Friday, 20 October 2017

ஐந்தனை எமுபது

ஐந்தினை எழுபது


ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந் நூல் அமைந்துள்ளதால், ஐந்திணை எழுபது என பெயர் பெற்றது.இந் நூலை அருளியவர் மூவாதியார். கடவுள் வாழ்த்துஎண்ணும் பொருளினிதே எல்லாம் முடித்தெமக்குநண்ணுங் கலையனைத்தும் நல்குமால் - கண்ணுதலின்முண்டத்தான் அண்டத்தான் மூலத்தான் நலஞ்சேர்கண்டத்தான் ஈன்ற களிறு. நூல்1. குறிஞ்சிஅவரை பொருந்திய பைங்குரல் ஏனல்கவரி கடமா கதூஉம் படர்சாரல்கானக நாட! மறவல் வயங்கிழைக்(கு)யானிடை நின்ற புணை. 1மன்றத் துறுகல் கருங்கண முசுஉகளும்குன்றன நாடன் தெளித்த தெளிவினைநன்றென்று தேறித் தெளிந்தேன் தலையளிஒன்றுமற்(று) ஒன்றும் அனைத்து. 2மன்றப் பலவின் களைவிளை தீம்பழம்உண்டுவந்து மந்தி முலைவருடக் - கன்றமர்ந்(து)ஆமா சுரக்கும் அணிமலை நாடனையாமாப் பிரிவ(து) இலம். 3சான்றவர் கேண்மை சிதைவின்றாய் ஊன்றிவலியாகிப் பின்னும் பயக்கும் மெலிவில்கயந்திகழ் சோலை மலைநாடன் கேண்மைநயந்திகழும் என்னும்என் நெஞ்சு. 4பொன்னிணர் வேங்கை கமழும் நளிசோலைநன்மலை நாட! மறவல் வயங்கிழைக்குநின்னல(து) இல்லையால் ஈயாயோ கண்ணோட்டத்(து)இன்னுயிர் தாங்கும் மருந்து. 5காய்ந்தீயல் அன்னை! இவளோ தவறிலள்ஓங்கிய செந்நீர் இழிதரும் கான்யாற்றுள்தேன்கலந்து வந்த அருவி முடைந்தாடத்தாம்சிவப் புற்றன கண். 6வெறிகமழ் தண்சுனைத் தண்ணீர் துளும்பக்கறிவளர் தேமா நறுங்கணி வீழும்வெறிகமழ் தண்சோலை நாட! ஒன்(று) உண்டோஅறிவின்கண் நின்ற மடம். 7கேழல் உழுத கரிபுனக் கொல்லையுள்வாழை முதுகாய் கடுவன் புதைத்தயரும்தாழருவி நாடன் தெளிகொடுத்தான் என்தோழிநேர்வனை நெஞ்(சு) ஊன்று கோல். 8பெருங்கை இருங்களிறு ஐவனம் மாந்திக்கருங்கால் மராம்பொழில் பாசடைத் துஞ்சும்சுரும்(பு)இமிர் சோலை மலைநாடன் கேண்மைபொருந்தினார்க்கு |ஏமாப்(பு) உடைத்து. 9குறையொன்(று) உடையேன்மன் தோழி நிறையில்லாமன்னுயிர்க்(கு) ஏமம் செயல்வேண்டும் இன்னேஅராவழங்கு நீள்சோலை நாடனை நம்மில்இராவாரல் என்ப(து) உரை. 10பிரைசங் கொளவீழ்ந்த தீந்தேன் இறாஅல்மரையான் குழவி குளம்பில் துகைக்கும்வரையக நாட! வரையால் வரின்எம்நிரைதொடி வாழ்தல் இவள். 11வார்குரல் ஏனல் வளைலாயக் கிளைகவரும்நீரால் தெளிதிகழ் காநாடன் கேண்மையேஆர்வத்தின் ஆர முயங்கினேன் வேலனும்ஈர வலித்தான் மறி. 12இலையடர் தண்குளவி ஏய்ந்த பொதும்பில்குலையுடைக் காந்தள் இனவண்(டு) இமிரும்வரையக நாடனும் வந்தான்மற்(று) அன்னைஅலையும் அலைபோயிற்(று) இன்று. 