாம். உயிர்கள் மனம் தடுமாறி வாழ்தல் துன்பமாம்.

Tuesday, 5 December 2017

நாலாயிரதிவ்யபிரபந்தம்

நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
நாலாயிர திவ்விய பிரபந்தம் பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக, தமிழ்மறையாக கொண்டாடப்படுகிறது.

கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுக்குள் வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் 12 பேரினால் இயற்றப்பட்ட இந்த பாடல்களை, 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் என்பார் ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் எனத் தொகுத்தார். பின்னர் வந்த மணவாளமாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் பிரபந்தத்தோடு, திருவரங்கத்தமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என அழைக்கும்படி அருளினார்.

திவ்ய எனும் சொல் "மேலான" என்றும் பிரபந்தம் எனும் சொல் பலவகைபாடல்தொகுப்பினையும் குறிக்கும்.

இந்த நூல் - ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம், திராவிட பிரபந்தம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசும் வைணவர்கள் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் பேசும் வைணவர்களாலும் இன்றும் தினமும் படிக்கப்பட்டு வருகிறது என்பது இதன் சிறப்பு. இது,

முதலாயிரம்-----------947 பாடல்கள்

பெரிய திருமொழி----1134 பாடல்கள்

திருவாய்மொழி------1102 பாடல்கள்

இயற்பா---------------817 பாடல்கள்

என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பிரபந்தங்கள் தொகு

திவ்விய பிரபந்தங்கள் 24 வகைப்படும்

திருப்பல்லாண்டு
பெரியாழ்வார் திருமொழி
திருப்பாவை
நாச்சியார் திருமொழி
பெருமாள் திருமொழி
திருச்சந்த விருத்தம்
திருமாலை
திருப்பள்ளி எழுச்சி
அமலனாதிபிரான்
கண்ணிநுண்சிறுத்தாம்பு
பெரிய திருமொழி
திருக்குறுந்தாண்டகம்
திருநெடுந்தாண்டகம்
முதல் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதி
நான்முகன் திருவந்தாதி
திருவிருத்தம்
திருவாசிரியம்
பெரிய திருவந்தாதி
திருஎழுகூற்றிருக்கை
சிறிய திருமடல்
பெரிய திருமடல்
இராமானுச நூற்றந்தாதி

Monday, 4 December 2017

நாயன்மார்கள்

நாயன்மார் பட்டியல்
நாயன்மார் என்போர் பெரிய புராணத்தில் குறிப்படப்படுகின்ற 63 சிவனடியார்கள் ஆவார். இவர்களின் வரலாற்றினை பெரிய புராணத்தில் சேக்கிழார் தொகுத்துள்ளார். இவர்களை அறுபத்து மூவர் என்றும் அழைப்பர்.

'
எண் பெயர் குலம் பூசை நாள் நின்ற நெறி
1 அதிபத்தர் பரதவர் ஆவணி ஆயில்யம்
2 அப்பூதியடிகள் அந்தணர் தை சதயம்
3 அமர்நீதி நாயனார் வணிகர் ஆனி பூரம்
4 அரிவட்டாயர் வேளாளர் தை திருவாதிரை
5 ஆனாய நாயனார் இடையர் கார்த்திகை ஹஸ்தம்
6 இசைஞானியார் ஆதி சைவர் சித்திரை சித்திரை
7 இடங்கழி நாயனார் வேளிர்[1] ஐப்பசி கார்த்திகை
8 இயற்பகை நாயனார் வணிகர் மார்கழி உத்திரம்
9 இளையான்குடிமாறார் வேளாளர் ஆவணி மகம்
10 உருத்திர பசுபதி நாயனார் அந்தணர் புரட்டாசி அசுவினி
11 எறிபத்த நாயனார் மரபறியார் மாசி ஹஸ்தம்
12 ஏயர்கோன் கலிகாமர் வேளாளர் ஆனி ரேவதி
13 ஏனாதி நாதர் சான்றார் புரட்டாசி உத்திராடம்
14 ஐயடிகள் காடவர்கோன் காடவர் ஐப்பசி மூலம்
15 கணநாதர் அந்தணர் பங்குனி திருவாதிரை
16 கணம்புல்லர் செங்குந்தர் [2][3]் கார்த்திகை கார்த்திகை
17 கண்ணப்பர் வேடர் தை மிருகசீருஷம்
18 கலிய நாயனார் செக்கார் ஆடி கேட்டை
19 கழறிற்றறிவார் மரபறியார்-அரசன் ஆடி சுவாதி
20 கழற்சிங்கர் மரபறியார்-அரசன் வைகாசி பரணி
21 காரி நாயனார் அந்தணர் மாசி பூராடம்
22 காரைக்கால் அம்மையார் வணிகர் பங்குனி சுவாதி
23 குங்கிலியகலையனார் அந்தணர் ஆவணி மூலம்
24 குலச்சிறையார் மரபறியார் ஆவணி அனுஷம்
25 கூற்றுவர் களப்பாளர் ஆடி திருவாதிரை
26 கலிக்கம்ப நாயனார் வணிகர் தை ரேவதி
27 கோச்செங்கட் சோழன் மரபறியார்-அரசன் மாசி சதயம்
28 கோட்புலி நாயனார் வேளாளர் ஆடி கேட்டை
29 சடைய நாயனார் ஆதி சைவர் மார்கஇசைழி திருவாதிரை
30 சண்டேஸ்வர நாயனார் அந்தணர் தை உத்திரம்
31 சக்தி நாயனார் வேளாளர் ஐப்பசி பூரம்
32 சாக்கியர் வேளாளர் மார்கழி பூராடம்
33 சிறப்புலி நாயனார் அந்தணர் கார்த்திகை பூராடம்
34 சிறுதொண்டர் மாமாத்திரர் சித்திரை பரணி
35 சுந்தரமூர்த்தி நாயனார் ஆதி சைவர் ஆடிச் சுவாதி
36 செருத்துணை நாயனார் வேளாளர் ஆவணி பூசம்
37 சோமசிமாறர் அந்தணர் வைகாசி ஆயிலியம்
38 தண்டியடிகள்
செங்குந்தர் [4][5]

