வாழ்வியல் சிந்தனைகள்
முனைவர் மு. பழனியப்பன்
முதுமொழிக் காஞ்சி
முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. 'மூதுரை, முதுசொல்' என்பனவும் இப் பொருள் தருவன. காஞ்சி என்பது பல்வேறு நிலையாமைகளைக் குறித்தது என்பர் தொல்காப்பியர். மேலும், முதுசொல் (தொல். பொருள். 385), முதுமொழி(தொல். பொருள். 467, 468, 480), முதுமை (தொல்.பொருள். 77) என்பவற்றிற்கு அவர்தரும் விளக்கத்திற்கும் 'முதுமொழிக் காஞ்சி' நூற் பொருளுக்கும் தொடர்பு ஒன்றும் இல்லை. ஆயினும், தொல்காப்பியரது சூத்திரக் கருத்தையும் முதுகாஞ்சிபற்றி நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் எழுதியஉரைக் கருத்துகளையும் ஒட்டியே திவாகர நிகண்டில் முதுமொழிக் காஞ்சிக்கு விளக்கம் தரப்படுகிறது.
கழிந்தோர் ஏனை ஒழிந்தோர்க்குக் காட்டிய
முதுமை ஆகும் முதுமொழிக்காஞ்சி (X. 107)
என்பது திவாகரம். இவ் விளக்கம் முதுமொழிக்காஞ்சி நூலுள் பொதிந்த பொருளைத் தெளிவாக உணர்த்தவில்லை.
புறப்பொருள் வெண்பாமாலையில்'முதுமொழிக் காஞ்சி' என்று ஒரு துறை அமைந்துள்ளது. இதனை, 'மூதுரை பொருந்திய முதுமொழிக் காஞ்சி' என்றுதொகைச் சூத்திரத்தில் சுட்டியதோடு, பின்னர்,
பலர் புகழ் புலவர் பன்னினர் தெரியும்
உலகியல் பொருள் முடிவு உணரக் கூறின்று
என்று விளக்கியும் ஆசிரியர் உரைத்துள்ளார். உலகியல் உண்மைகளைத் தெள்ளத் தெளிந்த புலவர்பெருமக்கள் எடுத்து இயம்புவது என்னும் இலக்கணம் 'முதுமொழிக்காஞ்சி' என்னும் நூற்பொருளுக்குப் பொருந்துவதாகும்.
முதுமொழிக் காஞ்சித் துறை பற்றிப் புறநானூற்றில் ஐந்து பாடல்கள் உள்ளன (18, 27, 28, 29,74). இந்நூலின் உரைகாரர் புறப்பொருள் வெண்பாமாலையைப் பின்பற்றியே துறைக்குறிப்பும் விளக்கமும் (18, 74,உரை) தந்துள்ளார். இவர் தரும் விளக்கமும் முதுமொழிக் காஞ்சியின் இயல்போடு பொருந்தும்.
காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும் குறிக்கும். பலமணிகள் கோத்த காஞ்சி அணி போல முதுமொழிகள் பல கோத்தநூல் முதுமொழிக் காஞ்சி எனப் பெயர் பெற்றது என்று கருதுவாரும் உண்டு. அங்ஙனம் கொள்ளின், முதுமொழிக் காஞ்சி என்பது அறிவுரைக் கோவை என்னும் பொருள் பயந்து நிற்கும்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைத் தொகுத்து உரைக்கும் வெண்பாவில் 'காஞ்சி' என்னும் பெயரே காண்கிறது . இதில் குறித்த காஞ்சி முதுமொழிக்காஞ்சி என்பதே சான்றோர் கொள்கை. 'இன்னிலையகாஞ்சி' என்று அடைமொழி கொடுத்து இப்பாடல் உரைப்பது, நூலின் தெளிவு முதலியன கருதிப் போலும்!
முனைவர் மு.பழனியப்பன்
இணைப்பேராசிரியர், மற்றும் தமிழ்த்துறைத்தலைவர்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூர
திருவாடானை
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று முதுமொழிக்காஞ்சி என்னும்ஆகும். இந்நீதி நூல் ஒற்றை அடியால் உலக நீதிகளை எடுத்துரைக்கின்றது, இதன் யாப்பினைக் குறள் வெண் செந்துறை சா்ந்தது என்பர் இலக்கண ஆசிரியர்கள்.
