திருமந்திரம்
திருமந்திரம் என்பது திருமூலரால் எழுதப்பட்ட ஒரு தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இதன் காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு.[1] இது ஒன்பது தந்திரங்களைக் (இயல்கள்) கொண்டது. மூவாயிரம் பாடல்கள் உடையது. சராசரியாக ஒவ்வொரு பாடலும் நான்கு வரிகளாகவும், ஒவ்வொரு வரியும் நான்கு சொற்களைக் கொண்டதாகவும், மொத்தம் 192000 சொற்களைக் கொண்டது. திருமந்திரம் எடுத்துக் கொண்ட பொருளை எளிய சொற்களால் அனைவருக்கும் புரியும்படி திருக்குறளைப்போல் சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறுகிறது.
சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி
சைவத் திருமுறைகள்
1, 2, 3 - தேவாரம்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
4, 5, 6 - தேவாரம்
திருநாவுக்கரசு நாயனார்
7 - தேவாரம்
சுந்தரமூர்த்தி நாயனார்
8 - திருவாசகம், திருக்கோவையார்
மாணிக்க வாசகர்
9 - திருவிசைப்பா, திருப்பல்லாண்டு
திருவிசைப்பா திருமாளிகைத் தேவர் சேந்தனார் கருவூர்த் தேவர் பூந்துருத்தி நம்பிகாடநம்பி கண்டராதித்தர் வேணாட்டடிகள் திருவாலியமுதனார் புருடோத்தம நம்பி சேதிராயர் திருப்பல்லாண்டு சேந்தனார்
10 - திருமந்திரம்
திருமூலர்
11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)
ஆலவாய் உடையார் காரைக்கால் அம்மையார் ஐயடிகள் காடவர்கோன் சேரமான் பெருமான் நக்கீரர் கல்லாடர் கபிலர் பரணர் இளம்பெருமான் அதிராவடிகள் பட்டணத்தடிகள் நம்பியாண்டார்
12 - பெரியபுராணம்
சேக்கிழார்
சைவம் வலைவாசல்
வேதம்,ஆகமம் ஆகிய இரண்டிற்கும் திருமந்திரம் விளக்கம் தருகிறது. இது சைவ ஆகமம் என்றும் போற்றப்படுகிறது. திருமந்திரம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாக பெரியோர்களால் வைக்கப்பட்டுள்ளது. தோத்திரத்திற்குத் திருவாசகம் சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.
திருமந்திரத்தின் முதலாவதாக வைக்கப்பட்டுள்ள ‘கடவுள் வாழ்த்து‘ என்பதன் முதலாவது பாட்டுப் பின்வருமாறு அமைந்துள்ளது;
ஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள்,
நின்றனன் மூன்றினுள், நான்கு உணர்ந்தான், ஐந்து
வென்றனன், ஆறு விரித்தனன், ஏழும்பர்ச்
சென்றனன், தான் இருந்தான் உணர்ந்து எட்டே
திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது. இதனால், பல பாட்டுக்களில் கூறப்பட்டிருப்பவைக்கு, வேறுபட்ட, முரண்பட்ட கருத்துக்கள் கொடுக்கப்பட்ட நிலைதான் காணப்படுகிறது.[2]
திருமந்திரம் என்பது திருமூலரால் எழுதப்பட்ட ஒரு தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இதன் காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு.[1] இது ஒன்பது தந்திரங்களைக் (இயல்கள்) கொண்டது. மூவாயிரம் பாடல்கள் உடையது. சராசரியாக ஒவ்வொரு பாடலும் நான்கு வரிகளாகவும், ஒவ்வொரு வரியும் நான்கு சொற்களைக் கொண்டதாகவும், மொத்தம் 192000 சொற்களைக் கொண்டது. திருமந்திரம் எடுத்துக் கொண்ட பொருளை எளிய சொற்களால் அனைவருக்கும் புரியும்படி திருக்குறளைப்போல் சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறுகிறது.
சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி
சைவத் திருமுறைகள்
1, 2, 3 - தேவாரம்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
4, 5, 6 - தேவாரம்
திருநாவுக்கரசு நாயனார்
7 - தேவாரம்
சுந்தரமூர்த்தி நாயனார்
8 - திருவாசகம், திருக்கோவையார்
மாணிக்க வாசகர்
9 - திருவிசைப்பா, திருப்பல்லாண்டு
திருவிசைப்பா திருமாளிகைத் தேவர் சேந்தனார் கருவூர்த் தேவர் பூந்துருத்தி நம்பிகாடநம்பி கண்டராதித்தர் வேணாட்டடிகள் திருவாலியமுதனார் புருடோத்தம நம்பி சேதிராயர் திருப்பல்லாண்டு சேந்தனார்
10 - திருமந்திரம்
திருமூலர்
11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)
ஆலவாய் உடையார் காரைக்கால் அம்மையார் ஐயடிகள் காடவர்கோன் சேரமான் பெருமான் நக்கீரர் கல்லாடர் கபிலர் பரணர் இளம்பெருமான் அதிராவடிகள் பட்டணத்தடிகள் நம்பியாண்டார்
12 - பெரியபுராணம்
சேக்கிழார்
சைவம் வலைவாசல்
வேதம்,ஆகமம் ஆகிய இரண்டிற்கும் திருமந்திரம் விளக்கம் தருகிறது. இது சைவ ஆகமம் என்றும் போற்றப்படுகிறது. திருமந்திரம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாக பெரியோர்களால் வைக்கப்பட்டுள்ளது. தோத்திரத்திற்குத் திருவாசகம் சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.
திருமந்திரத்தின் முதலாவதாக வைக்கப்பட்டுள்ள ‘கடவுள் வாழ்த்து‘ என்பதன் முதலாவது பாட்டுப் பின்வருமாறு அமைந்துள்ளது;
ஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள்,
நின்றனன் மூன்றினுள், நான்கு உணர்ந்தான், ஐந்து
வென்றனன், ஆறு விரித்தனன், ஏழும்பர்ச்
சென்றனன், தான் இருந்தான் உணர்ந்து எட்டே
திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது. இதனால், பல பாட்டுக்களில் கூறப்பட்டிருப்பவைக்கு, வேறுபட்ட, முரண்பட்ட கருத்துக்கள் கொடுக்கப்பட்ட நிலைதான் காணப்படுகிறது.[2]
No comments:
Post a Comment