பங்குனி சதயம்
39 திருக்குறிப்புத் தொண்டர் ஏகாலியர் சித்திரை சுவாதி
40 திருஞானசம்பந்தமூர்த்தி அந்தணர் வைகாசி மூலம்
41 திருநாவுக்கரசர் வேளாளர் சித்திரை சதயம்
42 திருநாளை போவார் புலையர் புரட்டாசி ரோகிணி
43 திருநீலகண்டர் குயவர் தை விசாகம்
44 திருநீலகண்ட யாழ்ப்பாணர் பாணர் வைகாசி மூலம்
45 திருநீலநக்க நாயனார் அந்தணர் வைகாசி மூலம்
46 திருமூலர் இடையர் ஐப்பசி அசுவினி
47 நமிநந்தியடிகள் அந்தணர் வைகாசி பூசம்
48 நரசிங்க முனையர் முனையர் புரட்டாசி சதயம்
49 நின்றசீர் நெடுமாறன் அரசர் ஐப்பசி பரணி
50 நேச நாயனார் சாலியர் பங்குனி ரோகிணி
51 புகழ்சோழன் மரபறியார்-அரசன் ஆடி கார்த்திகை
52 புகழ்த்துணை நாயனார் ஆதி சைவர் ஆனி ஆயிலியம்
53 பூசலார் அந்தணர் ஐப்பசி அனுஷம்
54 பெருமிழலைக் குறும்பர் குறும்பர் ஆடி சித்திரை
55 மங்கையர்க்கரசியார் மரபறியார்-அரசர் சித்திரை ரோகிணி
56 மானக்கஞ்சாற நாயனார் வேளாளர் மார்கழி சுவாதி
57 முருக நாயனார் அந்தணர் வைகாசி மூலம்
58 முனையடுவார் நாயனார் வேளாளர் பங்குனி பூசம்
59 மூர்க்க நாயனார் வேளாளர் கார்த்திகை மூலம்
60 மூர்த்தி நாயனார் வணிகர் ஆடி கார்த்திகை
61 மெய்ப்பொருள் நாயனார் வேளாளர் கார்த்திகை உத்திரம்
62 வாயிலார் நாயனார் வேளாளர் மார்கழி ரேவதி
63 விறன்மிண்ட நாயனார் வேளாளர் சித்திரை திருவாதிரை
உசாத்துணை நூல்கள் தொகு

துரை இராஜாராம், திருமூலர் வாழ்வும் வாக்கும், நர்மதா பதிப்பகம்
↑ சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய திருத்தொண்டத் தொகை-கடல் சூழ்ந்த சருக்கம்-இடங்கழி நாயனார் புராணம் பாடல் எண்:3
↑ புகழேந்திப் புலவர் இயற்றிய திருக்கை வழக்கம்- கலிவெண்பா- கண்ணி எண்:85
↑ காஞ்சி வீர பத்திர தேசிகர் இயற்றிய செங்குந்த சிலாக்கியர் மாலை- பாடல் எண்:26
↑ புகழேந்திப் புலவர் இயற்றிய திருக்கை வழக்கம்- கலிவெண்பா- கண்ணி எண்:86
↑ காஞ்சி வீர பத்திர தேசிகர் இயற்றிய செங்குந்த சிலாக்கியர் மாலை- பாடல் எண்:27

Sunday, 3 December 2017

திருவருட்பா

திருவருட்பா
திருவருட்பா என்பது வள்ளலார் பாடிய 5818 பாடல்களின் தொகுப்பாகும். ஆசிரிய விருத்த நடையில் பாடப்பட்டுள்ள இப்பாடல்கள் ஆறு தொகுப்புகளாக (இத்தொகுப்புகள் திருமுறை எனவும் அவரது தொண்டர்களால் வழங்கப்படுகின்றன, எனினும் சைவத்திருமுறைகளான பன்னிரெண்டு திருமுறைகள் வேறு.) தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்கள் தம்முடைய சுய அனுபவங்களையும் ஆன்மீக பெரு உணர்வையும் விளம்புவன என்றும் அவற்றை வணிக முறையில் பதிப்பிக்க வேண்டாம் என்றும் வள்ளலார் கேட்டுக்கொண்டார். எனினும், வள்ளலாரின் தொண்டர்கள் அவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி இப்பாடல்களை பதிப்பிப்பதற்கான அனுமதியைப் பெற்றனர்.

வெளி இணைப்புகள் தொகு

திருவருட்பா பாடல்கள் தரும் வலைப்பக்கம்
வள்ளலார்.ஆர்க்
திருவருட்பா பாடல்கள் pdf வடிவில் தரும் வலைப்பக்கம்

Friday, 1 December 2017

நம்ஆழ்வார்

கோ. நம்மாழ்வார்
இயற்கை அறிவியலாளர்
கோ. நம்மாழ்வார் (06 ஏப்ரல் 1938 - 30 திசம்பர் 2013) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு சிற்றூரில்[1] பிறந்த இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை கற்றவர். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர். வானகம், குடும்பம் அமைப்பு[2] உட்பட பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராக இருந்தார்.

கோ. நம்மாழ்வார்

கோ. நம்மாழ்வார்
பிறப்பு ஏப்ரல் 6, 1938
இளங்காடு, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம்
இறப்பு திசம்பர் 30, 2013 (அகவை 75)
அத்திவெட்டி, தஞ்சாவூர் மாவட்டம்
தேசியம் இந்தியர்
கல்வி அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
அறியப்படுவது இயற்கை அறிவியலாளர்
30 திசம்பர் 2013 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்காடு சிற்றூரில்) [3][4]மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்[5]

வரலாறு தொகு

நம்மாழ்வார், தஞ்சை மாவட்டத்தில் 1938இல் பிறந்தார். தந்தை பெயர் ச கோவிந்தசாமி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2007இல் காந்திகிராம பல்கலைக்கழகம் அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் தந்தது. கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார். 1963ஆம் ஆண்டு முதல் 1969ஆம் ஆண்டு வரை அவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி, மசனோபு ஃபுக்குவோக்காவால் ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலாளர் ஆனார் நம்மாழ்வார்.

எதிர்த்துப் போராடியவை தொகு

பூச்சி கொல்லிகள்
மீத்தேன் வாயு திட்டம், இந்தியா
மரபணு சோதனைகள்
பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி
வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்கள் இறக்குமதி
விவசாய நிலங்களை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துதல்
களப்பணிகள் தொகு

சுனாமியினால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட நிலங்கள் சீரமைப்பு[6]
இந்தோனேசியாவில் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதியில் 30 மாதிரி பண்ணைகள் அமைத்தல்
60 க்கும் மேற்பட்ட கரிம விவசாய பயிற்சி மையங்களை தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் நிறுவினார்.
மீத்தேன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தார். [7]
"தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்' என்ற அமைப்பினைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றையும் கால்நடையாக எட்டி, அங்கு கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தினார். "பேரிகை' என்றொரு இயற்கை உழவாண்மை வாழ்வியல் மாத இதழை வெளிட்டார்.