முதுமொழி என்றால் பழமொழி என்று பொருள். காஞ்சி என்றால் அது திணையையும் குறிக்கலாம். அது மகளிர் அணியும் ஒருவகை அணியையும் குறிக்கலாம். காஞ்சித்திணை – தொல்காப்பியர் காலத்தில் நிலையாமை பற்றி வந்த புறத்திணையாகும். தொல்காப்பியத்தின் பிற்கால எல்லையில் தோன்றிய இந்நூலும் காஞ்சியை நிலையாமையை உரைப்பதாகவே கொண்டு அறம் உரைத்துள்ளது. காஞ்சி என்றால் பெண்கள் இடையில் அணியும் ஒருவகை அணிகலனாகும். பல மணிகள் கோர்த்து அவ்வணிகலன் செய்யப்படுவதைப்போல இந்நூலும் ஒரு நூறு மணிகளைக் கோர்த்துப் பாடப்பெற்றுள்ளது, இதனை இயற்றியவர் மதுரைக் கூடலூர்க் கிழார் ஆவார். கூடலூர்க் கிழார் என்ற பெயரில் இரு புலவர்கள் சங்ககாலத்தில் இருந்துள்ளனர். ஒருவர் இவர். மற்றொருவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் ஆவார். பின்னவரை விட இவர் வேறானவர். கூடலூரில் இருந்துப் பின்னர் மதுரைக்கு இடம்பெயர்ந்ததன் காரணமாக இவர் மதுரைக் கூடலூர்க் கிழார் எனப்பெற்றுள்ளார். ஒரு தலைப்பின் கீழ்ப் பத்துப்பாடல்கள் என்ற அமைப்பி்ல் நூறு பாடல்களால் செய்யப்பெற்றுள்ளது இந்நூல்.
வாழ்வியல் அறங்களை உரைக்கும் முதுமொழிக்காஞ்சி எளிமையான சொற்களால் உயர்வான இரு அறங்களை ஒற்றை அடியில் காட்டி, ஓர் அறத்தைவிட மற்றது மேம்பட்டது என்ற அமைப்பில் அறங்களின் பெருமைகளை எடுத்துக்காட்டுகின்றது,. இவ்வகையில் பல்வகை அறமுறைக்கும் முக்கியமான நூல் முதுமொழிக்காஞ்சியாகின்றது. இம்முதுமொழிக்காஞ்சி தான் எழுந்த காலத்திற்குத் தேவையான வாழ்வியல் அறங்களை எடுத்தியம்பியுள்ளது என்றாலும் அவ்வறங்கள் இன்றைய வாழ்க்கைக்கும் பொருந்துவனவாக உள்ளன என்பது கருதத்தக்கது. இன்றைய வாழ்வின் பல சிக்கல்களுக்கு முதுமொழிக்காஞ்சியின் அறநெறிகள் விடை காட்டுகின்றன.
வாழ்க்கையை நெறிப்பட வாழும் இனிய நடைமுறை வாழ்வியல் எனக்கொள்ளலாம். மனித வாழ்வியலை இல்லறம், துறவறம் என இருவகையாகப் பிரிக்கலாம். இல்லறவாதிகளுக்கும், துறவிகளுக்கும் தனித்தனியாக வாழும் முறைகள் இலக்கியங்களால் வகுக்கப்பெற்றுள்ளன. இந்நூலில் இல்லற வாழ்வு சிறக்க நன்னெறிகளைத் தொகுத்து மதுரைக் கூடலூர்க் கிழார் உரைக்கின்றார். தமக்கென வாழாமல் பிறர்க்குரிமையாக வாழ்வது என்பது மனித வாழ்வின் வெற்றியாகும். துறவற நெறிகள் இவ்விலக்கியத்தில் தவ நெறிகளாகக் காட்டப்பெற்றுள்ளன.
‘‘ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்’’ (திருக்குறள். 214)
என்று வள்ளுவர் ஒத்துவாழும் வாழ்க்கையே சிறப்பானது என்கிறார். அப்படி ஒத்திசைந்து வாழாதவர்கள் இறந்தவர்கள் என்று குறிப்பிடுகின்றார். எனவே வாழ்க்கை என்பது தானும் பழிப்பில்லாமல் வாழ்ந்து, தன்னைச் சார்ந்தவர்களையும் வளர்த்து, தன் சமுதாயத்தையும் வளர்க்கும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகக் கருதப்படும். அதற்கான நெறிகள் பற்பல நூல்களில் சொல்லப்பெற்றுள்ளன. முதுமொழிக்காஞ்சியில் சொல்லப்பெற்றுள்ள வாழ்வியல் சிந்தனைகளை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.