13கொல்லைப் புனத்த அகில்சுமந்து கல்பாய்ந்துவானின் அருவி ததும்பக் கவினியநாடன் நயமுடையன் என்பதனால் நீப்பினும்வாடல் மறந்தன தோள். 142. முல்லைசெங்கதிர்ச் செல்வன் சினங்கரந்த போழ்தினால்பைங்கொடி முல்லை மணங்கமழ -வண்(டு)இமிரக்காரோ(டு) அலமரும் கார்வானம் காண்தொறும்நீரோ(டு) அலமரும் கண். 15தடமென் பணைத்தோளி! நீத்தாரோ வாரார்மடநடை மஞ்ஞை அகவக் - கடல்முகந்துமின்னோடு வந்த(து) எழில்வானம் வந்தென்னைஎன்னாதி என்பாரும் இல். 16தண்ணுறங் கோடல் துடுப்பெடுப்பக் காரெதிரிவிண்ணுயர் வானத்(து) உரும்உரற்றத் - திண்ணிதின்புல்லுநர் இல்லார் நடுங்கச் சிறுமாலைகொல்லுநர் போல வரும். 17கதழுறை வானம் சிதற இதழ்அகத்துத்தாதிணர்க் கொன்றை எரிவளர்ப்பப் பாஅஇடிப்பது போலும் எழில்வானம் நோக்கித்துடிப்பது போலும் உயிர். 18ஆலி விருப்புற்(று) அகவிப் புறவெல்லாம்பீவி பரப்பி மயில்ஆலச் - சூலிவிரிகுவது போலும்இக் கார்அதிர ஆவிஉருகுவது போலும் எனக்கு. 19இனத்த வருங்கலை பொங்கப் புனத்தகொடிமயங்கு முல்லை தளிர்ப்ப இடிமயங்கியானும் அவரும் வருந்தச் சிறுமாலைதானும் புயலும் வரும். 20காரிகை வாடத் துறந்தாரும் வாராமுன்கார்கொடி முல்லை எயிறீனக் - காரோ(டு)உடன்பட்டு வந்தலைக்கும் மாலைக்கோ எம்மின்மடம்பட்டு வாழ்கிற்பார் இல். 21கொன்றைக் குழலூதிக் கோவலர் பின்னுரைத்துக்கன்றமர் ஆயம் புகுதா - இன்றுவழங்கிய வந்தன்று மாலையாம் காணமுழங்கிவில் கோலிற்று வான். 22தேரைத் தழங்குகுரல் தார்மணி வாயதிர்ப்பஆர்கலி வானம் பெயல்தொடங்கிக் - கார்கொளஇன்(று)ஆற்ற வாரா விடுவார்கொல் காதலர்ஒன்றாலும் நில்லா வளை. 23கல்லேர் புறவின் கவினிப் புதன்மிசைமுல்லை தளவொடு போதவிழ - எல்லிஅலை(வு)அற்று விட்டன்று வானமும் உன்கண்முலைவற்று விட்டன்று நீர். 2425, 26 - இரண்டு பாடல்கள் மறைந்தவைகார்ப்புடைப் பாண்டில் கமழப் புறவெல்லாம்ஆர்ப்போ(டு) இனவண்(டு) இமிர்ந்தாட - நீர்த்தின்றிஒன்றா(து) அலைக்கும் சிறுமாலை மாறுழந்துநின்றாக நின்றது நீர். 27குருந்தலை வான்படலை சூடிச் சுரும்பார்ப்பஆயன் புகுதரும் போழ்தினான் ஆயிழாய்!பின்னொடு நின்று பெயரும் படுமழைகொலஎன்னொடு பட்ட வகை. 283. பாலைபொறிகிளர் சேவல் வரிமரல் குத்தநெறிதூர் அருஞ்சுரம்நரம் உன்னி - அறிவிட்(டு)அலர்மொழி சென்ற கொடியக நாட்டவலனுயர்ந்து தோன்றும் மலை. 29ஒல்லோம்என்(று) ஏங்கி உயங்கி இருப்பாளோகல்லிவர் அத்தம் அரிபெய் சிலம்(பு)ஒலிப்பக்கொல்களி(று) அன்னான்பின் செல்லுங்கொல் என

No comments:

Post a Comment