Thursday, 30 November 2017

நந்திகலம்பகம்

நந்திக் கலம்பகத்தின் உறுப்புகள்
நண்பர்களே! நந்திக் கலம்பகம் என்ற நூலின் துணையுடன் கலம்பக இலக்கியத்தின் உறுப்புகள் சிலவற்றைக் காண்போமா?
4.3.1 புயம்

கலம்பக இலக்கியத்துள் இடம் பெறும் உறுப்புகளில் ஒன்று புயம் என்பது ஆகும். புயம் என்றால் தோள் என்று பொருள். நூலினுள் இடம் பெறும் தலைவனின் புயத்தின் அழகையும் ஆற்றலையும் புகழ்ந்து கூறுவதாக இந்த உறுப்பு அமைகின்றது. முத்துவீரியம் என்னும் பாட்டியல் நூல் புயம் என்ற உறுப்பை வாகு, வகுப்பு என்கின்றது. இன்னொரு பாட்டியல் நூல் ஆகிய பிரபந்த தீபிகை இந்த உறுப்பைப் புய வகுப்பு என்கின்றது.

நந்திக் கலம்பகத்தில் புயம் என்ற உறுப்பு தோள் வகுப்பு என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது. இந்த உறுப்பு அமையும் பாடல் இதோ தரப்படுகிறது. தோள் வகுப்பு என்பதற்குத் தோளின் பல சிறப்புகளை வகைப்படுத்திக் கூறுதல் என்று பொருள் கொள்ளலாம்.
மறமதம் கரிதிசை நிறுவின
     மணிநகை யவர்மனம் நகுவன
விறலர சர்கள்மனம் நெகிழ்வன
     விரைமலர் களிமுலை பொருவன
திறலுடை யனதொடை புகழ்வன
     திகழொளி யனபுகழ் ததைவன
நறுமல ரணியணி முடியன
     நயவர நினதிரு புயமதே
(நந்.கலம்பகம் - 11)


(மறம் = வலிமை; கரி = யானை; நிறுவன = நிற்கச் செய்தன; நகையவர் = பற்களை உடைய பெண்கள்; நெகிழ்வன = மலர்ச் செய்வன; விறல் = வெற்றி; விரை = மணம்; பொருவன = போர் செய்வன; தொடை = பாட்டு; ததைவன = நெருங்கும் தன்மை உடையன; நயவர = நன்மை பொருந்தியவனே!)
இனி, இந்தப் பாடலில் நந்திவர்மனின் தோளின் அழகும் வலிமையும் எவ்வாறு புகழப் படுகின்றன என்று பார்ப்போம்.




நந்திவர்மனின் தோள்கள் வலிமையும் மதமும் உடைய யானைகளை அந்த அந்தத் திசைகளில் நிற்கச் செய்யும் வல்லமை உடையன. முத்துகளைப் போன்ற பற்களை உடைய பெண்களின் மனத்தை மலரச் செய்வன. வெற்றியை உடைய அரசர்களின் மனத்தை அச்சம் கொள்ளச் செய்வன. மணம் நிறைந்த மாலையை அணிந்த பெண்களின் மார்புகளுடன் போராடுவன. பளபளப்பு உடையன. புலவர்களால் பாராட்டப் பெறுவன. ஒளி நிறைந்தன. அணிகள் அணிந்து உயர்ச்சி பெற்ற மேலிடம் உள்ளன என்று புகழப்படுகின்றன.

இந்தப் பாடலில் வரும் அடிகளைப் பாருங்கள். சிறு சிறு சொற்றொடர்களாக அமைந்து இன்பம் தருகின்றன. பெண்களின் பற்களுக்கு முத்துகள் உவமை ஆகக் கூறப்படுகின்றன.

இந்தப் பாடலில் நந்திவர்மனின் தோள்களின் ஆற்றல், வெற்றிச் சிறப்பு, அழகு, ஒளி, புகழ் என்பன கூறப்படுகின்றன. பெண்களுக்கு இன்பம் கொடுக்கும் தோள்கள். பகைவர்களுக்கு அச்சம் செய்யும் தோள்கள் என்று தோள்களின் மென்மையும் வலிமையும் புகழப்படுகின்றன. இவ்வாறு தோள்களின் பெருமைகளைக் கூறும் உறுப்பாகத் தோள் வகுப்பு என்ற உறுப்பு அமைகின்றது.

Tuesday, 28 November 2017

திருமுறைகள்

துணைப் பகுப்புகள்
இந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.


► அந்தாதிகள்‎ (25 பக்.)

► குறவஞ்சிகள்‎ (8 பக்.)

► சதகங்கள்‎ (3 பக்.)

► பள்ளு‎ (6 பக்.)
"சிற்றிலக்கிய வகைகள்" பகுப்பிலுள்ள கட்டுரைகள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 145 பக்கங்களில் பின்வரும் 145 பக்கங்களும் உள்ளன.

*
சிற்றிலக்கிய வகை

அகப்பொருட்கோவை
அங்கமாலை
அட்டமங்கலம்
அநுராகமாலை
அரசன் விருத்தம்
அரசாங்க மாலை
அலங்காரபஞ்சகம்
அனுராகமாலை

ஆடாமணி
ஆற்றுப்படை

இணைமணி மாலை
இணைமணிமாலை
இயன்மொழி வாழ்த்து
இரட்டைநாக பந்தம்
இரட்டைமணிமாலை
இருபா இருபது (சிற்றிலக்கிய வகை)
இலட்சுமி விலாசம்

உலா (இலக்கியம்)
உலாமடல்
உழத்திப்பாட்டு
உழிஞை மாலை
உழிஞைமாலை (பாட்டியல்)
உற்பவமாலை