முதுமொழிக் காஞ்சியும் வாழ்வியல் சிந்தனைகள்
‘‘வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்’’ (தண்டாப்பத்து, 5) என்று வாழ்க்கைக்கு இலக்கணம் வகுக்கின்றது முதுமொழிக்காஞ்சி. இதற்கு உரை வரைந்த உரையாசிரியர்கள் சூழ்ச்சி என்பதற்கு ஆராய்ச்சி என்று பொருள் எழுதுகிறார்கள். வாழ்வில் செல்வாக்கு வேண்டுபவன் தன் செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும் என்பதுதான் இவ்வடிக்குச் சொல்லப்பெற்ற பொருளாகும். சூழ்ச்சி என்பதற்குக் கழகத்தமிழ் அகராதி உபாயம். தந்திரம் என்றும் சில பொருள்களைத் தருகின்றது. (ப.483) தண்டான் என்பதற்கு நீங்கான் என்பது அவ்வகராதி தரும் பொருளாகும். இவ்விரு சொற்களையும் இணைத்துப் பொருள் ்கொள்வதானால் வாழ்வில் வெற்றி பெற எண்ணுபவன் தன் செய்ல்களை ஆராய்ந்துச் செய்யவேண்டும் என்று பொருள் கொள்ளலாம்.
‘வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று’’ (அல்ல பத்து,7) என்று தான் வாழாமல் வருந்தி தான் சேர்த்துவைத்தப் பொருளைச் செலவழிக்காமல் வரு்ந்தி வாழும் வாழ்க்கை வாழ்க்கையாகாது. எனவே திருப்தி மிக்க வாழ்க்கை என்பது தானும் வாழ்ந்துத் தனக்கு உரியவர்களும் வாழ தன் பொருளைச் செலவழிப்பது என்பதுதான்.
இவ்வாறு வாழ்க்கை பற்றிய நேரடி வரையறைகள் முதுமொழிக் காஞ்சியில் இடம்பெற்றுள்ளன. இவ்வகையில் முதுமொழிக் காஞ்சி மனிதவாழ்வியலுக்கு வழிகாட்டும் நூல் என்பதில் ஐயமில்லை.
முதுமொழிக்காஞ்சியின் வாழ்வியல் சிந்தனைகளைத் தனிமனித வாழ்வியல் சிந்தனைகள், குடும்பம் வாழ்வியல் பற்றிய சிந
முனைவர் மு. பழனியப்பன்
முதுமொழிக் காஞ்சி
முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. 'மூதுரை, முதுசொல்' என்பனவும் இப் பொருள் தருவன. காஞ்சி என்பது பல்வேறு நிலையாமைகளைக் குறித்தது என்பர் தொல்காப்பியர். மேலும், முதுசொல் (தொல். பொருள். 385), முதுமொழி(தொல். பொருள். 467, 468, 480), முதுமை (தொல்.பொருள். 77) என்பவற்றிற்கு அவர்தரும் விளக்கத்திற்கும் 'முதுமொழிக் காஞ்சி' நூற் பொருளுக்கும் தொடர்பு ஒன்றும் இல்லை. ஆயினும், தொல்காப்பியரது சூத்திரக் கருத்தையும் முதுகாஞ்சிபற்றி நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் எழுதியஉரைக் கருத்துகளையும் ஒட்டியே திவாகர நிகண்டில் முதுமொழிக் காஞ்சிக்கு விளக்கம் தரப்படுகிறது.
கழிந்தோர் ஏனை ஒழிந்தோர்க்குக் காட்டிய
முதுமை ஆகும் முதுமொழிக்காஞ்சி (X. 107)
என்பது திவாகரம். இவ் விளக்கம் முதுமொழிக்காஞ்சி நூலுள் பொதிந்த பொருளைத் தெளிவாக உணர்த்தவில்லை.
புறப்பொருள் வெண்பாமாலையில்'முதுமொழிக் காஞ்சி' என்று ஒரு துறை அமைந்துள்ளது. இதனை, 'மூதுரை பொருந்திய முதுமொழிக் காஞ்சி' என்றுதொகைச் சூத்திரத்தில் சுட்டியதோடு, பின்னர்,
பலர் புகழ் புலவர் பன்னினர் தெரியும்
உலகியல் பொருள் முடிவு உணரக் கூறின்று
என்று விளக்கியும் ஆசிரியர் உரைத்துள்ளார். உலகியல் உண்மைகளைத் தெள்ளத் தெளிந்த புலவர்பெருமக்கள் எடுத்து இயம்புவது என்னும் இலக்கணம் 'முதுமொழிக்காஞ்சி' என்னும் நூற்பொருளுக்குப் பொருந்துவதாகும்.