ஊர் நேரிசை
ஊர் விருத்தம்
ஊர் வெண்பா
ஊரின்னிசை

எண்செய்யுள்

ஐந்திணைச் செய்யுள்

ஒருபா ஒருபது
ஒலியந்தாதி
ஒன்பான்மணிமாலை

கடிகை வெண்பா
கடைநிலை
கண்படைநிலை
கரந்தை மாலை
கலம்பக மாலை
கலம்பகம் (இலக்கியம்)
காஞ்சி மாலை
காஞ்சிமாலை (பாட்டியல்)
காப்புமாலை
குடை விருத்தம்
குலோதயமாலை
குழமகன் (பாட்டியல்)
குறத்திப்பாட்டு
குறம்
குறியறி சிந்து
கூடன்மாலை
கேசாதிபாதம்
கைக்கிளை (சிற்றிலக்கியம்)
கைக்கிளை இலக்கியம்
கையறுநிலை
கோல் விருத்தம்
கோவை (இலக்கியம்)

சடானனம்
சாதகம்
சிந்து (சிற்றிலக்கியம்)
சிலை விருத்தம்
சிறுகாப்பியம்
சின்னப்பூ
சீட்டுக்கவி
செருக்கள வஞ்சி
செருக்களவஞ்சி
செவியறிவுறூஉ

தசப்பிராதுற்பவம்
தசாங்கத்தயல்
தசாங்கப்பத்து
தடாக சிங்காரம்
தண்டகமாலை
தாண்டகம்
தாரகைமாலை
தானைமாலை
திருஎழுகூற்றிருக்கை
தும்பைமாலை (பாட்டியல்)
துயிலெடை நிலை
துனி விசித்திரம்
தூது (பாட்டியல்)
தெய்வக் கையுறை

நடுவெழுத்து அலங்காரம்
நயனப்பத்து
நவமணிமாலை
நாடு விருத்தம்
நாமமாலை
நாழிகை வெண்பா
நாழிகைவெண்பா
நான்மணிமாலை
நானாற்பது (பாட்டியல்)
நூற்றந்தாதி
நொச்சி மாலை
நொச்சிமாலை (பாட்டியல்)

பண்ணை விசித்திரம்
பதிகம் (சிற்றிலக்கியம்)
பதிற்றந்தாதி
பரணி (இலக்கியம்)
பரி விருத்தம்
பருவமாலை
பல்சந்தமாலை
பள்ளு
பன்மணிமாலை
பாதாதிகேசம்
பிள்ளைத்தமிழ்
புகழ்ச்சி மாலை
புகழ்ச்சிமாலை
புறநாட்டுச் செய்கை
புறநிலை
புறநிலைவாழ்த்து
பெயர் நேரிசை
பெயரின்னிசை
பெருமகிழ்ச்சிமாலை
பெருமங்கலம்
பொய்ம்மொழி அலங்காரம்
போர்க்கெழு வஞ்சி
போர்க்கெழுவஞ்சி

மங்கல வெள்ளை
மங்கலவள்ளை
மாலை (சிற்றிலக்கியம்)
முதுகாஞ்சி
மும்மணிக்கோவை
மும்மணிமாலை
முரண்வஞ்சி
முலைப்பத்து
மெய்க்கீர்த்தி வஞ்சி
மெய்க்கீர்த்திமாலை

யானை விருத்தம்

வசந்தமாலை
வஞ்சி மாலை
வண்ணம் (சிற்றிலக்கியம்)
வரலாற்று வஞ்சி
வருக்கக் கோவை
வருக்கக்கோவை
வருக்கமாலை
வளமடல்
வாகை மாலை
வாகைமாலை (பாட்டியல்)
வாதோரணமஞ்சரி
வாயுறைவாழ்த்து
வாள் விருத்தம்
விலாசம் (சிற்றிலக்கியம்)
விளக்குநிலை
வீரவெட்சிமாலை
வெட்சி மாலை
வெட்சிக்கரந்தை மஞ்சரி
வேல் விருத்தம்
வேனில் மாலை

Monday, 27 November 2017

சிற்றிலக்கியங்கள்

துணைப் பகுப்புகள்
இந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.


► அந்தாதிகள்‎ (25 பக்.)

► குறவஞ்சிகள்‎ (8 பக்.)

► சதகங்கள்‎ (3 பக்.)

► பள்ளு‎ (6 பக்.)
"சிற்றிலக்கிய வகைகள்" பகுப்பிலுள்ள கட்டுரைகள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 145 பக்கங்களில் பின்வரும் 145 பக்கங்களும் உள்ளன.

*
சிற்றிலக்கிய வகை

அகப்பொருட்கோவை
அங்கமாலை
அட்டமங்கலம்
அநுராகமாலை
அரசன் விருத்தம்
அரசாங்க மாலை
அலங்காரபஞ்சகம்
அனுராகமாலை

ஆடாமணி
ஆற்றுப்படை

இணைமணி மாலை
இணைமணிமாலை
இயன்மொழி வாழ்த்து
இரட்டைநாக பந்தம்
இரட்டைமணிமாலை
இருபா இருபது (சிற்றிலக்கிய வகை)
இலட்சுமி விலாசம்

உலா (இலக்கியம்)
உலாமடல்
உழத்திப்பாட்டு
உழிஞை மாலை
உழிஞைமாலை (பாட்டியல்)
உற்பவமாலை

ஊர் நேரிசை
ஊர் விருத்தம்
ஊர் வெண்பா
ஊரின்னிசை

எண்செய்யுள்

ஐந்திணைச் செய்யுள்

ஒருபா ஒருபது
ஒலியந்தாதி
ஒன்பான்மணிமாலை

கடிகை வெண்பா
கடைநிலை
கண்படைநிலை
கரந்தை மாலை
கலம்பக மாலை
கலம்பகம் (இலக்கியம்)
காஞ்சி மாலை
காஞ்சிமாலை (பாட்டியல்)
காப்புமாலை
குடை விருத்தம்
குலோதயமாலை
குழமகன் (பாட்டியல்)
குறத்திப்பாட்டு
குறம்
குறியறி சிந்து
கூடன்மாலை
கேசாதிபாதம்
கைக்கிளை (சிற்றிலக்கியம்)
கைக்கிளை இலக்கியம்
கையறுநிலை
கோல் விருத்தம்
கோவை (இலக்கியம்)

சடானனம்
சாதகம்
சிந்து (சிற்றிலக்கியம்)
சிலை விருத்தம்
சிறுகாப்பியம்
சின்னப்பூ
சீட்டுக்கவி
செருக்கள வஞ்சி
செருக்களவஞ்சி
செவியறிவுறூஉ

தசப்பிராதுற்பவம்
தசாங்கத்தயல்
தசாங்கப்பத்து
தடாக சிங்காரம்
தண்டகமாலை
தாண்டகம்
தாரகைமாலை
தானைமாலை
திருஎழுகூற்றிருக்கை
தும்பைமாலை (பாட்டியல்)
துயிலெடை நிலை
துனி விசித்திரம்
தூது (பாட்டியல்)
தெய்வக் கையுறை

நடுவெழுத்து அலங்காரம்
நயனப்பத்து
நவமணிமாலை
நாடு விருத்தம்
நாமமாலை
நாழிகை வெண்பா
நாழிகைவெண்பா
நான்மணிமாலை
நானாற்பது (பாட்டியல்)
நூற்றந்தாதி
நொச்சி மாலை
நொச்சிமாலை (பாட்டியல்)

பண்ணை விசித்திரம்
பதிகம் (சிற்றிலக்கியம்)
பதிற்றந்தாதி
பரணி (இலக்கியம்)
பரி விருத்தம்
பருவமாலை
பல்சந்தமாலை
பள்ளு
பன்மணிமாலை
பாதாதிகேசம்
பிள்ளைத்தமிழ்
புகழ்ச்சி மாலை
புகழ்ச்சிமாலை
புறநாட்டுச் செய்கை
புறநிலை
புறநிலைவாழ்த்து
பெயர் நேரிசை
பெயரின்னிசை
பெருமகிழ்ச்சிமாலை
பெருமங்கலம்
பொய்ம்மொழி அலங்காரம்
போர்க்கெழு வஞ்சி
போர்க்கெழுவஞ்சி

மங்கல வெள்ளை
மங்கலவள்ளை
மாலை (சிற்றிலக்கியம்)
முதுகாஞ்சி
மும்மணிக்கோவை
மும்மணிமாலை
முரண்வஞ்சி
முலைப்பத்து
மெய்க்கீர்த்தி வஞ்சி
மெய்க்கீர்த்திமாலை

யானை விருத்தம்

வசந்தமாலை
வஞ்சி மாலை
வண்ணம் (சிற்றிலக்கியம்)
வரலாற்று வஞ்சி
வருக்கக் கோவை
வருக்கக்கோவை
வருக்கமாலை
வளமடல்
வாகை மாலை
வாகைமாலை (பாட்டியல்)
வாதோரணமஞ்சரி
வாயுறைவாழ்த்து
வாள் விருத்தம்
விலாசம் (சிற்றிலக்கியம்)
விளக்குநிலை
வீரவெட்சிமாலை
வெட்சி மாலை
வெட்சிக்கரந்தை மஞ்சரி
வேல் விருத்தம்
வேனில் மாலை

Sunday, 26 November 2017

தொல்காப்பியம்

தொல்காப்பியம் (ஆங்கிலம்: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.[1] பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.

தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின.

தொல்காப்பியர் காலம் தொகு

தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்துள்ள புலவர் பனம்பாரனார் தொல்காப்பியர் காலத்தவர். அவர் தம் பாயிர உரையில் 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்று குறிப்பிடுகிறார். ஐந்திரம் என்பது சமற்கிருத இலக்கணநூல். இது பாணினி எழுதிய வடமொழி இலக்கண நூலுக்குக் காலத்தால் முற்பட்டது. தொல்காப்பியர் காலத்தில் பாணினியம் தோன்றவில்லை. எனவே தொல்காப்பியர் பாணினிக்கு முந்திய நூலான ஐந்திரம் என்னும் நூலையும் அறிந்திருந்தார். தமிழில் இருந்த 'முந்துநூல்'(அகத்தியம்) கண்டிருந்தார். எனவே தொல்காப்பியர் பாணினியின் காலமாகச் சொல்லப்படும் கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்பது தெளிவு.

ஐந்திரம், தொல்காப்பியம் ஆகிய நூல்களைப் பற்றிப் பர்னல் என்பவர் ஒப்பிட்டு ஆராய்ந்தார். இந்திரன் செய்தது ஐந்திரம் என்றனர்.[சான்று தேவை] இந்த இந்திரன் சமணமதத்தைத் தோற்றுவித்த இந்திரன் என இவர் கொண்டார்.[சான்று தேவை] விளைவு, சமணர் காலத்துக்குப் பிற்பட்டவர் தொல்காப்பியர் எனக் காட்டலானார். உண்மையில் ஐந்திரம் என்னும் நூல் ஐந்திரன் என்பவரால் இயற்றப்பட்டது என்பதே பொருத்தமானது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது பர்னலின் விளக்கம் தொல்காப்பியர் காலத்தைக் கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முன்னதாக்கிவிடும். தோற்றம் என்ற தலைப்பில் சான்றுடன் கூடிய தொல்காப்பியர் காலம் இணைக்கப்பட்டுள்ளது.

செம்மொழி தமிழாய்வு நடு நிறுவனம் தொல்காப்பியர் ஆண்டினை கி.மு 711 என்று பொருத்தியது.

தொல்காப்பியம் - பெயர் விளக்கம் தொகு


தொல்காப்பியம் எழுதப்பட்ட ஓலைச்சுவடி
தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம், தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் என்னும் இருவேறு கருத்துக்கள் அறிஞர்களிடையே நிலவிவருகின்றன.

தொன்மை + காப்பியம் = தொல்காப்பியம்.

மிகவும் தொன்மை(பழமை)யான காப்பிய நூல் என்பதாலும் இது "தொல்காப்பியம்" என்றழைக்கப்படுகிறது.

தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் தொகு
தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதிய இளம்பூரணர், தொல்காப்பியர் கூறும் ஆகுபெயர்களில் ஒன்றான 'வினைமுதல் உரைக்கும் கிளவி என்பதற்குத் 'தொல்காப்பியம்' என்னும் எடுத்துக்காட்டினைத் தந்துள்ளார். (2-3-31) இது தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் என்னும் கருத்தை வலியுறுத்துகிறது.

அகத்தியர் செய்தது அகத்தியம். பன்னிருவர் செய்தது பன்னிரு படலம்.ஐந்திரன் செய்தது ஐந்திரம். காக்கை பாடினியார் செய்தது காக்கைபாடினியம். பல்காப்பியனார் செய்தது பல்காப்பியம். திருமூலர் செய்தது திருமூலம். இப்படித் தொல்காப்பியத்துக்கு முந்திய இலக்கண நூலும், தொல்காப்பியத்தை முதல்-நூலாகக் கொண்ட தமிழின் பழமையான இலக்கண நூல்களில் பலவும், பிறவும் ஆசிரியராலேயே பெயர் பெற்றுள்ளன. இந்த வகையில் தொல்காப்பியர் செய்தது தொல்காப்பிம் எனக் கொள்வதே முறைமை.