முதுமொழிக் காஞ்சித் துறை பற்றிப் புறநானூற்றில் ஐந்து பாடல்கள் உள்ளன (18, 27, 28, 29,74). இந்நூலின் உரைகாரர் புறப்பொருள் வெண்பாமாலையைப் பின்பற்றியே துறைக்குறிப்பும் விளக்கமும் (18, 74,உரை) தந்துள்ளார். இவர் தரும் விளக்கமும் முதுமொழிக் காஞ்சியின் இயல்போடு பொருந்தும்.
காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும் குறிக்கும். பலமணிகள் கோத்த காஞ்சி அணி போல முதுமொழிகள் பல கோத்தநூல் முதுமொழிக் காஞ்சி எனப் பெயர் பெற்றது என்று கருதுவாரும் உண்டு. அங்ஙனம் கொள்ளின், முதுமொழிக் காஞ்சி என்பது அறிவுரைக் கோவை என்னும் பொருள் பயந்து நிற்கும்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைத் தொகுத்து உரைக்கும் வெண்பாவில் 'காஞ்சி' என்னும் பெயரே காண்கிறது . இதில் குறித்த காஞ்சி முதுமொழிக்காஞ்சி என்பதே சான்றோர் கொள்கை. 'இன்னிலையகாஞ்சி' என்று அடைமொழி கொடுத்து இப்பாடல் உரைப்பது, நூலின் தெளிவு முதலியன கருதிப் போலும்!
முனைவர் மு.பழனியப்பன்
இணைப்பேராசிரியர், மற்றும் தமிழ்த்துறைத்தலைவர்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூர
திருவாடானை
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று முதுமொழிக்காஞ்சி என்னும்ஆகும். இந்நீதி நூல் ஒற்றை அடியால் உலக நீதிகளை எடுத்துரைக்கின்றது, இதன் யாப்பினைக் குறள் வெண் செந்துறை சா்ந்தது என்பர் இலக்கண ஆசிரியர்கள்.
முதுமொழி என்றால் பழமொழி என்று பொருள். காஞ்சி என்றால் அது திணையையும் குறிக்கலாம். அது மகளிர் அணியும் ஒருவகை அணியையும் குறிக்கலாம். காஞ்சித்திணை – தொல்காப்பியர் காலத்தில் நிலையாமை பற்றி வந்த புறத்திணையாகும். தொல்காப்பியத்தின் பிற்கால எல்லையில் தோன்றிய இந்நூலும் காஞ்சியை நிலையாமையை உரைப்பதாகவே கொண்டு அறம் உரைத்துள்ளது. காஞ்சி என்றால் பெண்கள் இடையில் அணியும் ஒருவகை அணிகலனாகும். பல மணிகள் கோர்த்து அவ்வணிகலன் செய்யப்படுவதைப்போல இந்நூலும் ஒரு நூறு மணிகளைக் கோர்த்துப் பாடப்பெற்றுள்ளது, இதனை இயற்றியவர் மதுரைக் கூடலூர்க் கிழார் ஆவார். கூடலூர்க் கிழார் என்ற பெயரில் இரு புலவர்கள் சங்ககாலத்தில் இருந்துள்ளனர். ஒருவர் இவர். மற்றொருவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் ஆவார். பின்னவரை விட இவர் வேறானவர். கூடலூரில் இருந்துப் பின்னர் மதுரைக்கு இடம்பெயர்ந்ததன் காரணமாக இவர் மதுரைக் கூடலூர்க் கிழார் எனப்பெற்றுள்ளார். ஒரு தலைப்பின் கீழ்ப் பத்துப்பாடல்கள் என்ற அமைப்பி்ல் நூறு பாடல்களால் செய்யப்பெற்றுள்ளது இந்நூல்.
வாழ்வியல் அறங்களை உரைக்கும் முதுமொழிக்காஞ்சி எளிமையான சொற்களால் உயர்வான இரு அறங்களை ஒற்றை அடியில் காட்டி, ஓர் அறத்தைவிட மற்றது மேம்பட்டது என்ற அமைப்பில் அறங்களின் பெருமைகளை எடுத்துக்காட்டுகின்றது,. இவ்வகையில் பல்வகை அறமுறைக்கும் முக்கியமான நூல் முதுமொழிக்காஞ்சியாகின்றது. இம்முதுமொழிக்காஞ்சி தான் எழுந்த காலத்திற்குத் தேவையான வாழ்வியல் அறங்களை எடுத்தியம்பியுள்ளது என்றாலும் அவ்வறங்கள் இன்றைய வாழ்க்கைக்கும் பொருந்துவனவாக உள்ளன என்பது கருதத்தக்கது. இன்றைய வாழ்வின் பல சிக்கல்களுக்கு முதுமொழிக்காஞ்சியின் அறநெறிகள் விடை காட்டுகின்றன.