கபிலர், தொல்கபிலர், பரணர், வன்பரணர் என வேறுபடுத்தப்படும் புலவர்களை நாம் அறிவோம். அதுபோலக் காப்பியனார் என்னும் பெயரில் தொல்காப்பியனார், பல்காப்பியனார், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்கள் இருந்துவந்ததை வரலாறு காட்டுகிறது.

தொல்காப்பியப் பாயிரம் “புலம் தொகுத்தோன் … ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமையோன்” என்று கூறுகிறது. இதில் தொல்காப்பியன் புலம்(=இலக்கணம்) தொகுத்தான் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இவற்றை விடுத்துத் தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் எனக் கூறுவோர் வரலாற்றை எண்ணிப்பார்க்க வேண்டும்.

தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் தொகு
இயம்புவது "இயம்" ஆகும். இயத்துக்குக் காப்புத் (காவல்) தருவது "காப்பியம்". தொன்மையான காப்பியம் ஆதலால் இது தொல்காப்பியம் ஆனது.[2]

தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் எனப்பட்டார். நன்னூல் செய்த பவணந்தி முனிவரை நாம் நன்னூலார் என வழங்குவது போன்றதே இது.

தோற்றம் தொகு

தொல்காப்பியப் பாயிரம் இவரை: "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறைந்த படிமையோன்" என்று குறிப்பிடுகிறது. தொல்காப்பியர் 'புலம்' தொகுத்தார் என்றும் தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார் குறிப்பிடுகிறார். புலம் என்றும் புலன் என்றும் நாம் அறிவுக்கு அடிப்படையாக அமைந்துள்ள நிலைகளங்களைக் குறிப்பிடுகிறோம். அது போல மொழி

Saturday, 25 November 2017

திருவள்ளுவமாலை

திருவள்ளுவமாலை
திருவள்ளுவ மாலை எனும் நூல் திருக்குறளின் பெருமைகளையும், திருவள்ளுவரின் பெருமைகளையும் புகழ்ந்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். ஒருநூலுக்கோ, நூலாசிரியனுக்கோ இப்படி எல்லாப் புலவர்களும் வரிசை கட்டிப் புகழாரம் தொடுத்தளித்தது, திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் மட்டுமே கிடைத்த முதற் சிறப்பு. திருவள்ளுவமாலையில் ஐம்பத்தைந்து புலவர்களின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இடைக்காடர், ஔவையார் இருவரும் குறட்பாவிலும், ஏனைய ஐம்பத்து மூவரும் வெண்பாக்களாலும், வள்ளுவரையும் திருக்குறளையும் புகழ்ந்த பாமாலைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.[1]

காலம் தொகு

இதில் உள்ள பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் சார்த்தப்பட்டவை. இந்தத் தொகுப்புநூல் உருவான காலம் கி. பி. 11 ஆம் நூற்றாண்டு.

சான்றுகள்
சங்கப் புலவர்களும் சம காலத்தவர் அல்லர்.
இதில் உள்ள புலவர் பாரதம் பாடிய பெருந்தேவனார், 9ஆம் சூற்றாண்டில் வாழ்ந்தவர்.
புலவர் எண்ணிக்கையில் குழப்பம்.
ஒருவர் பாடிப் பிறர்மேல் சாற்றிய நூல்கள் (திருமூலர் ஞானம், திருவள்ளுவர் ஞானம்)
பிற்காலப் புகழாரம்
இவை தவிர்த்துக் கல்லாடனார், சிவப்பிரகாசர், பாரதியார், பேராசிரியர் மனோன்மணீயம் பெ.சுந்தரனார், கவிமணி, பாரதிதாசன் போன்ற இடைக்கால மற்றும் பிற்காலப் புலவர்களும் திருக்குறளைப் புகழ்ந்து பாடல்கள் இயற்றி உள்ளனர். அவை திருவள்ளுவ மாலையில் இடம் பெறா.

திருவள்ளுவ மாலையிலுள்ள பாடல்கள் தொகு

கற்பனைப் படைப்புகளின் பாடல்கள் தொகு
1 அசரீரி \ சங்கப்பலகையில் திருவள்ளுவரோடு உருத்திரசன்மன் புலவரும் வீற்றிருக்கலாம்.
2 நாமகள் \ முன்பு நான்கு வேதங்களைப் பிரமன் வாயிலிருந்து சொன்னேன். அடுத்து பாரதம் சொன்னேன். இப்போது திருவள்ளுவர் வாயிலிருந்து திருக்குறள் சொல்கிறேன்.
3 இறையனார் \ திருக்குறள் வாடாத கற்பக மலர் போன்றது.

புலவர் பாடல்கள் தொகு
திருக்குறளுக்குப் பெருமை சேர்க்க விரும்பிய ஒரு சிறந்த புலவர் சங்க காலப் புலவர்கள் சிலரது பெயரில் பாடல்கள் எழுதித் தொகுத்துத் தந்த நூலே திருவள்ளுவ மாலை எனபதை ஊன்றெண்ணிப் பார்த்துப் படிப்போர் எளிதாக உணர்ந்துகொள்ள முடியும்.
இவர்கள் திருக்குறளைப் பெரிதும் மதித்துப் போற்றிச் சூட்டியுள்ள புகழாரங்களைத் திருக்குறளுக்குப் புகழாரம் என்னும் பகுதியில் காணலாம்.

திருக்குறளைப் பகுத்துக் காட்டும் பாடல்கள் தொகு
16 நத்தத்தனார் \ 'ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும் பாயிரத்தினோடு பயின்றபின்' வேறு நூலைக் கேட்க வேண்டியதில்லை என்னும்போது பாயிரம் பாடல் 1330-ல் அடங்கவில்லை.
இதன் விரிவை திருக்குறள் பகுப்புக்கள் என்னும் பகுதியில் காணலாம்.

Thursday, 16 November 2017

தேசயவிநாயகம்பிள்ளை

தேசிக விநாயகம் பிள்ளை
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஜூலை 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.