வாழ்க்கையை நெறிப்பட வாழும் இனிய நடைமுறை வாழ்வியல் எனக்கொள்ளலாம். மனித வாழ்வியலை இல்லறம், துறவறம் என இருவகையாகப் பிரிக்கலாம். இல்லறவாதிகளுக்கும், துறவிகளுக்கும் தனித்தனியாக வாழும் முறைகள் இலக்கியங்களால் வகுக்கப்பெற்றுள்ளன. இந்நூலில் இல்லற வாழ்வு சிறக்க நன்னெறிகளைத் தொகுத்து மதுரைக் கூடலூர்க் கிழார் உரைக்கின்றார். தமக்கென வாழாமல் பிறர்க்குரிமையாக வாழ்வது என்பது மனித வாழ்வின் வெற்றியாகும். துறவற நெறிகள் இவ்விலக்கியத்தில் தவ நெறிகளாகக் காட்டப்பெற்றுள்ளன.
‘‘ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்’’ (திருக்குறள். 214)
என்று வள்ளுவர் ஒத்துவாழும் வாழ்க்கையே சிறப்பானது என்கிறார். அப்படி ஒத்திசைந்து வாழாதவர்கள் இறந்தவர்கள் என்று குறிப்பிடுகின்றார். எனவே வாழ்க்கை என்பது தானும் பழிப்பில்லாமல் வாழ்ந்து, தன்னைச் சார்ந்தவர்களையும் வளர்த்து, தன் சமுதாயத்தையும் வளர்க்கும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகக் கருதப்படும். அதற்கான நெறிகள் பற்பல நூல்களில் சொல்லப்பெற்றுள்ளன. முதுமொழிக்காஞ்சியில் சொல்லப்பெற்றுள்ள வாழ்வியல் சிந்தனைகளை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.
முதுமொழிக் காஞ்சியும் வாழ்வியல் சிந்தனைகள்
‘‘வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்’’ (தண்டாப்பத்து, 5) என்று வாழ்க்கைக்கு இலக்கணம் வகுக்கின்றது முதுமொழிக்காஞ்சி. இதற்கு உரை வரைந்த உரையாசிரியர்கள் சூழ்ச்சி என்பதற்கு ஆராய்ச்சி என்று பொருள் எழுதுகிறார்கள். வாழ்வில் செல்வாக்கு வேண்டுபவன் தன் செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும் என்பதுதான் இவ்வடிக்குச் சொல்லப்பெற்ற பொருளாகும். சூழ்ச்சி என்பதற்குக் கழகத்தமிழ் அகராதி உபாயம். தந்திரம் என்றும் சில பொருள்களைத் தருகின்றது. (ப.483) தண்டான் என்பதற்கு நீங்கான் என்பது அவ்வகராதி தரும் பொருளாகும். இவ்விரு சொற்களையும் இணைத்துப் பொருள் ்கொள்வதானால் வாழ்வில் வெற்றி பெற எண்ணுபவன் தன் செய்ல்களை ஆராய்ந்துச் செய்யவேண்டும் என்று பொருள் கொள்ளலாம்.
‘வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று’’ (அல்ல பத்து,7) என்று தான் வாழாமல் வருந்தி தான் சேர்த்துவைத்தப் பொருளைச் செலவழிக்காமல் வரு்ந்தி வாழும் வாழ்க்கை வாழ்க்கையாகாது. எனவே திருப்தி மிக்க வாழ்க்கை என்பது தானும் வாழ்ந்துத் தனக்கு உரியவர்களும் வாழ தன் பொருளைச் செலவழிப்பது என்பதுதான்.
இவ்வாறு வாழ்க்கை பற்றிய நேரடி வரையறைகள் முதுமொழிக் காஞ்சியில் இடம்பெற்றுள்ளன. இவ்வகையில் முதுமொழிக் காஞ்சி மனிதவாழ்வியலுக்கு வழிகாட்டும் நூல் என்பதில் ஐயமில்லை.
முதுமொழிக்காஞ்சியின் வாழ்வியல் சிந்தனைகளைத் தனிமனித வாழ்வியல் சிந்தனைகள், குடும்பம் வாழ்வியல் பற்றிய சிந
No comments:
Post a Comment