கவிமணி .சி . தேசிக விநாயகம் பிள்ளை
பிறப்பு ஜூலை 27, 1876
தேரூர், கன்னியாக்குமரி மாவட்டம்
இறப்பு செப்டம்பர் 26, 1954 (அகவை 78)
அறியப்படுவது கவிஞர்
பட்டம் கவிமணி
பெற்றோர் சிவதாணுப்பிள்ளை, ஆதிலட்சுமி
வாழ்க்கைத்
துணை உமையம்மை
வாழ்க்கைக் குறிப்பு தொகு

சிவதாணுப்பிள்ளை -ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாக தேசிக விநாயகம் பிறந்தார். இரண்டு பெண்களுக்கு பின் பிறந்த ஆண் மகவுக்கு தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை வைத்தார் சிவதாணுப்பிள்ளை. ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எம். ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். உமையம்மை எனும் பெண்ணை 1901 இல் மணம் முடித்தார். நாஞ்சில் நாட்டார் தன் மனைவியை குட்டி, பிள்ளாய் என்று அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன் மனைவியை தாயி என்று மரியாதையுடன் அழைப்பார். குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன் சிவதாணுவை தனது மகன் போல வளர்த்தார்.[1]. [2].

ஆசிரியர் பணி தொகு

நாகர்கோவிலிலுள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி போன்றவற்றில் ஆசிரியராக 36 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

Wednesday, 15 November 2017

இனியவை நாற்பது

இனியவை நாற்பது
இனியவை நாற்பது
ஆசிரியர் பூதஞ்சேந்தனார்
    புத்தகத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்!

இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள 'நாற்பது' எனமுடியும் பெயர்கொண்ட நான்கு நூல்களில் இரண்டாவதாகும். இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன் ஆவார். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு. இவர் சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் சர்வ சமய நோக்குடையவராயிருந்திருக்க வேண்டும். இவர் பிரமனைத் துதித்திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர் என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத்தாளுவதால் இவர் அந்நூலாசிரியருக்கும் பிந்தியவர் எனலாம். அதனால் இவரது காலம் கி.பி.725-750 எனப்பட்டது.

இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 செய்யுட்களைக் கொண்டது. இவற்றுள், 'ஊரும் கலிமா' எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) பஃறொடை வெண்பா. ஏனைய அனைத்தும் இன்னிசை வெண் பாவினால் ஆக்கப் பட்டுள்ளது. இந்நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள் நான்கே நான்கு தான் உள்ளன(1, 3, 4, 5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன; இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனிக்கத் தக்கது.

வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து 'இனிது' என்ற தலைப்பிட்டு அமைத்திருப்பதால் இஃது 'இனியவை நாற்பது' எனப்பட்டது. இதனை 'இனிது நாற்பது', 'இனியது நாற்பது', 'இனிய நாற்பது' என்றும் உரைப்பர்.

Monday, 13 November 2017

உணவே மருந்து

உணவே மருந்து தொகு

உணவே மருந்து மருந்தே உணவு என்று வாழ்ந்தவர்கள் தமிழர்கள். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தை வாளோடு முன் தோன்றிய மூத்த குடிமக்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில் இருந்து தான் நாகரீகமாக இருந்தாலும் அல்லது உணவு கலாச்சாரமாக இருந்தாலும் உலகம் முழுக்க எடுத்துச் சென்றதற்கான மிகப்பெரிய ஆதாரங்கள் உள்ளது.

சங்க கால இலக்கியங்கள் தொகு
எட்டுத்தொகை,பத்துப்பாட்டு,கலித்தொகை என சங்ககால இலக்கியங்களில்[1] உணவு சார்ந்த மிகப்பெரிய ஆய்வு தமிழர்களுக்கிடையே இருந்தது. தமிழர்கள் உணவே மருந்து ,மருந்தே உணவு என்ற கொள்கையில் முழுமையாக வாழ்ந்தார்கள்.தமிழர்கள் பழங்காலத்தில் பயன்படுத்திய உணவுகள் என்று பார்க்கும் பொழுது சிறுதானியங்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள். அதில் பிரதானமானது வரகு,திணை,குதிரைவாலி,சாமை.இதனைத் தொடர்ந்து சாப்பிட்ட தமிழர்களுக்கு எந்த நோய் நொடியும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமான சுழலில் வாழ்ந்துள்ளார்கள்.

அறிஞர்கள் கருத்து தொகு
பல்வேறு மூலிகைகள்,காய்கனிகள்,கீரைகள்,அவற்றின் தன்மைகள், பயன்கள் ஆகியவற்றை அனைவரும் புரிந்து அதற்கேற்றாற் போல் அன்றாட உணவை உட்கொண்டால் நோய் என்பதற்க்கே இடமில்லை.உணவே பிரம்மன்,உணவிலிருந்தே எல்லா உயிரினங்களுக்கும் உணவாக மாறுவதே இயற்கையின் இயல்பு என உபநிடதங்கள் கூறுவதை வள்ளுவரும்[2],ஏழைகளிடத்தில் இறைவன் உணவின் ரூபமாகத் தோன்றுகிறார் என காந்தியடிகள் போன்றோரும் கூறியது உணவில்லையேல் வாழ்கையே அழியும் என்பதைத் தான் காட்டியுள்ளது.

Sunday, 12 November 2017

யாப்பு

யாப்பு இலக்கண அறிமுகம்

இலக்கியங்களை இயற்றும் போது இரண்டு வகையான ஊடகங்களில் இயற்றுவார்கள். அவற்றில் ஒன்று செய்யுள், மற்றது உரைநடை. பழைய காலத்தில் தமிழ் இலக்கியங்கள் யாவும் செய்யுளிலேயே இயற்றப்பட்டன. செய்யுளில் இயற்றப்பட்ட இலக்கியங்களுக்கும் இலக்கணங்களுக்கும் விளக்கம் கூறுவதற்கே உரைநடை பயன்படுத்தப்பட்டது. இலக்கியம் இயற்றப்பட்ட செய்யுள்களின் அமைப்புப் பற்றிப் படிப்பதே யாப்பு இலக்கணம் ஆகும்.

செய்யுள்களில் பல வகைகள் உள்ளன. செய்யுளின் முக்கியக் கூறாக இருப்பது ஓசை. வெவ்வேறு விதமான ஓசைகளை அடிப்படையாகக் கொண்டு பலவிதமான செய்யுள்கள் உருவாகியுள்ளன. பழைய காலத்தில் இருந்த முக்கியமான செய்யுள் வகைகள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகியவை ஆகும். இவற்றுடன் கலித்துறையும் பழைய காலத்தில் சிறப்பாக விளங்கியது. பக்தி இலக்கியமும் காப்பியங்களும் தோன்றிய காலத்தில் விருத்தம் என்ற செய்யுள் வகை பரவியது. பிற்காலத்தில் சிந்து, கும்மி முதலிய இசைப்பாடல் யாப்புகளிலும் செய்யுள்கள் இயற்றப்பட்டன. யாப்பு இலக்கணத்தில் செய்யுள் பற்றியும் செய்யுளின் உறுப்புகள் பற்றியும் கூறப்படும். அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை யாப்பு இலக்கணத்தின் உறுப்புகள் ஆகும். இந்த உறுப்புகளைப் பற்றியும் ஆசிரியப்பா, வெண்பா, வஞ்சிப்பா, கலிப்பா ஆகிய பாக்களையும் அவற்றின் வகைகளையும் பற்றியும் படிப்பதே யாப்பு இலக்கணம் ஆகும்.

Friday, 10 November 2017

கடற்பயணம்

கடற்பயணம் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்



தமிழ்நாட்டு வாணிக வரலாறு மிகவும் தொன்மை வாய்ந்தது.
உள்நாட்டு வாணிகத்தைவிட அயல்நாட்டு வாணிகத்திலேயே வருவாய் மிகுதி.
அயல்நாட்டு வாணிகத்திலேயே தரைவழியாகச் செய்யும் வாணிகத்தைவிட, நீர் வழியாகச் செய்யும் வாணிகம் பெரும் பொருளைத் தரும்.
அந்நாளில் கடல் வாணிகம் மிகவும் சிறந்திருந்தது.
எகிப்து, பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா, சீனம் போன்ற நாடுகள் தமிழர்களின் பொருள்களை விரும்பிப் பெற்றன.

தமிழரின் கடற்பயணம்:
"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று ஒளவையும், "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று கணியன் பூங்குன்றனாரும் கூறியுள்ளனர். இவையே தமிழர்களின் உலகளாவிய சிந்தனைக்கும் பன்னாட்டுத் தொடர்புக்கும் சான்றுகளாகும்.
தொல்காப்பியம் தமிழர்கள் பிற நாடுகளுக்கு கடற்பயணம் மேற்கொண்டதை "முந்நீர் வழக்கம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
தொல்காப்பிய பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள "பொருள்வயிற் பிரிவு" விளக்குகிறது. இப்பிரிவு "காலில்(தரைவழிப் பிரிதல்) களத்தில் (நீர்வழிப் பிரிதல்) பிரிவு" என இரு வகைப்படும்.
யவனர்: 
தமிழர்கள் கிரேக்கரையும் உரோமானியரையும் "யவனர்" என அழைத்தனர்
கப்பல் கட்டுதல்:
"கலம்செய் கம்மியர்" என ஒருவகைத் தொழிலாளர் தமிழகத்தில் இருந்தனர்.
அவர்களால் பெருங்கப்பல்கள் கட்டப்பட்டன.
புறநானூறு கூறும் உவமை:
நான்கு பக்கமும் நீர் நிரம்பிய கழனிகள் உள்ளன. அதன் நடுவில் தனியாக மதிலோடு கூடிய அரசனது கோட்டை உள்ளது. அக்கோட்டையின் தோற்றமானது நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாகப் புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது.
கடலைக் குறிக்கும் சொற்கள்:
ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பெளவம், பரவை, புணரி.

மரக்கலத்தைக் குறிக்கும் சொற்கள்:
கப்பல், களம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புனை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மதிவை, பஃறி, ஓடம்.
கடலில் செல்லும் பெரிய கலம் நாவாய் எனப்படும்.

Thursday, 9 November 2017

பெரியபுராணம்

பெரியபுராணம்
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.[1] அத்துடன் திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்கச்சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப்பெற்றுள்ளது.[2]

இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆனையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜன் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என பெரியபுராணத்தினை தொடங்கியதாக நம்பப்படுகிறது. இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது.[2]

Tuesday, 7 November 2017

அணி

அணி இலக்கணம்
அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம். அணி பலவகைப்படும். அணி இலக்கணம் கூறும் தொன்மையான நூல் தண்டியலங்காரம் ஆகும். இந்நூலில் தன்மை அணி முதல் பாவிக அணி வரை 35 வகையான அணிவகைகள் பற்றி கூறப்படுகின்றது.[1] அவற்றுள் சில,

பொருள் அணிகள் தொகு

அதிசய அணி(உயர்வு நவிற்சி அணி)
அவநுதியணி
ஆர்வமொழியணி(மகிழ்ச்சி அணி)
இலேச அணி
உதாத்தவணி
ஏதுவணி
ஒட்டணி
ஒப்புமைக் கூட்டவணி
ஒழித்துக்காட்டணி
சங்கீரணவணி
சமாகிதவணி
சிலேடையணி
சுவையணி
தற்குறிப்பேற்ற அணி
தன்மேம்பாட்டுரை அணி
தன்மையணி(தன்மை நவிற்சி அணி,இயல்பு நவிற்சி அணி)
தீவக அணி
நிதரிசன அணி(காட்சிப் பொருள் வைப்பு அணி)
நிரல்நிறை அணி
நுட்ப அணி
பரியாய அணி
பரிவருத்தனை அணி
பாவிக அணி
பின்வருநிலையணி(பொருள் பின்வருநிலையணி, சொற்பொருள் பின்வருநிலையணி)
புகழாப்புகழ்ச்சி அணி
புணர்நிலையணி
மயக்க அணி
மாறுபடுபுகழ்நிலையணி
முன்னவிலக்கணி
வாழ்த்தணி
விசேட அணி(சிறப்பு அணி)
விபாவனை அணி
விரோதவணி
வேற்றுப்பொருள் வைப்பணி
வேற்றுமையணி

Monday, 6 November 2017

பகுபத உருப்பிலக்கணம்

தனிச்சொல்லை மொழியியல் நோக்கில் நன்னூல் பதவியல் என்னும் பகுதியில் அணுகுகிறது. பொருள் தரும் தனிச் சொல்லை அந்த நூல் பதம் எனக் குறிப்பிடுகிறது. பதத்தை அது பகுபதம், பகாப்பதம் என இரு பகுதிகளாக்கிக்கொண்டுள்ளது. பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்பன பகுபத உறுப்புக்கள் ஆகும்.